வியாழன், 11 ஜனவரி, 2018

கண்ணதாசனின் முதல் பாடல்

கண்ணதாசனின் முதல் பாடல்  பேசாலைதாஸ்

காரைக்குடி சிறுகூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசன் வறுமையின் நிமித்தமாக சென்னைக்கு பிழைப்பு தேடிவந்தவர். மார்டன் தியேட்டரில் திரைக்கதை எழு துவதற்கு வாய்ப்பு தேடிய பொழுது, கன்னியின் காதலிக்கு பாடல்கள் எழும் வாய்ப்பு கிட்டியது. கன்னியின் காதலி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்க த்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகமான பன்னிரண்டாவது இரவு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது இத்திரைப்படம். என். டி. சுந்தரத்தின் வசனத்திலும் வேதாந்தம் ராகவய்யாவின் நடனப்பயிற்சியிலும் உருவான இத்திரைப்படம் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எல். வசந்தகுமாரி பின்னணி பாடினார். கண்ணதாசனின் முதல் பாடலை இதோ உங்களுக்காக தருகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...