"வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி என் எதிரில் வந்தாள்" பேசாலைதாஸ்
பாவை விளக்கு என்ற திரைப்படத்தில் ஜெயராமன் பாடிய பாடல்தான் வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள். கண்ணதாஸனின் இலக்கிய புலமைக்கு இந்த பாடல் ஒரு சான்று. கம்பராமயணத்தில் வ்ரும் ஒரு செய்யுளை மையமாக கொண்டு எழுதப்பட்ட பாடல் இது. கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம் இந்த செய்யுளின் களமாக அமைகின்றது. இராவணன் தன் பெற்ற மகள் சீதையை கண்கனிக்க, தன் தங்கை சூர்ப்பனகை ஆரண்ய காட்டுக்கு அனுப்புகின்றான். சூர்ப்பனகையின் அழகில், இராமன் மயங்கி நின்கின்றான். இதை கண்ட இரமானின் தம்பி, வெகுண்டெழுந்து சூர்ப்பனகையின் மார்புகளை தன் கூரிய அம்பினால், அறுக்கின்றான். மூண்டது இலங்காபுரி யுத்தம். இராவணன் சுத்தமான திராவிட தமிழ் வீரன். சிவனடியான். திராவிட தமிழன் இராவணின் வீரத்தை கொச்சைப்படுத்த ஆரிய புலவன் வான்மீகியால் உருவாக்கப்பட்டதே இராமயணம். அந்த சமாச்சாரத்தை விட்டுவிட்டு, பாடலின் இரவாதத்திற்கு வாருங்கள்.இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும், தூங்காமலும் அரிதுயில் கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது சூர்ப்பனகை அங்கு வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள். இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக் கம்பரின் கவிநயம் அழகுபடக் கூறும்.
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”
இதே இதே செய்யுளைத்தான் கவிஞர் தன் சினிமா பாடலில் வேறுவிதமாக புகுத்தினார்.
பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..
வெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கன்னல் மொழி… ஈ..ஈ…. பேசி வரும்…
கன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்.
அன்பர்களே இனி நீங்கள் நான் இரசித்து சிலாகித்ததை பாலில் கேட்டு மகிழுங்கள் அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக