251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன்
பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM
படம்:‘தூறல் நின்னு போச்சு’ (1982)
ராகம்- ஏரிக்கரை பூங்காற்றே- சங்கராபரணம் “
என் சோக கதைய கேளு- தேநுகா
பாடலாசிரியர்- ‘என் சோக ‘-கங்கை அமரன்
‘ஏரிக்கரை’-சிதம்பரநாதன்
தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை, எந்த இடையூறும் இல்லாமல், சுமுகமாக தன்னை ஏற்று கொள்ள வேண்டும் என்று சுலக்ஷணா வினாயகரிடம் வேண்டுவது " சிம்பாலிக்' ஷாட்( symbolic shot) . ஏனென்றால், அது சுலக்ஷணாவின்.அறிமுக காட்சி. வினாயகரும் அவரை ஆசீர்வதித்தார்.
இந்த இரு பாடல்களையும் ஒன்றாக பதிவு செய்வதற்கு காரணம் உண்டு. இரண்டுமே, கதாநாயகனின் காதல் , அதில் அவனுடைய ஏக்கம், நம்பிக்கை,ஆதங்கம் , ஏமாற்றம் ஆகியவற்றை இரு பாடல்களும் வெளிப்படுத்தும். காட்சி அமைப்பு வேறுபட்டாலும், பாடும் தோரணையில் வித்யாசம் இருந்தாலும், கரு ஒன்றே.
“ஏரிக்கரை பூங்காற்றே” பாடலை பற்றி (பாடியவர்- கே. ஜே. ஏசுதாஸ்)
ஏரிக்கரை பூங்காற்றே பாடலை ஏசுதாஸ் அவர்கள் பாடும் பொழுது, தனது வழக்கமான பாணியிலிருந்து மாறு பட்டு பாடுவார்- கிராம நெடியுடன்!.
பாடல் இறுதியில் பாடுவது யார்? நான் நம்பியார் என்றே நினைத்தேன். ஆனால், அவருடைய பெயர் LP ரெக்காற்டில் இல்லை. அப்படி என்றால் அது ஏசுதாஸ் அவர்கள் குரலா?
இப்பாடலை எழுதிய சிதம்பரநாதனுக்கு விருது வழங்கப்பட்டது ( மாநில விருது).
"பாத மலர் நோகுமுன்னு நடக்கும்
பாத வழி பூ விரிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே
மனசு"-நெகிழவைவைக்கும் வரிகள்
https://youtu.be/VSmf1oC6Apg
“என் சோக கதைய கேளு” .. பாடலை பற்றி (பாடியவர்- மலேஷியா வாசுதேவன் &கிருஷ்ணமூர்த்தி)
இந்த கலாட்டா பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். கிண்டலும், சோகமும் கலந்து, மலேஷியா வாசுதேவன் கிருஷ்ணமூர்த்தியுடன் சக பாடகர் அடிக்கும் லூட்டி, பாக்யராஜும் , நம்பியார் நடிக்க வசதி செய்கிறது, சிரிப்பும் வரவழைக்கிறது.
மிக முக்கியமாக, பட்டிதொட்டியெங்கும்,பாட்டுக்கச்சேரிகளிலும் மிகப்பெரிய ஹிட்டானது.
இப்பாடலில் மிருதங்கம் வாசிப்பது போல் நடிப்பவர் பிற்கால “கதாநாயகன்' பாண்டியராஜன்!
“மங்களத்த பெத்தவனே
உன் மனச மாத்திக்கடா”
https://youtu.be/59ZWTlLyL5I
BGM:
இளையராஜாவின் BGM இத்திரைப்படத்தில் அசத்தல்! அந்த வயிலின் பீஸ்! பின்னர் மிருதங்கம் உடன் நடை போட்டு கொண்டு போவது மங்கல(ள)த்தை செல்லமாக. அழைத்துப் போவது போன்று இருக்கும். ( இப்படத்தில் பாக்யராஜின் பெயர் செல்ல துறை. ,சுலக்ஷணாவின். பெயர் மங்களம்.)
https://youtu.be/jRz5CmUTw2c
Bottom Line:
நாற்பது வருடங்களுக்கு முன்பு, தமிழ் புத்தாண்டு அன்று திரையிடப்பட்டது. அமோக வெற்றி பெற்றது. இப்படத்தில் வேறு இரு சிறந்த பாடல்களுடன் , இப்படத்தின் " தங்கமான" தகவல்களுடன் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக