யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல, அண்டகாக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் புரியல பேசாலைதாஸ்
இந்த உலகம், அயோக்கியர்களாலும், போக்கிரி அரசியல்வாதிகளாலும் நிறைந்து இருக்கின்றது. யாரையும் நம்ப முடிவதில்லை, உறவுகளே தக்க தருணம் பார்த்து மோசம் செய்கின்றார்கள். கயமை என்ற அதிகாரத்தில் 1071 குறளாக, வள்ளுவர் இப்படி பாடினார் " மக்களே போல்வர் கயவர், அவரன்ன ஒப்பாரில், யாங்கள்டதில்லை" கயவர்கள் மக்களிடம் முகம் தெரியாமல் சாதாரண மக்கள் போல, இருப்பார்கள் என்பதே அதன் அர்த்தம். இந்த குறளை அப்படியே தனது பாடலில் மிக எளிமையாக எழு தினார் கவிஞர். " மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா! மோசம் நாசம் வேசம் எல்லாம் நிறைந்திருக்குதடா! காலம் மாறும் வேசம் கலை யும், உண்மை வெல்லுமடா!" எவ்வளவு இயல்பாக, எல்லாக்காலத்திற்கும் பொருந்த கூடிய விதத்தில் பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை கண்ணதாசன் எழுதிய சூழலலை கவனித்தால் 1961 ஆண்டு வட சென்னை தேர்தலில், கவிஞர் கண்ணதாசன் ஆதரித்து, மேடை தோறும் முழங்கிய காங்கிரஸ் வேட்பாளர் தோற்றபோது, அவர் எழுதிய பாடல் இது. இப்பொழுது கூட, தமிழகதிலும் சரி, இலங்கையிலும் சரி, ஏன் நமது கிராமங்களின் உள்ளூர் தேர்தலிலும் இப்பொழுதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. உண்மைதான் பணம் பகட்டு இவை இருந்தால் போதும், அவன் எப்படிப்பட்ட கயவனோ, கள்வனோ, பெண் பித்தனோ என்னவாகவும் இருக்கட்டும் அவனை உலகம் போற்றுகின்றது. "பீடி எது, ஊதுவர்த்தி எது என்று உலகம் தெரியாமல் மயங்கி கிடக்கின்றது. நீங்களும் அப்படியா? இனி பாட்டைக் கேளுங்கள்,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக