பூ முடிப்பாள் இந்த பூங்குழலி! பேசாலைதாஸ்
கண்ணதாசானின் இலக்கிய ஆளுமையை அவன் எழுதிய பாடல்க ளில் ஆங்காங்கே விரவி நிற்பதை, இலக்கிய பிரியர்கள் கண்டு வியந்து போற்றுகின்றனர். கண்ணதாசன் மரபுவழியாக, அல்லது முறையாக கல்வி கற்றவர் கிடையாது. ஆனாலும் அவரது இலக்கிய நாட்டம் எத்து ணை விசாலமானது என்பதி அவன் எழுதிய பாடலில்கள் காணலாம். பூ முடிப்பாள் இந்த பூங்குழலி என்ற பாடலில் ஒவ்வொரு சொற்களும், பெண்மையின் உயர்வை போற்றுவதோடு, நிற்காமல், ஒவ்வொரு சொ ற்களும் இரு பரிமாணம், முப்பரிமாணம் பெற்று வருகின்றது, உதார ணமாக பெண்ணை அருவி என்று வர்ணித்து, பின்னார் தேனையும் அதில் இணைத்து, தேனருவி என்று இரட்டை பரிமாணத்துக்கு சென்று, அதுவும் போதாது என்று, வண்ணத்தேன் அருவி என்று முப்பரிமாண த்துக்கு போய் ஒரு பெண்ணை மிக எளிதாக வர்ணிக்க, கண்ணதாச னைவிட யாரால் முடியும் சொல்லுங்கள்? தண்ணீர் கொட்டினால், சப்தம் செய்யும், ஆனால் தேனை கொட்டிப்பாருங்கள் சப்தம் செய்யாமல் வழித்தோடு எந்த சலசலப்பும் இல்லாமல்,. கவிஞன் கண்ணதாசன் பிரயோகிக்கும் ஒவ்வொரு சொல்லும், ஆழம் கொண்டவை மிக எளிய சொற்கள்! நீங்கள் தாகூரின் கவிதைகளில் மதிமயங்கியதுண்டா? தாகூரின் கவிதை இப்படி போகின்றது,,,, "என் கவிதைக்காதலியே! என்னிடம் நீ சரசமாட வருகின்றபோது, உன் அணிகளங்களை கழற்றிவிட்டு வா! அவை எழுப்பும் சப்தம் எனக்கு உவப்பாய் இல்லை!" எந்தவொரு பகட்டும், அலன்காரமும் இல்லாமல் கவிதையை கிக எளிமையாக இரசிக்க பாரத தேச கவிஞன் தாகூரினால் முடிகின்றது, அதுபோலவே கண்ணதாசனும் க்விதைகளை மிக எளிய சொற்களால் வர்ணித்தது எழுதினான், இந்த பாடலை மனம் விட்டு இரசியுங்கள் அப்போது நீங்கள் என்னோடு உடன்படுவீர்கள். அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக