பாட்டும் பதமும் 19
அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு, பொங்குது இந்த மனசு! பேசாலைதாஸ்
வரிகளுக்குள் வாக்கியத்தை சுருக்குவது, வரிக்குள் கதையை சொருகு வது, ஏன் வரிக்குள்ளே ஒரு காவியத்தை சுருக்க முடியுமென்றால், அது கவிஞன் கண்ணதாஸனால் மட்டுமே முடியும் என்பதை நான் தைரி யமாக ஒத்துக்கொள்வேன். ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அறிவு தெளியாத சின்ன பையன் ஒருவன், பண்ணையார் வீட்டு பேரழகியின் எதார்த்தமான சிரிப்பில், தன்னை இழக்கின்றான், அவளுக்காகவே வாழ்கின்றான்,, திரைக்கதை இப்படி நீட்சி கொள்கின்றது. அந்த கதையை அப்படியே உள்வாங்கி, அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு என்ற பாடலிலே, பூடகமாக உள்ளே புகுத்தினார் கவிஞர். பண்ணயார் வீட்டு பேரழகி, புன்னகை அரசி, சிரிப்பழகி யாரையோ (முத்துராமனை) பார்த்து சிரிக்க, அந்த சிரிப்பு தனக்குத்தான் என கேனத்தனமாக நினைக்கும், ஒரு அறிவு மங்கிய இளைஞன்( சிவாஜி) எண்ணங்கள், அதுதான் திரைப்படத்தின் கரு (main concept) இந்த பாட்டில் அப்படியே சுக்கி சொல்லுவார் கவிஞர். அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு, பொங்குது இந்த மனசு, கண்ணுக்கு நூறு வயசு, அவ சொல்லுக்கு நாலு வயசு.பார்த்தீர்களா அழகில் நூறு, வயதில் நாலு(குழந்தை) என்பதை சொல்லாமல் சொல்லும் கவி நுட்பம், என்னைப்போன்ற கேனத்தனமான இரசனையாளுனுக்கு வருமா? இன்னும் கேளுங்கள் சொல்கின்றேன். கவிகளுக்குள், "ஏ" அகரம் சேர்த்திருப்பார்கள். நிறைய "ஏ" அகரம் உண்டு. எண்னையில் எரியும் விளக்கு, அது என்னையே அழக்கும் சிரிப்பு, என்னமோ நடக்குது நடப்பு, இதில் ஏதோ, என்னவோ இருக்கு, யாருக்கு இந்த கதை புரியும்? சாமிக்கு மட்டும் இது புரியும், ஏழைக்கு வந்த அந்த நினைப்பு, செல்வத்தில் வந்த பின்பு கனவு",,,,,,,கிட்டதட்ட என் சொந்த காதல் கதையும் இது போலத்தான்,,,,, இனி பாட்டைக் கேளுங்கள்,,,,,
அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு, பொங்குது இந்த மனசு! பேசாலைதாஸ்
வரிகளுக்குள் வாக்கியத்தை சுருக்குவது, வரிக்குள் கதையை சொருகு வது, ஏன் வரிக்குள்ளே ஒரு காவியத்தை சுருக்க முடியுமென்றால், அது கவிஞன் கண்ணதாஸனால் மட்டுமே முடியும் என்பதை நான் தைரி யமாக ஒத்துக்கொள்வேன். ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அறிவு தெளியாத சின்ன பையன் ஒருவன், பண்ணையார் வீட்டு பேரழகியின் எதார்த்தமான சிரிப்பில், தன்னை இழக்கின்றான், அவளுக்காகவே வாழ்கின்றான்,, திரைக்கதை இப்படி நீட்சி கொள்கின்றது. அந்த கதையை அப்படியே உள்வாங்கி, அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு என்ற பாடலிலே, பூடகமாக உள்ளே புகுத்தினார் கவிஞர். பண்ணயார் வீட்டு பேரழகி, புன்னகை அரசி, சிரிப்பழகி யாரையோ (முத்துராமனை) பார்த்து சிரிக்க, அந்த சிரிப்பு தனக்குத்தான் என கேனத்தனமாக நினைக்கும், ஒரு அறிவு மங்கிய இளைஞன்( சிவாஜி) எண்ணங்கள், அதுதான் திரைப்படத்தின் கரு (main concept) இந்த பாட்டில் அப்படியே சுக்கி சொல்லுவார் கவிஞர். அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு, பொங்குது இந்த மனசு, கண்ணுக்கு நூறு வயசு, அவ சொல்லுக்கு நாலு வயசு.பார்த்தீர்களா அழகில் நூறு, வயதில் நாலு(குழந்தை) என்பதை சொல்லாமல் சொல்லும் கவி நுட்பம், என்னைப்போன்ற கேனத்தனமான இரசனையாளுனுக்கு வருமா? இன்னும் கேளுங்கள் சொல்கின்றேன். கவிகளுக்குள், "ஏ" அகரம் சேர்த்திருப்பார்கள். நிறைய "ஏ" அகரம் உண்டு. எண்னையில் எரியும் விளக்கு, அது என்னையே அழக்கும் சிரிப்பு, என்னமோ நடக்குது நடப்பு, இதில் ஏதோ, என்னவோ இருக்கு, யாருக்கு இந்த கதை புரியும்? சாமிக்கு மட்டும் இது புரியும், ஏழைக்கு வந்த அந்த நினைப்பு, செல்வத்தில் வந்த பின்பு கனவு",,,,,,,கிட்டதட்ட என் சொந்த காதல் கதையும் இது போலத்தான்,,,,, இனி பாட்டைக் கேளுங்கள்,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக