வியாழன், 11 ஜனவரி, 2018

சிட்டுக்குருவியும் பைந்தமிழ் இலக்கியமும் சினிமா பாடலும் ஒரு பார்வை!

சிட்டுக்குருவியும் பைந்தமிழ் இலக்கியமும் சினிமா பாடலும்  ஒரு பார்வை! பேசாலைதாஸ்
காக்கா, குருவி, சேவல், மயில், குயில் இவை எல்லாம் நம் தமிழர் வாழ்வில் இரண்டரக்கலந்தவை! கான் மயிலாட கண்டிருந்த வான் கோழி, தன் பொல்லாச்சிறகடித்து ஆடினால் போலுமே, கால்லாதான் கற்ற கவி என்ற செய்யுளும், காக்கா பறந்துவா, கண்ணுக்கு மை கொண்டுவா என்ற பாப்பா பாடலும், குயிலின்  ஓசையில் மன மகிழ்ந்த கவிஞர்கள் இயற்றிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் நிறையவே இருக்கின்றன. இதே போல ‘சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’ எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா பாடல்கள் மூலம் நாம் உணரலாம்.
                                                                                                             மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப் பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி வாழ்ந்தார்கள். இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு இயற்கையைப் போற்றவும் செய்தனர். தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி, தன் துணை முட்டையிடுவதற்கு மென்மையான படுக்கையமைத்த நிகழ்வு குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவியிடம் ஊடல் கொண்டு பரத்தையிடம் சென்ற தலைவன் தலைவியிடம் மீண்டும் சேர விரும்பி ஊடலை நீக்கப் பாணனை அனுப்புவதைப் பதிவுசெய்யும் அந்தப் பாடலை எழுதியவர் வண்ணக்கன் தாமோதரனார்.


யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே

(குறுந்தொகை, 85).

மருதத் திணையினைச் சார்ந்த இப்பாடலின் பொருளானது, சிட்டுக் குருவிக் குடும்பம் ஒன்றில் காதல் வாழ்க்கை நடத்துகின்றது. ஊரினுள் வாழும் துள்ளல் நடையினை உடைய ஆண் குருவி, கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு நல்ல இடத்தை அமைத்துத் தரும் பொருட்டு, சாறு பொதிந்த இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசாத வெண்மையான மென்மையான பூக்களைக் கோதி எடுக்கும் புது வருவாயை உடைய ஊருக்குத் தலைவன். இப்பாடலின் மூலம் சிட்டுக் குருவியின் உயரிய பண்பு வெளியிடப்படுகிறது. தோழி தலைவனிடம் தவறினை நினைத்து வருந்துமாறு கூறுகின்றாள். இதோ அந்த பாடல்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...