பாட்டும் பதமும் 13 " நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்"? பேசாலைதாஸ்
அன்பர்களே! கவிஞர் கண்ணதாசன் தன் பாடல்களுக்கு கருப்பொருளாக பழந்தமிழ் இலக்கியங்களை கையாண்டு அதனை தன் எளிய நடையில் சொல்லி புரிய வைக்கும் அசாத்திய திறமை அவன் ஒருவனுக்கே உண்டு. நளவெண்பா காப்பியத்தில் 184 வது பாடல் இப்படி வருகின்றது
"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து." இந்த செய்யுளின் பொழிப்பு இப்படி அமைகின்றது. மலர் கொய்யச் சென்ற மங்கை ஒருத்தியின் அழகு முகத்தைத் தாமரை மலரென்று எண்ணி வண்டுகள் வட்டமிட, அவற்றைத் துரத்தும் நோக்கோடு, தன் அழகிய கரத்தை முகத்தருகே கொண்டுவர, விரல்களைக் காந்தள் மலரென்று (கார்த்திகைப்பூ) நினைத்த வண்டுகள் இப்போது விரல்களை நோக்கிப் பாய, செய்வதறியாது அப்பெண் பயத்தில் வேர்த்து நின்றாளாம். என்ன ஒரு அழகிய கற்பனை! இந்த பொழிப்பை வாசித்தவுடன் சட்டென்று இந்த பாடல் வரிகள் உங்களுக்கு வந்திருக்கவேண்டுமே?
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற... இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இரு வல்லவர்கள் அன்பர்களே இப்போது பாட்டைக்கேளுங்கள்!
அன்பர்களே! கவிஞர் கண்ணதாசன் தன் பாடல்களுக்கு கருப்பொருளாக பழந்தமிழ் இலக்கியங்களை கையாண்டு அதனை தன் எளிய நடையில் சொல்லி புரிய வைக்கும் அசாத்திய திறமை அவன் ஒருவனுக்கே உண்டு. நளவெண்பா காப்பியத்தில் 184 வது பாடல் இப்படி வருகின்றது
"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து." இந்த செய்யுளின் பொழிப்பு இப்படி அமைகின்றது. மலர் கொய்யச் சென்ற மங்கை ஒருத்தியின் அழகு முகத்தைத் தாமரை மலரென்று எண்ணி வண்டுகள் வட்டமிட, அவற்றைத் துரத்தும் நோக்கோடு, தன் அழகிய கரத்தை முகத்தருகே கொண்டுவர, விரல்களைக் காந்தள் மலரென்று (கார்த்திகைப்பூ) நினைத்த வண்டுகள் இப்போது விரல்களை நோக்கிப் பாய, செய்வதறியாது அப்பெண் பயத்தில் வேர்த்து நின்றாளாம். என்ன ஒரு அழகிய கற்பனை! இந்த பொழிப்பை வாசித்தவுடன் சட்டென்று இந்த பாடல் வரிகள் உங்களுக்கு வந்திருக்கவேண்டுமே?
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற... இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இரு வல்லவர்கள் அன்பர்களே இப்போது பாட்டைக்கேளுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக