பாட்டும் பதமும் 18
என்கிருந்தோ ஒரு குரல் வந்தது! பேசாலைதாஸ்
காலத்தால் செய்த உதவி ஞாலத்தில் மானப்பெரிது இது வள்ளுவன் வாக்கு. செய்த உதவிக்கு நன்றியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பாடல். உதவி யாரால் வந்தது என்பது அறியாமல், செய்த உதவிக்கு நன்றியாக இருப்பதை எடுத்துக்காட்டு வதாக இந்த பாடல் அமைகின்றது. இந்த பாடலில் ஒரு வரி வரும் " மாளிகையிலே ஒரு மதி வந்தது, அது எந்த வானத்து நிலவோ" என்று கவிஞர் பாடுவார். நமக்கு தெரிந்த வானம் ஒன்றே! ஆனால் கவிஞனுக்கோ அண்ட சராசரத்திலே ஆயிரம் வானங்கள் இருப்பதை மிக துள்ளியமாக விளக்குகின்றார். இது போல இன்னொரு வரிவரும் " கங்கையிலே புது புனல் வந்தது, அது எந்த மேகம் தந்த புனலோ? மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ" பெண்களிடம் காம உணர்வு வந்துவிட்டாலே, அவர்கள் அனலாக, வெது வெதுப்பாக இருப்பார்கள். அப்படியே இறுக, அணைத்து சுகம் காணும்போது, அனல் இன்னும் அதிகமாக இருக்கும், அந்த அனல் ஆணிடம் இருந்து வருகின்றதா? இல்லை பெண்ணிடம் இருந்து வருகின்றதா? என்பதில் ஒரு மயக்கம்! அப்பாடா! அனல், புனல் என்ன ஒப்பு உவமாணங்கள் இப்படி கற்பனையில் மிதக்க கவிஞன் கண்ணதாசனால் மட்டுமே முடியும்! இனி பாட்டைக்கேளுங்கள்!
என்கிருந்தோ ஒரு குரல் வந்தது! பேசாலைதாஸ்
காலத்தால் செய்த உதவி ஞாலத்தில் மானப்பெரிது இது வள்ளுவன் வாக்கு. செய்த உதவிக்கு நன்றியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பாடல். உதவி யாரால் வந்தது என்பது அறியாமல், செய்த உதவிக்கு நன்றியாக இருப்பதை எடுத்துக்காட்டு வதாக இந்த பாடல் அமைகின்றது. இந்த பாடலில் ஒரு வரி வரும் " மாளிகையிலே ஒரு மதி வந்தது, அது எந்த வானத்து நிலவோ" என்று கவிஞர் பாடுவார். நமக்கு தெரிந்த வானம் ஒன்றே! ஆனால் கவிஞனுக்கோ அண்ட சராசரத்திலே ஆயிரம் வானங்கள் இருப்பதை மிக துள்ளியமாக விளக்குகின்றார். இது போல இன்னொரு வரிவரும் " கங்கையிலே புது புனல் வந்தது, அது எந்த மேகம் தந்த புனலோ? மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ" பெண்களிடம் காம உணர்வு வந்துவிட்டாலே, அவர்கள் அனலாக, வெது வெதுப்பாக இருப்பார்கள். அப்படியே இறுக, அணைத்து சுகம் காணும்போது, அனல் இன்னும் அதிகமாக இருக்கும், அந்த அனல் ஆணிடம் இருந்து வருகின்றதா? இல்லை பெண்ணிடம் இருந்து வருகின்றதா? என்பதில் ஒரு மயக்கம்! அப்பாடா! அனல், புனல் என்ன ஒப்பு உவமாணங்கள் இப்படி கற்பனையில் மிதக்க கவிஞன் கண்ணதாசனால் மட்டுமே முடியும்! இனி பாட்டைக்கேளுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக