நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!
பேசாலைதாஸ்
நான் நீயாகி, நீ நானாகி, இறுதியில் நாமாவோம்! இதுதான் காதல், உலகில் உயிரினம் தனித்து வாழ்வதில்லை, தனிமையில் சுகம் ஏது? தனிமையில் இனிமை கிடையாது என்பதாலேயே, இறைவன் உயிரினங்களை ஜோடி ஜோடியாக உருவாக்கினான். நான் பேச நினைப்பதை நீ பேசவேண்டும் என்ற எண்ணத்துடிப்பு, எவ்வளவு அற்புதமானது? ஒன்றில் ஒன்று கலப்பதுவே காதல். இதை நான் சொல்லவில்லை, ஆங்கிலப்புலவன் ஷெல்லியின், Love's Philosophy என்ற கவிதையை படித்துவிட்டுத்தான், கண்ணதாசனின் இந்த பாடலை நான் ஒப்பிட்டு இரசித்தேன். ஷெல்லி இப்படி காதலை எழுதுகின்றான்,,,The fountains mingle with the river
And the rivers with the ocean,
The winds of heaven mix for ever
With a sweet emotion;
Nothing in the world is single;
All things by a law divine
In one spirit meet and mingle.
Why not I with thine?—
See the mountains kiss high heaven
And the waves clasp one another;
No sister-flower would be forgiven
If it disdained its brother;
And the sunlight clasps the earth
And the moonbeams kiss the sea:
What is all this sweet work worth
If thou kiss not me?
நமது கவிஞன் இதை எப்படி எழுதினான் தெரியுமா? " ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உலகங்கள் நம்மை அன்றி வேறேதும் இல்லை. இப்போது நீங்களே சொல்லுங்கள், ஷெல்லியா, கண்ணதாஸனா? யார் சிறந்தவர் என்று. இன்னும் சொல்கின்றேன், இன்னுமொரு ஆங்கில கவிஞன் கீட்ஸ் ( Johan Keats) எழுதினான். "Heard melodies are sweet, but those unheard are sweeter"! சொல்லென்றும் பொருள் என்றும், மொழியென்றும் இல்லை, சொல்லாத சொல்லுக்கு விலை யேதும் இல்லை. இப்படி நமது கவிஞன் பாடினான், ஒப்பிட்டுப்பாருங்கள் எது அழகாக உள்ளது? ஆங்கில கவிகளைவிட, கண்ணதாஸனின் கவி ப்புலமையும், ஆளுமையும் ஒப்பிடமுடியாதது. நான் பேச நினைப்பதெ ல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடலை, உங்கள் காதல் மலர்ந்த, அந்த நாளோடு, ஒப்பிட்டு இரசியுங்கள்! மன்னிக்கவும் என் வாழ்வில் காதல் இல்லை, காதல் இல்லாது ஆனந்தம் ஏது என்று நான் சொல்வதற்கு தகுதியானவன் தானே! இனி பாடலை கேளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக