பாட்டும் பதமும் பகுதி 10
நேற்றுவரை நீயாரோ நான் யாரோ? பேசாலைதாஸ்
உலகத்தில் இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து தோன்றும் உணர்வு தான் "காதல்" என்ற உணர்வே. முன் பின் தெரியாத ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது, தம் உணர்வுகளிற்குள் இனம் புரியாத பற்றுப் பாசம் பின்னிப் பிணைந்து; ஒரு வித துடிப்பு ஏற்படுகிறது! இந்தத் துடிப்பு முன் பின் உணராத
துடிப்பாகவும், புதுமையான தாகவும் ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் இவர்கள் எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்திருப்பார்கள். இருப்பினும் இந்த உணர்வுகள்
சந்தித்துக் கொள்கிறது. ஒன்றை ஒன்று கவ்வியும் கொள்கிறது. சங்ககால குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது:.............
"யாயும், ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளீர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே"
"நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நானும் நீயும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து, அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது போல்; நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்து விட்டதே"
என்கின்றான் அந்த காதல் தலைவன். இது உலகியல்."காதல்" உயிர் வாழும் எல்லா இனங்களிற்கும் இருந்து விடுகிறது. " காதல்,
காதல், காதல்! காதல் போயிற் சாதல், சாதல்"...என்றான் பாரதி.
காதல் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம். இலக்கியங்கள் யாவும் மனித வாழ்வைப் பின்னிப் பிணைத்துக் காட்டுகின்றன. சங்க கால இலக்கியங்களில் எங்கு பார்க்கும் போதும் காதல்தான்
நிறைந்திருக்கின்றன. சங்க கால இலக்கியத்தை எளிமைப்படுத்தி இலகு தமிழில் எடுத்து வருகின்றன அநேகமான திரை இசைப் பாடல்கள். பாமரரும் புரியும்படி கவி கொடுத்த, பாரதி வழிவந்த கண்ணதாசனும் பல திரை இசைப் பாடல்களில் இணைத்திருக்கிறார். அந்த வகையில் இந்தக் குறுந்தொகைப் பாடலை கண்ணதாசன் இப்படிக் கொடுத்திருக்கிறார்.
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.
என்று "வாழ்க்கைப் படகு" படத்தில் இலக்கியக் காதலைப் புகுத்தியிருக்கிறார். அதே வேளை இந்தப் பாடலில் கண்ணதாசன் வள்ளுவனின் குறள் தரும் இலக்கியத்தையும் இணைத்திருக்கிறார் இப்படி:............
"யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
என்றான் வள்ளுவன். காதலிற்கு மெருகூட்டுவது "நாணம்" என்ற பொருளாகும். காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் பேசிக் கொள்ளும் போது, ஆணானவன் நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்துப் பேசிக் கொள்வான். ஆனால் பெண்ணானவள் ஆண் தன்னைப் பார்க்கும் போது நிலம் பார்த்து காலால் கோலம் போட்டு கொள்வாள். அதேவேளை ஆண் தன்னைப் பாராத நேரம், அவனைப் பார்த்து சந்தோஷித்துக்
கொள்வாள். இது காதலில் பெண்மையின் சிறப்பு. அவள் நாணுவதில் காதலில் பெருமை பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதுவே ஒரு பெண்மைக்கும் சிறப்பு என்கிறான் வள்ளுவன். இதையே கண்ணதாசன் இந்தப் பாடலில் இப்படிக் கூறுகிறார்.
"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !
என்று மிகவும் அழகாகவும், நல்ல நயத்துடனும் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார்.
நேற்றுவரை நீயாரோ நான் யாரோ? பேசாலைதாஸ்
உலகத்தில் இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து தோன்றும் உணர்வு தான் "காதல்" என்ற உணர்வே. முன் பின் தெரியாத ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது, தம் உணர்வுகளிற்குள் இனம் புரியாத பற்றுப் பாசம் பின்னிப் பிணைந்து; ஒரு வித துடிப்பு ஏற்படுகிறது! இந்தத் துடிப்பு முன் பின் உணராத
துடிப்பாகவும், புதுமையான தாகவும் ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் இவர்கள் எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்திருப்பார்கள். இருப்பினும் இந்த உணர்வுகள்
சந்தித்துக் கொள்கிறது. ஒன்றை ஒன்று கவ்வியும் கொள்கிறது. சங்ககால குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது:.............
"யாயும், ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளீர்!
யானும் நீயும் எவ்வழி அறிந்தும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே"
"நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நானும் நீயும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து, அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது போல்; நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்து விட்டதே"
என்கின்றான் அந்த காதல் தலைவன். இது உலகியல்."காதல்" உயிர் வாழும் எல்லா இனங்களிற்கும் இருந்து விடுகிறது. " காதல்,
காதல், காதல்! காதல் போயிற் சாதல், சாதல்"...என்றான் பாரதி.
காதல் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம். இலக்கியங்கள் யாவும் மனித வாழ்வைப் பின்னிப் பிணைத்துக் காட்டுகின்றன. சங்க கால இலக்கியங்களில் எங்கு பார்க்கும் போதும் காதல்தான்
நிறைந்திருக்கின்றன. சங்க கால இலக்கியத்தை எளிமைப்படுத்தி இலகு தமிழில் எடுத்து வருகின்றன அநேகமான திரை இசைப் பாடல்கள். பாமரரும் புரியும்படி கவி கொடுத்த, பாரதி வழிவந்த கண்ணதாசனும் பல திரை இசைப் பாடல்களில் இணைத்திருக்கிறார். அந்த வகையில் இந்தக் குறுந்தொகைப் பாடலை கண்ணதாசன் இப்படிக் கொடுத்திருக்கிறார்.
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே.
என்று "வாழ்க்கைப் படகு" படத்தில் இலக்கியக் காதலைப் புகுத்தியிருக்கிறார். அதே வேளை இந்தப் பாடலில் கண்ணதாசன் வள்ளுவனின் குறள் தரும் இலக்கியத்தையும் இணைத்திருக்கிறார் இப்படி:............
"யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால்
தான் நோக்கி மெல்ல நகும்.
என்றான் வள்ளுவன். காதலிற்கு மெருகூட்டுவது "நாணம்" என்ற பொருளாகும். காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் பேசிக் கொள்ளும் போது, ஆணானவன் நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்துப் பேசிக் கொள்வான். ஆனால் பெண்ணானவள் ஆண் தன்னைப் பார்க்கும் போது நிலம் பார்த்து காலால் கோலம் போட்டு கொள்வாள். அதேவேளை ஆண் தன்னைப் பாராத நேரம், அவனைப் பார்த்து சந்தோஷித்துக்
கொள்வாள். இது காதலில் பெண்மையின் சிறப்பு. அவள் நாணுவதில் காதலில் பெருமை பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதுவே ஒரு பெண்மைக்கும் சிறப்பு என்கிறான் வள்ளுவன். இதையே கண்ணதாசன் இந்தப் பாடலில் இப்படிக் கூறுகிறார்.
"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே !
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே !
என்று மிகவும் அழகாகவும், நல்ல நயத்துடனும் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார்.
நன்று.
பதிலளிநீக்கு