வெள்ளி, 12 ஜனவரி, 2018

பாட்டும் பதமும் 15 வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது! பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 15 
வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது!  பேசாலைதாஸ்
அன்பர்களே! உறவுகளினால் இணைக்கப்பட்டதே வாழ்க்கை! ஆனால் இன்றைய உறவுகளுக்கு ஆர்த்தம் ஏது? வறுமை வந்தால் உறவுகள் எல்லாம் பறந்து, மறந்து போகின்றன. ஒளவையாரின் வாகுண்டாம் என்ற நீதி நூலிலே ஒரு பாடல் உண்டு. அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவைபோல, ஊற்றுழித்திரிவார் உறவல்ல, அக்குளத்தில் கொட்டியும், ஆம்பலும் , நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. அதாவது வற்றிய குளத்தை விட்டு, நீர்ப்பறவைகள் பறந்துவிடும் ஆனால் அக்குளத்திலே இருக்கின்ற கொட்டி, ஆம்பல், நெய்தல் செடிகள், குளம் வற்றினால் அதனோடு கிடந்து, குளம் பெருக்கெடுக்கும் போது செழிப்பாய் வளர்ந்து, உறவைக்காத்துக்கொள்ளும். அதுபோலவே பாசமுள்ள உள்ளங்கள், வறஉமை, செல்வம் இவைகளை வைத்து உறவை எடைபோடாது. இந்த கருத்தை, வற்றிய குளத்தை பறவைகள் நாடி, வருவதுகிடையாது, வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது என்று கவிஞர் அழ்காக எழுதினார் இனி பாடலை செவிமடுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...