பாட்டும் பதமும் பாகுதி 08
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” பேசாலைதாஸ்
மதுவும் மங்கையும் போதை தருபவை, அது சாதாரண மக்களுக்கானது, கவிதா விலாசம் கொண்டவன், கலாஞக்ஞானம் கொண்டவர்களுக்கு மதுவும் மங்கையும் கவிதையை சுரக்கவைக்கும் தேன் இன்ப பலாச்சுளை, ஒரு கவிஞனை காமுகன் என்று எப்படி சொல்லமுடியும்? அப்படியானால் ஆலிங்கணம் செய்யும் சிவன் காமனா? கங்கைகரையோரம் கோதையருடன் சல்லாபம் செய்யும் கிருஸ்ணன் என்ன காமுகனா? இல்லை கடவுளா? சும்மா உங்களைத்தான் கேட்கின்றேன்!கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த பாடலின் வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள். “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” இந்த பாடல் இடம் பெற்ற படம். ரத்தத்திலகம் இந்த படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி அவனே பாடுகின்றான். . பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாமின் சுவையான வரிகள் இந்த பாடலில் வருகி ன்றது. உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. “கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது தாயின் கருவயிற்றில் குடியிருந்ததைக் குறிக்கும், “கோலமகள் என் துணையிருப்பு” என்பது தாயின் அரவணைப்பை குறிக்கும் பாடலை இங்கே கேளுங்கள்.
கவிஞர் கண்ணதாசன் கவிதைகளும் பாடல்களும் சாகா வரம் பெற்றவை சிரஞ்சிவிதமானவை இத்த னை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதா சன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்க த்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படி யென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?. பாடலை கேளுங்கள் என் இனிய இசைப்பிரியர்களே!
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” பேசாலைதாஸ்
மதுவும் மங்கையும் போதை தருபவை, அது சாதாரண மக்களுக்கானது, கவிதா விலாசம் கொண்டவன், கலாஞக்ஞானம் கொண்டவர்களுக்கு மதுவும் மங்கையும் கவிதையை சுரக்கவைக்கும் தேன் இன்ப பலாச்சுளை, ஒரு கவிஞனை காமுகன் என்று எப்படி சொல்லமுடியும்? அப்படியானால் ஆலிங்கணம் செய்யும் சிவன் காமனா? கங்கைகரையோரம் கோதையருடன் சல்லாபம் செய்யும் கிருஸ்ணன் என்ன காமுகனா? இல்லை கடவுளா? சும்மா உங்களைத்தான் கேட்கின்றேன்!கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த பாடலின் வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள். “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” இந்த பாடல் இடம் பெற்ற படம். ரத்தத்திலகம் இந்த படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி அவனே பாடுகின்றான். . பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாமின் சுவையான வரிகள் இந்த பாடலில் வருகி ன்றது. உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. “கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது தாயின் கருவயிற்றில் குடியிருந்ததைக் குறிக்கும், “கோலமகள் என் துணையிருப்பு” என்பது தாயின் அரவணைப்பை குறிக்கும் பாடலை இங்கே கேளுங்கள்.
கவிஞர் கண்ணதாசன் கவிதைகளும் பாடல்களும் சாகா வரம் பெற்றவை சிரஞ்சிவிதமானவை இத்த னை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதா சன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்க த்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படி யென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?. பாடலை கேளுங்கள் என் இனிய இசைப்பிரியர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக