கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ்
கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்கும் இந்த ராகம் இனிமையும் ,பேரெழிலும் நிறைந்தது.நாதஸ்வரத்தில் இந்த ராகத்தைக் கேட்பவர்கள் இலகுவில் மனதை பறி கொடுத்து விடுவார்கள் என்ற அடித்துக் கூறலாம்.விரிவான ஆலாபனைக்கு ஏற்ற ராகமாக விளங்குவதால் ஆற்றல்மிக்க கலைஞர்களுக்கு தங்கள் வித்துவத்தைக் காண்பிக்க ஏதுவான ராகம்.
செவ்வியல் சட்டகங்களைக் கொஞ்சம் தளர்த்திப் பார்த்தோமானால் இந்த ராகம் நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்தது என்பதை இலகுவில் கண்டு விடலாம்.பழம் பெரும் தமிழ் ராகமான இன்றைய கரகரப்ரியா ராகத்தின் ஆதிகாலத் தமிழ் பெயர் படுமலைப்பண் என்பதாகும்.
பன்னெடுங்காலமாக தமிழ் மக்கள் பழகி வந்த ராகங்கள் பக்தி இசையில் திருப்பப்பட்டு , ஆட்சி மாற்றங்களுடே சம்ஸ்கிருத மயப்பட்டு தமிழ் பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போயின.
என்னதான் ராகங்களின் பெயர்களை மாற்றினாலும் அதில் உள்ள இனிமையை மக்கள் மறந்தாரில்லை.
தமிழ் திரை இசையும் கரகரபிரியா ராகத்தை விட்டு வைக்காமல் .மிக நல்ல பாடல்களைத் தன் பங்கிற்கு தந்துள்ளது எனக்கு பிடித்த கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த பாடல் இது மாவி பொன் மயிலால் என்ற பாடல். வண்ண மோகினி, என் நடனப்போரொளி என் கனவுக்கன்னி பத்மினியின் ஆட்டம் இப்பாடலுக்கு இன்னும் பெருகூட்டுகின்றது ஆடலுடன் பாடலை கேளுங்கள்!.
கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்கும் இந்த ராகம் இனிமையும் ,பேரெழிலும் நிறைந்தது.நாதஸ்வரத்தில் இந்த ராகத்தைக் கேட்பவர்கள் இலகுவில் மனதை பறி கொடுத்து விடுவார்கள் என்ற அடித்துக் கூறலாம்.விரிவான ஆலாபனைக்கு ஏற்ற ராகமாக விளங்குவதால் ஆற்றல்மிக்க கலைஞர்களுக்கு தங்கள் வித்துவத்தைக் காண்பிக்க ஏதுவான ராகம்.
செவ்வியல் சட்டகங்களைக் கொஞ்சம் தளர்த்திப் பார்த்தோமானால் இந்த ராகம் நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்தது என்பதை இலகுவில் கண்டு விடலாம்.பழம் பெரும் தமிழ் ராகமான இன்றைய கரகரப்ரியா ராகத்தின் ஆதிகாலத் தமிழ் பெயர் படுமலைப்பண் என்பதாகும்.
பன்னெடுங்காலமாக தமிழ் மக்கள் பழகி வந்த ராகங்கள் பக்தி இசையில் திருப்பப்பட்டு , ஆட்சி மாற்றங்களுடே சம்ஸ்கிருத மயப்பட்டு தமிழ் பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போயின.
என்னதான் ராகங்களின் பெயர்களை மாற்றினாலும் அதில் உள்ள இனிமையை மக்கள் மறந்தாரில்லை.
தமிழ் திரை இசையும் கரகரபிரியா ராகத்தை விட்டு வைக்காமல் .மிக நல்ல பாடல்களைத் தன் பங்கிற்கு தந்துள்ளது எனக்கு பிடித்த கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த பாடல் இது மாவி பொன் மயிலால் என்ற பாடல். வண்ண மோகினி, என் நடனப்போரொளி என் கனவுக்கன்னி பத்மினியின் ஆட்டம் இப்பாடலுக்கு இன்னும் பெருகூட்டுகின்றது ஆடலுடன் பாடலை கேளுங்கள்!.
" thirunelveli alwada thiruchi mala kotta da " inth song enna raagathil amainthathu..?? makkale konjam sollunga..
பதிலளிநீக்கு