மாறியது நெஞ்சம்! மாற்றியவர் யாரோ? பேசாலைதாஸ்
இரசிக்கத்தெரிந்தவர்கள் இறைவனை எளிதில் காணக்கூடியவர்கள்! இயற்கையை பார்த்து இரசிக்கும் ஒரு இதயம், அப்பாடா எத்துனை இன்பம் வைத்தாய் இறைவா! என்று தன்னை அறியாமலே, தனக்குள் சொல்லிக்கொள்வதுண்டு. பெண்களை உற்று நோக்குங்கள், அவர்களின் உடல் அழகை, அவர்களின் இனிமையான வார்த்தைகளை கவனியு ங்கள், அவர்கள் பாசத்தோடு நோக்கும் பார்வையை பாருங்கள், இறைவ னின் கைவண்ணம் அங்கே தெரியும்! அவர்களை காமக்கண்களால் அளக்காமல், அவர்களை இரசித்துப்பாருங்கள், உங்களை அறியாமலே அவர்கள்பால் இனம்புரியா பாசம், அன்பு, காதல் எல்லாமே பிறக்கும். இரசிக்கத்தெரிந்தவர்கள், அன்புக்காக காரிகையிடம் இரக்கத்தெரி ந்தவர்கள், தாம் இரசித்ததை மற்றவர்களும் இரசிக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இரசிக்கத்தானே இந்த மனசும், இந்த வாழ்க்கையும்!
1968 களில் வெளிவந்த பணமா பாசமா? என்ற கோபாலகிருஸ்ணன் இயக்கத்தில் உருவான படத்தில் ஒரு கவித்து வமான ஒரு பாடல் தான், மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ? இரசி க்கதக்க இசை, பாடல் இது! காவியத்தில், மன ஓவியத்தில், அவன் தூவி வைத்த விதம் என்ன? என்ற கவித்துவமான வரிகளும், " ஆடை தந்து, தமிழ் வாடை தந்து, மணமேடை வந்தவனை கண்டு, ஆசை முந்திவர, நாணம்பிந்தி வர, பேசிப்பார்க்கும் நினைவுண்டு,,,அம்மம்மா,, இந்த நேரம், அந்த நெஞ்சில் ( பேசாலையில் இருக்கும் நெஞ்சில்,,,) என்ன நினைவோ?. காதல்வசப்பட்டாலே, வானம் வசப்படும்போது, காதல் வசப்பட்ட அந்த காரிகையை நினைத்துப்பார்க்கின்றேன். இனி பாட்டைக் கேளுங்கள்,,,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக