பாட்டும் பதமும் 12
‘என்ன பார்வை உந்தன் பார்வை -இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ பேசாலைதாஸ்
அன்பர்களே நான் கவியரசு கண்ணதாசனை எழுத்துச்சித்தன் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! சொற்களை மிக வித்தையாக பாவிக்கம் உன்னத கலைத்திறமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இதோ!
‘என்ன பார்வை உந்தன் பார்வை -இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற பாடலில், சிறு குசும்புடன் ஓர் இலக்கிய நயம் அமைந்துள்ளது. ‘பார்வை” என்ற வார்த்தையின் இடை எழுத்து - இடையின எழுத்து ‘ர்’ மெலிந்து மறைந்ததால் ‘பாவை’ ஆகிவிட்டது. காதலன் பார்வை பட்டு இடை மெலிந்தாள் பாவை என்பது எப்பேர்ப்பட்ட வார்த்தை ஜாலம்! பாவைக்கும், பார்வைக்கும் ஒரு எழுத்துத்தான் மறைந்துள்ளது. ஆனால் கவிஞன் இங்கு என்ன செய்கின்றான்? காதல் தலைவனின் பார்வை பட்டுத்தான் அந்த "ர்" என்ற எழுத்து மறைந்து காதல் தலைவி மெலிந்து பாவை ஆகிவிட்டாள் என்று சொல்லாமல் சொல்கின்றான் கவிஞன் அப்பாடா என்னே திறமை என் கண்ணதாசனுக்கு? பாடலை உண்ணிப்பாக கவனியுங்கள் இசை உள்ளங்களே!
‘என்ன பார்வை உந்தன் பார்வை -இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ பேசாலைதாஸ்
அன்பர்களே நான் கவியரசு கண்ணதாசனை எழுத்துச்சித்தன் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! சொற்களை மிக வித்தையாக பாவிக்கம் உன்னத கலைத்திறமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இதோ!
‘என்ன பார்வை உந்தன் பார்வை -இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற பாடலில், சிறு குசும்புடன் ஓர் இலக்கிய நயம் அமைந்துள்ளது. ‘பார்வை” என்ற வார்த்தையின் இடை எழுத்து - இடையின எழுத்து ‘ர்’ மெலிந்து மறைந்ததால் ‘பாவை’ ஆகிவிட்டது. காதலன் பார்வை பட்டு இடை மெலிந்தாள் பாவை என்பது எப்பேர்ப்பட்ட வார்த்தை ஜாலம்! பாவைக்கும், பார்வைக்கும் ஒரு எழுத்துத்தான் மறைந்துள்ளது. ஆனால் கவிஞன் இங்கு என்ன செய்கின்றான்? காதல் தலைவனின் பார்வை பட்டுத்தான் அந்த "ர்" என்ற எழுத்து மறைந்து காதல் தலைவி மெலிந்து பாவை ஆகிவிட்டாள் என்று சொல்லாமல் சொல்கின்றான் கவிஞன் அப்பாடா என்னே திறமை என் கண்ணதாசனுக்கு? பாடலை உண்ணிப்பாக கவனியுங்கள் இசை உள்ளங்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக