பாட்டும் பதமும் 14 "பால் வண்ணம் பருவம் கண்டேன்" பேசாலைதாஸ்
அன்பர்களே கவிஞர்கள் எழுத்தாளர்கள் சிந்தனைவாதிகள் இவர்களுக்கெல்லாம், இதிகாசங்கள் பழைய இலக்கிய படைப்புகள், உத்துசக்தியாக அமைவதுண்டு. கவிஞர் கண்ணதாசனுக்கு கம்பராமாயணம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை இங்கே எடுத்துக்காட்டுகின்றேன்.
இராமர் வனத்திலே தவமிருக்கும் போது, தாடகை என்ற பெரும் அரக்கியை தனது வில்லினால் விழுத்தினான். அதனை கண்ட விசுவாமித்திரர் இராமனின் கை வண்மையை வியந்தார். பின்னர் இன்னுமொரு சந்தர்ப்பத்தில், இராமனின் கால் பட்டதால், கல்லாயிருந்த அகலிகை சாபவிமோசனம் அடைகின்றாள். இதனை பார்த்த விசுவாமித்திரர் " இராமா உன் கை வண்ணம், அங்கே கண்டேன், கால் வண்ணம் இங்கே கண்டேன்" என்கின்றார். கம்பரின் இந்த செய்யுள் வரிகளை கண்ணதாசன் வேறு ஒருவிதமாக பால்வண்ணம் பர்வம் கண்டேன் என்று பாடினார். இப்போது பாட்டை கவனியுங்கள்!
அன்பர்களே கவிஞர்கள் எழுத்தாளர்கள் சிந்தனைவாதிகள் இவர்களுக்கெல்லாம், இதிகாசங்கள் பழைய இலக்கிய படைப்புகள், உத்துசக்தியாக அமைவதுண்டு. கவிஞர் கண்ணதாசனுக்கு கம்பராமாயணம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை இங்கே எடுத்துக்காட்டுகின்றேன்.
இராமர் வனத்திலே தவமிருக்கும் போது, தாடகை என்ற பெரும் அரக்கியை தனது வில்லினால் விழுத்தினான். அதனை கண்ட விசுவாமித்திரர் இராமனின் கை வண்மையை வியந்தார். பின்னர் இன்னுமொரு சந்தர்ப்பத்தில், இராமனின் கால் பட்டதால், கல்லாயிருந்த அகலிகை சாபவிமோசனம் அடைகின்றாள். இதனை பார்த்த விசுவாமித்திரர் " இராமா உன் கை வண்ணம், அங்கே கண்டேன், கால் வண்ணம் இங்கே கண்டேன்" என்கின்றார். கம்பரின் இந்த செய்யுள் வரிகளை கண்ணதாசன் வேறு ஒருவிதமாக பால்வண்ணம் பர்வம் கண்டேன் என்று பாடினார். இப்போது பாட்டை கவனியுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக