புதுப்புது வாத்தியங்களை சலன மின்றி அறிமுகம் செய்த மெல்லிசை மன்னர்கள் வட இந்திய இசைக்கருவியான செனாய் வாத்திய இசைக்க ருவியை பயன்படுத்திய பங்கு விதந்துரைக்கத் தக்கது.ஏற்கனவே இந்தி த்திரையிசையில் வேரூன்றி விருத்தி பெற்ற இக்கருவியை ஆங்காங்கே ஒரு சில பாடல்களி லும் ,பெரும்பாலும் சோகக்காட்சிகளிலும் பிற இசை யமைப்பாளர்களும் பயன்படுத்தி யிருக்கின்றனர்.
தமிழ் சூழலில் செனாய் சோக உணர்வை தரும் வாத்தியமாக கருத்தப்பட்டுவந்த சூழ்நிலையில் அபூர்வமாக ஒரு சில பாடல்களும் வெளிவந்தன அந்நிலையில் “சோகக்காட்சியா” ? கொண்டுவா செனாய் வாத்தியக்கருவியை ” என அன்றிருந்த ஒரு கால கட்டத்தில் அந்த வாத்தியத்தை அதிகமான மகிழ்ச்சிப்பாட ல்களிலும் வைத்துக்காட்டி பெருமை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்றால் மிகையில்லை.
இன்ன வாத்தியம் இன்ன உணர்வைத்தான் பிரதிபலிக்கும் என்ற வரையறைகளைத் தாண்டி ,”அவற்றின் எல்லை இது தான் ” என்று முன் சொல்லப்பட்ட கருத்துக்களை மீறி புதிய கோணங்களில் பயன்படுத்தி னர். இன்னொருமுறையில் சொல்வதெ ன்றால் தலைகீழ் விகிதத்திலும் பயன்படுத்தினார்கள் எனலாம் . செனாய் வாத்தியத்தை காதல்பா டல்களில் மட்டுமல்ல ,பலவிதமான பாடல்களிலும் புதுமுமையாகப் பயன்படுத்தி வியக்க வைத்த ஒரு காதல் பாட்டு “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” – பாலும் பழமும் [1961]
இந்தப் பாடலின் இசையில், அதன் இனிமையில் செனாய் பயன்பட்டிருப்பதை பலரும் கவனித்தருக்க மாட்டார்கள்.அதை உற்று நோக்கிக் கேட்கும் போது மட்டுமே அதன் இன்பத்தை நாம் அனுபவிக்க லாம்.பாடலின் பல்லவியின் முடிவிலும் , சரணத்திலும் செனாய் வாத்தியத்தின் குழைவையும், இனிமையும் வியக்கலாம். பாடலின் பல்லவி முடிந்தவுடன் காலையை குளிர்ச்சியுடன் வரவேற்கும் செனாய் இசையை இன்பப்பெருக்காகத் தருகிறார்கள். இப்பாடலின் முடிவில் “அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் ” வரிகளை தொடரும் வயலின் இசையும் , புல்லாங்குழல் இசையும் சம்போகம் செய்து இன்ப மாய்ப் புலரும் இனிய கலைப்பொழுதை இதமாக வருடிக் கொடுக்கி ன்றன. காலைப்பொழுது இருக்கும்வரை இந்தப்பாடல் இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இருக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக