பாட்டும் பதமும் 24
" நீரோடும் வைகயிலே நின்றாடும் மீனே! நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே"!பேசாலைதாஸ்
வைகையிலே இப்போது நீரும் இல்லை, மீனும் இல்லை, அதுபோல நெய்யூறும் காடுகள் இப்போது இல்லை, வெட்டி அழித்து, இயற்கையே படுகொலை செய்யப்படுகின்றது. இது வேறு ஒரு சமாச்சாரம்! அதை விட்டுவிட்டு கண்ணதாஸனின் பாட்டுக்கு செல்வோம்.
கற்பனைப்புலத்தை சற்றே கவனியுங்கள், பாய்ந்து வரும் இலகு சொற்களை, இரசியுங்கள்! நீரோடும் வைகை, நெய்யூறும் காடு, தாலாட்டும் வானம், அமுதூட்டும் நிலா, மங்களமான மங்கை, மழலையின் தந்தை, காதலெனும் கவிதை, கருனைக்கான பரிசு, தெம்மாங்குத்தமிழ், கலைமகள் உள்ளம், பார்த்தீர்களா, மங்களமான சொற்கள், கருத்தாழம் உள்ள பதங்கள், நான் மேலே சொன்ன சொற்களை, வரிசைக்கிரகமாக நீங்களே மனதுக்குள் சொல்லிப்பாரு ங்கள் அதுவே ஒரு கவிதையாகிவிடும். நல்ல கவிஞன் மனது இப்படி த்தான், மிட்டாய் கடையை கண்டால், துள்ளிக்குதிக்கும் சிறு பிள்ளை போன்றது, அழகான காட்சி, வனப்பான மங்கை, இயற்கை எழில் இவைகளைக் கண்ட மாத்திரத்தில், கவிதையில் லசித்து இரசிக்கும்! இந்த பாடலில், கவிஞன், கணமான கருத்துக்கள், இலக்கிய ஒப்புவாமா னங்கள் எதனையும், கையாளவில்லை. சொற்களை எடுத்து, அழகாக கோர்த்து, கவிதை மாலையாக நமக்குதருகின்றார் கவிஞர். தாலாட்டு தமிழிலே எளிமையை புகுத்தியுள்ளார், நான் இரசித்ததை நீங்களும் இரசியுங்கள்! இரசனை அற்ற வாழ்க்கை, சலிக்கும், புளிக்கும் கஞ்சியாகிவிடும்!
பாடலை இரசிக்கும் முன்னர், பாடல் பிறந்த கதைச்சம்பவம், மிக சுவாரஸ்யமானது, நடிகர் ஒய், ஜீ, மகேந்திரன் எங்கேயோ சொன்னதாக ஞாபகம். கண்ணதாஸன் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது, விஸ்வநாதன் வீட்டுக்கு அரட்டை அடிப்பத ற்காக செல்வாராம், அது ஒரு ஞாயிறு வாரம், கண்ணதாசன், விஸ்வநா தன் வீட்டுக்கு சென்றிருக்கின்றார், விசு எங்கே என அம்மாவிடம் கேட்க, அவளோ, "தம்பி, சாராதா ஸ்டூடியோவில பாட்டு ரெக்கோட் பண்ணு ராப்போல", என்று சொல்ல, கண்ணதாசன் ஆச்சரியத்தில், நான் இல்லா மல் பாட்டா? உடனே காரில் சாராதா ஸ்டூடியோ சென்றிருக்கின்றார். தட தட என உள்ளே சென்ற கவிஞர், "விசு என்ன நான் இல்லாமல், நீ எப்படி பாட்டு போடுவாய்" என கேட்டு சண்டை போட்டாராம், விசுவோ "இல்லை யப்பா, எல்லாப்பாட்டும் நீதானே எழுதி இருக்கே, இந்த இடத்தில் மட்டும், தனியே விசில் சத்தமும், வெறும் ஹம்மிங் போட்டு, புதுமையாக செய்ய இருக்கின்றேன்" என விசு சொல்ல, இல்லை இல்லை என் வரிகள் அத ற்குள் இருக்கவேண்டும் என செல்லமாக அடம் பிடிக்க, டைரக்டரும், விஸ்வநாதனும் ஒத்துக்கொள்ளவில்லை, கவிஞருக்கு அந்த மியுஸி க்கிலே கவிதை, எழுத வேண்டும் என்ற வெறி தலைக்கேற, நேராக சிவாஜியிடம் சென்று, "நல்ல இசையை, விஸ்வநாதன் வெறும் பாட்டு இல்லாமல் எடுக்கப்போகின்ரானாம்" என அழுதழு சொல்ல, மனம் பொறுக்காத சிவாஜி, விஸ்வநாதனிடம் இந்த பாட்டிலும் கவிஞரின் வரிகளை போடுங்கள் என கேட்க, என்ன செய்வதென்று புரியாத விஸ்வ நாதன் சரி என்றார்.சொன்னதுதான் தாமதம், ஒரு சில நிமிடத்தில் எழுதிய அற்புதமான பாடல் தான், இன்றும் என்றும் சாகாவரம் பெற்ற பாடல், இப்போது கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம், நீங்களும் கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=nlfGpLWJqcU
" நீரோடும் வைகயிலே நின்றாடும் மீனே! நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே"!பேசாலைதாஸ்
வைகையிலே இப்போது நீரும் இல்லை, மீனும் இல்லை, அதுபோல நெய்யூறும் காடுகள் இப்போது இல்லை, வெட்டி அழித்து, இயற்கையே படுகொலை செய்யப்படுகின்றது. இது வேறு ஒரு சமாச்சாரம்! அதை விட்டுவிட்டு கண்ணதாஸனின் பாட்டுக்கு செல்வோம்.
கற்பனைப்புலத்தை சற்றே கவனியுங்கள், பாய்ந்து வரும் இலகு சொற்களை, இரசியுங்கள்! நீரோடும் வைகை, நெய்யூறும் காடு, தாலாட்டும் வானம், அமுதூட்டும் நிலா, மங்களமான மங்கை, மழலையின் தந்தை, காதலெனும் கவிதை, கருனைக்கான பரிசு, தெம்மாங்குத்தமிழ், கலைமகள் உள்ளம், பார்த்தீர்களா, மங்களமான சொற்கள், கருத்தாழம் உள்ள பதங்கள், நான் மேலே சொன்ன சொற்களை, வரிசைக்கிரகமாக நீங்களே மனதுக்குள் சொல்லிப்பாரு ங்கள் அதுவே ஒரு கவிதையாகிவிடும். நல்ல கவிஞன் மனது இப்படி த்தான், மிட்டாய் கடையை கண்டால், துள்ளிக்குதிக்கும் சிறு பிள்ளை போன்றது, அழகான காட்சி, வனப்பான மங்கை, இயற்கை எழில் இவைகளைக் கண்ட மாத்திரத்தில், கவிதையில் லசித்து இரசிக்கும்! இந்த பாடலில், கவிஞன், கணமான கருத்துக்கள், இலக்கிய ஒப்புவாமா னங்கள் எதனையும், கையாளவில்லை. சொற்களை எடுத்து, அழகாக கோர்த்து, கவிதை மாலையாக நமக்குதருகின்றார் கவிஞர். தாலாட்டு தமிழிலே எளிமையை புகுத்தியுள்ளார், நான் இரசித்ததை நீங்களும் இரசியுங்கள்! இரசனை அற்ற வாழ்க்கை, சலிக்கும், புளிக்கும் கஞ்சியாகிவிடும்!
பாடலை இரசிக்கும் முன்னர், பாடல் பிறந்த கதைச்சம்பவம், மிக சுவாரஸ்யமானது, நடிகர் ஒய், ஜீ, மகேந்திரன் எங்கேயோ சொன்னதாக ஞாபகம். கண்ணதாஸன் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது, விஸ்வநாதன் வீட்டுக்கு அரட்டை அடிப்பத ற்காக செல்வாராம், அது ஒரு ஞாயிறு வாரம், கண்ணதாசன், விஸ்வநா தன் வீட்டுக்கு சென்றிருக்கின்றார், விசு எங்கே என அம்மாவிடம் கேட்க, அவளோ, "தம்பி, சாராதா ஸ்டூடியோவில பாட்டு ரெக்கோட் பண்ணு ராப்போல", என்று சொல்ல, கண்ணதாசன் ஆச்சரியத்தில், நான் இல்லா மல் பாட்டா? உடனே காரில் சாராதா ஸ்டூடியோ சென்றிருக்கின்றார். தட தட என உள்ளே சென்ற கவிஞர், "விசு என்ன நான் இல்லாமல், நீ எப்படி பாட்டு போடுவாய்" என கேட்டு சண்டை போட்டாராம், விசுவோ "இல்லை யப்பா, எல்லாப்பாட்டும் நீதானே எழுதி இருக்கே, இந்த இடத்தில் மட்டும், தனியே விசில் சத்தமும், வெறும் ஹம்மிங் போட்டு, புதுமையாக செய்ய இருக்கின்றேன்" என விசு சொல்ல, இல்லை இல்லை என் வரிகள் அத ற்குள் இருக்கவேண்டும் என செல்லமாக அடம் பிடிக்க, டைரக்டரும், விஸ்வநாதனும் ஒத்துக்கொள்ளவில்லை, கவிஞருக்கு அந்த மியுஸி க்கிலே கவிதை, எழுத வேண்டும் என்ற வெறி தலைக்கேற, நேராக சிவாஜியிடம் சென்று, "நல்ல இசையை, விஸ்வநாதன் வெறும் பாட்டு இல்லாமல் எடுக்கப்போகின்ரானாம்" என அழுதழு சொல்ல, மனம் பொறுக்காத சிவாஜி, விஸ்வநாதனிடம் இந்த பாட்டிலும் கவிஞரின் வரிகளை போடுங்கள் என கேட்க, என்ன செய்வதென்று புரியாத விஸ்வ நாதன் சரி என்றார்.சொன்னதுதான் தாமதம், ஒரு சில நிமிடத்தில் எழுதிய அற்புதமான பாடல் தான், இன்றும் என்றும் சாகாவரம் பெற்ற பாடல், இப்போது கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம், நீங்களும் கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=nlfGpLWJqcU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக