புதன், 31 ஜனவரி, 2018

பாட்டும் பதமும் 22 நான் பேச நினைப்பதெல்லாம்

பாட்டும் பதமும் 22

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்! 

பேசாலைதாஸ்

நான் நீயாகி, நீ நானாகி, இறுதியில் நாமாவோம்! இதுதான் காதல், உலகில் உயிரினம் தனித்து வாழ்வதில்லை, தனிமையில் சுகம் ஏது? தனிமையில் இனிமை கிடையாது என்பதாலேயே, இறைவன் உயிரினங்களை ஜோடி ஜோடியாக உருவாக்கினான். நான் பேச நினைப்பதை நீ பேசவேண்டும் என்ற எண்ணத்துடிப்பு, எவ்வளவு அற்புதமானது? ஒன்றில் ஒன்று கலப்பதுவே காதல். இதை நான் சொல்லவில்லை, ஆங்கிலப்புலவன் ஷெல்லியின், Love's Philosophy  என்ற கவிதையை படித்துவிட்டுத்தான், கண்ணதாசனின் இந்த பாடலை நான் ஒப்பிட்டு இரசித்தேன். ஷெல்லி இப்படி காதலை எழுதுகின்றான்,,,
The fountains mingle with the river
   And the rivers with the ocean,
The winds of heaven mix for ever
   With a sweet emotion;
Nothing in the world is single;
   All things by a law divine
In one spirit meet and mingle.
   Why not I with thine?—

See the mountains kiss high heaven
   And the waves clasp one another;
No sister-flower would be forgiven
   If it disdained its brother;
And the sunlight clasps the earth
   And the moonbeams kiss the sea:
What is all this sweet work worth
   If thou kiss not me?
நமது கவிஞன் இதை எப்படி எழுதினான் தெரியுமா? " ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உலகங்கள் நம்மை அன்றி வேறேதும் இல்லை. இப்போது நீங்களே சொல்லுங்கள், ஷெல்லியா, கண்ணதாஸனா? யார் சிறந்தவர் என்று. இன்னும் சொல்கின்றேன், இன்னுமொரு ஆங்கில கவிஞன் கீட்ஸ் ( Johan Keats) எழுதினான். "Heard melodies are sweet, but  those unheard are sweeter"! சொல்லென்றும் பொருள் என்றும், மொழியென்றும் இல்லை, சொல்லாத சொல்லுக்கு விலை யேதும் இல்லை.  இப்படி நமது கவிஞன் பாடினான், ஒப்பிட்டுப்பாருங்கள் எது அழகாக உள்ளது? ஆங்கில கவிகளைவிட, கண்ணதாஸனின் கவி ப்புலமையும், ஆளுமையும் ஒப்பிடமுடியாதது. நான் பேச நினைப்பதெ ல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடலை, உங்கள் காதல் மலர்ந்த, அந்த நாளோடு, ஒப்பிட்டு இரசியுங்கள்! மன்னிக்கவும் என் வாழ்வில் காதல் இல்லை, காதல் இல்லாது ஆனந்தம்  ஏது என்று நான் சொல்வதற்கு தகுதியானவன் தானே! இனி பாடலை கேளுங்கள்


திங்கள், 29 ஜனவரி, 2018

பாட்டும் பதமும் 21 மாறியது நெஞ்சம்!

பாட்டும் பதமும் 21 
மாறியது நெஞ்சம்! மாற்றியவர் யாரோ?  பேசாலைதாஸ்
இரசிக்கத்தெரிந்தவர்கள் இறைவனை எளிதில் காணக்கூடியவர்கள்! இயற்கையை பார்த்து இரசிக்கும் ஒரு இதயம்,  அப்பாடா எத்துனை இன்பம் வைத்தாய் இறைவா! என்று தன்னை அறியாமலே, தனக்குள் சொல்லிக்கொள்வதுண்டு. பெண்களை உற்று நோக்குங்கள், அவர்களின் உடல் அழகை, அவர்களின் இனிமையான வார்த்தைகளை கவனியு ங்கள், அவர்கள் பாசத்தோடு நோக்கும் பார்வையை பாருங்கள், இறைவ னின் கைவண்ணம் அங்கே தெரியும்! அவர்களை காமக்கண்களால் அளக்காமல், அவர்களை இரசித்துப்பாருங்கள், உங்களை அறியாமலே அவர்கள்பால் இனம்புரியா பாசம், அன்பு, காதல் எல்லாமே பிறக்கும். இரசிக்கத்தெரிந்தவர்கள், அன்புக்காக காரிகையிடம்      இரக்கத்தெரி ந்தவர்கள், தாம் இரசித்ததை மற்றவர்களும் இரசிக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இரசிக்கத்தானே இந்த மனசும், இந்த வாழ்க்கையும்! 

                                                                        1968 களில் வெளிவந்த பணமா பாசமா? என்ற கோபாலகிருஸ்ணன் இயக்கத்தில் உருவான படத்தில் ஒரு கவித்து வமான ஒரு பாடல் தான், மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ? இரசி க்கதக்க இசை, பாடல் இது! காவியத்தில், மன ஓவியத்தில், அவன் தூவி வைத்த விதம் என்ன?  என்ற கவித்துவமான வரிகளும், " ஆடை தந்து, தமிழ் வாடை தந்து, மணமேடை வந்தவனை கண்டு, ஆசை முந்திவர, நாணம்பிந்தி வர, பேசிப்பார்க்கும் நினைவுண்டு,,,அம்மம்மா,, இந்த நேரம், அந்த நெஞ்சில்பேசாலையில் இருக்கும் நெஞ்சில்,,,) என்ன நினைவோ?. காதல்வசப்பட்டாலே, வானம் வசப்படும்போது, காதல் வசப்பட்ட அந்த காரிகையை நினைத்துப்பார்க்கின்றேன்.    இனி பாட்டைக் கேளுங்கள்,,,,,


பாட்டும் பதமும் 20 யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல

பாட்டும் பதமும் 20
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல, அண்டகாக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் புரியல‌ பேசாலைதாஸ்
இந்த உலகம், அயோக்கியர்களாலும், போக்கிரி அரசியல்வாதிகளாலும் நிறைந்து இருக்கின்றது. யாரையும் நம்ப‌ முடிவதில்லை, உறவுகளே தக்க தருணம் பார்த்து மோசம் செய்கின்றார்கள். கயமை என்ற அதிகாரத்தில் 1071 குறளாக, வள்ளுவர் இப்படி பாடினார் " மக்களே போல்வர் கயவர், அவரன்ன ஒப்பாரில், யாங்கள்டதில்லை" கயவர்கள் மக்களிடம் முகம் தெரியாமல் சாதாரண மக்கள் போல, இருப்பார்கள் என்பதே அதன் அர்த்தம். இந்த குறளை அப்படியே தனது பாடலில் மிக எளிமையாக எழு தினார் கவிஞர். " மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா! மோசம் நாசம் வேசம் எல்லாம் நிறைந்திருக்குதடா! காலம் மாறும் வேசம் கலை யும், உண்மை வெல்லுமடா!"  எவ்வளவு இயல்பாக, எல்லாக்காலத்திற்கும் பொருந்த கூடிய விதத்தில் பாடலை எழுதியுள்ளார். இந்த பாடலை கண்ணதாசன் எழுதிய சூழலலை கவனித்தால் 1961 ஆண்டு வட சென்னை தேர்தலில், கவிஞர் கண்ணதாசன் ஆதரித்து, மேடை தோறும் முழங்கிய காங்கிரஸ் வேட்பாளர் தோற்றபோது, அவர் எழுதிய பாடல் இது. இப்பொழுது கூட, தமிழகதிலும் சரி, இலங்கையிலும் சரி, ஏன் நமது கிராமங்களின் உள்ளூர் தேர்தலிலும் இப்பொழுதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. உண்மைதான் பணம் பகட்டு இவை இருந்தால் போதும், அவன் எப்படிப்பட்ட கயவனோ, கள்வனோ, பெண் பித்தனோ என்னவாகவும் இருக்கட்டும் அவனை உலகம் போற்றுகின்றது. "பீடி எது, ஊதுவர்த்தி எது என்று உலகம் தெரியாமல் மயங்கி கிடக்கின்றது. நீங்களும் அப்படியா? இனி பாட்டைக் கேளுங்கள்,,,,,

பாட்டும் பதமும் 19 அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு

பாட்டும் பதமும் 19
அம்மாடி பொன்னுக்கு தங்கமனசு, பொங்குது இந்த மனசு!  பேசாலைதாஸ்
வரிகளுக்குள் வாக்கியத்தை சுருக்குவது, வரிக்குள் கதையை சொருகு வது, ஏன் வரிக்குள்ளே ஒரு காவியத்தை சுருக்க முடியுமென்றால்,  அது கவிஞன் கண்ணதாஸனால் மட்டுமே முடியும் என்பதை நான் தைரி யமாக ஒத்துக்கொள்வேன். ராமன் எத்தனை ராமனடி என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அறிவு தெளியாத சின்ன பையன் ஒருவன், பண்ணையார் வீட்டு பேரழகியின் எதார்த்தமான சிரிப்பில், தன்னை இழக்கின்றான், அவளுக்காகவே வாழ்கின்றான்,, திரைக்கதை இப்படி நீட்சி கொள்கின்றது. அந்த கதையை அப்படியே  உள்வாங்கி, அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு என்ற பாடலிலே, பூடகமாக உள்ளே புகுத்தினார் கவிஞர். பண்ணயார் வீட்டு பேரழகி, புன்னகை அரசி, சிரிப்பழகி யாரையோ (முத்துராமனை) பார்த்து சிரிக்க, அந்த சிரிப்பு தனக்குத்தான் என கேனத்தனமாக நினைக்கும், ஒரு அறிவு மங்கிய இளைஞன்( சிவாஜி) எண்ணங்கள், அதுதான் திரைப்படத்தின் கரு (main concept) இந்த பாட்டில் அப்படியே சுக்கி சொல்லுவார் கவிஞர். அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு, பொங்குது இந்த மனசு, கண்ணுக்கு நூறு வயசு, அவ சொல்லுக்கு நாலு வயசு.பார்த்தீர்களா அழகில் நூறு, வய‌தில் நாலு(குழந்தை) என்பதை சொல்லாமல் சொல்லும் கவி நுட்பம், என்னைப்போன்ற கேனத்தனமான இரசனையாளுனுக்கு வருமா? இன்னும் கேளுங்கள் சொல்கின்றேன். கவிகளுக்குள், "ஏ" அகரம் சேர்த்திருப்பார்கள். நிறைய "ஏ" அகரம் உண்டு. எண்னையில் எரியும் விளக்கு, அது என்னையே அழக்கும் சிரிப்பு, என்னமோ நடக்குது நடப்பு, இதில் ஏதோ, என்னவோ இருக்கு, யாருக்கு இந்த கதை புரியும்? சாமிக்கு மட்டும் இது புரியும், ஏழைக்கு வந்த அந்த நினைப்பு, செல்வத்தில் வந்த பின்பு கனவு",,,,,,,கிட்டதட்ட என் சொந்த காதல் கதையும் இது போலத்தான்,,,,, இனி பாட்டைக் கேளுங்கள்,,,,,



வெள்ளி, 26 ஜனவரி, 2018

பாட்டும் பதமும் 18, என்கிருந்தோ ஒரு குரல் வந்தது!

பாட்டும் பதமும் 18
என்கிருந்தோ ஒரு குரல் வந்தது!  பேசாலைதாஸ்
காலத்தால் செய்த உதவி ஞாலத்தில் மானப்பெரிது இது வள்ளுவன் வாக்கு. செய்த உதவிக்கு நன்றியாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அருமையான பாடல். உதவி யாரால் வந்தது என்பது அறியாமல், செய்த உதவிக்கு நன்றியாக இருப்பதை எடுத்துக்காட்டு வதாக இந்த பாடல் அமைகின்றது. இந்த பாடலில் ஒரு வரி வரும் " மாளிகையிலே ஒரு மதி வந்தது, அது எந்த வானத்து நிலவோ" என்று கவிஞர் பாடுவார். நமக்கு தெரிந்த வானம் ஒன்றே! ஆனால் கவிஞனுக்கோ அண்ட சராசரத்திலே ஆயிரம் வானங்கள் இருப்பதை மிக துள்ளியமாக விளக்குகின்றார். இது போல இன்னொரு வரிவரும் " கங்கையிலே புது புனல் வந்தது, அது எந்த மேகம் தந்த புனலோ?  மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ" பெண்களிடம் காம உணர்வு வந்துவிட்டாலே, அவர்கள் அனலாக, வெது வெதுப்பாக இருப்பார்கள். அப்படியே இறுக, அணைத்து சுகம் காணும்போது, அனல் இன்னும் அதிகமாக இருக்கும், அந்த அனல் ஆணிடம் இருந்து வருகின்றதா? இல்லை பெண்ணிடம் இருந்து வருகின்றதா? என்பதில் ஒரு மயக்கம்! அப்பாடா! அனல், புனல் என்ன ஒப்பு உவமாணங்கள் இப்படி கற்பனையில் மிதக்க கவிஞன் கண்ணதாசனால் மட்டுமே முடியும்! இனி பாட்டைக்கேளுங்கள்!

பாட்டும் பதமும் 17 பூ முடிப்பாள் இந்த பூங்குழலி!

பாட்டும் பதமும் 17
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி! பேசாலைதாஸ்

கண்ணதாசானின் இலக்கிய ஆளுமையை அவன் எழுதிய பாடல்க ளில் ஆங்காங்கே விரவி நிற்பதை, இலக்கிய பிரியர்கள் கண்டு வியந்து போற்றுகின்றனர். கண்ணதாசன் மரபுவழியாக, அல்லது முறையாக கல்வி கற்றவர் கிடையாது. ஆனாலும் அவரது இலக்கிய நாட்டம் எத்து ணை விசாலமானது என்பதி அவன் எழுதிய பாடலில்கள் காணலாம்.  பூ முடிப்பாள் இந்த‌ பூங்குழலி என்ற பாடலில் ஒவ்வொரு சொற்களும், பெண்மையின் உயர்வை போற்றுவதோடு, நிற்காமல், ஒவ்வொரு சொ ற்களும் இரு பரிமாணம், முப்பரிமாணம் பெற்று வருகின்றது, உதார ணமாக பெண்ணை அருவி என்று வர்ணித்து, பின்னார் தேனையும் அதில் இணைத்து, தேனருவி என்று இரட்டை பரிமாணத்துக்கு சென்று, அதுவும் போதாது என்று, வண்ணத்தேன் அருவி என்று முப்பரிமாண த்துக்கு போய் ஒரு பெண்ணை மிக எளிதாக வர்ணிக்க, கண்ணதாச னைவிட யாரால் முடியும் சொல்லுங்கள்? தண்ணீர் கொட்டினால், சப்தம் செய்யும், ஆனால் தேனை கொட்டிப்பாருங்கள் சப்தம் செய்யாமல் வழித்தோடு எந்த சலசலப்பும் இல்லாமல்,. கவிஞன் கண்ணதாசன் பிரயோகிக்கும் ஒவ்வொரு சொல்லும், ஆழம் கொண்டவை மிக எளிய சொற்கள்! நீங்கள் தாகூரின் கவிதைகளில் மதிமயங்கியதுண்டா? தாகூரின் கவிதை இப்படி போகின்றது,,,, "என் கவிதைக்காதலியே! என்னிடம் நீ சரசமாட வருகின்றபோது, உன் அணிகளங்களை கழற்றிவிட்டு வா! அவை எழுப்பும் சப்தம் எனக்கு உவப்பாய் இல்லை!" எந்தவொரு பகட்டும், அலன்காரமும் இல்லாமல் கவிதையை கிக எளிமையாக இரசிக்க பாரத தேச கவிஞன் தாகூரினால் முடிகின்றது, அதுபோலவே கண்ணதாசனும் க்விதைகளை மிக எளிய சொற்களால் வர்ணித்தது எழுதினான், இந்த பாடலை மனம் விட்டு இரசியுங்கள் அப்போது நீங்கள் என்னோடு உடன்படுவீர்கள். அன்புடன் பேசாலைதாஸ்



புதன், 17 ஜனவரி, 2018

பாட்டும் பதமும் 16 பார்த்தால் பசுமரம்

பாட்டும் பதமும் 16
பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம்! பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசனை எப்படிப்பார்க்கலாம்? கவிஞனாக‌வா? எழுத்தாளனாகவா? தத்துவவாதியாகாவா? அல்லது ஒரு சித்தனாகவா? கவிஞனின் சில பாடல்களை கேட்டால், அவனை ஒரு சித்தன் என்று அழைத்தால் கூட, தப்பில்லை. வாழ்க்கை நிலையாமை, மாஜை இப்படி எல்லாம் சிந்திக்க கவிஞானால் முடிகின்றது. மனிதனின் உலலைப்பற்றி மிக எளிமையாக பாடினான். பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால் நெடுமரம் என்று,,,“காயமே இது பொய்யடா/ வெறும் காற்றடித்த பையடா/ மாயனாராம் மண்ணு குயவன் செய்த/ மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் பாடிய ஞானப் பாட்டையும்,  “கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு/ காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு/ எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்/ எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” – என்ற குணங்குடி மஸ்தானின் ஞானத் தத்துவத்தை எல்லாரும் புரிகின்ற மொழியில்“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம் சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?”

வெள்ளி, 12 ஜனவரி, 2018

பாட்டும் பதமும் 15 வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது! பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 15 
வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது!  பேசாலைதாஸ்
அன்பர்களே! உறவுகளினால் இணைக்கப்பட்டதே வாழ்க்கை! ஆனால் இன்றைய உறவுகளுக்கு ஆர்த்தம் ஏது? வறுமை வந்தால் உறவுகள் எல்லாம் பறந்து, மறந்து போகின்றன. ஒளவையாரின் வாகுண்டாம் என்ற நீதி நூலிலே ஒரு பாடல் உண்டு. அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவைபோல, ஊற்றுழித்திரிவார் உறவல்ல, அக்குளத்தில் கொட்டியும், ஆம்பலும் , நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு. அதாவது வற்றிய குளத்தை விட்டு, நீர்ப்பறவைகள் பறந்துவிடும் ஆனால் அக்குளத்திலே இருக்கின்ற கொட்டி, ஆம்பல், நெய்தல் செடிகள், குளம் வற்றினால் அதனோடு கிடந்து, குளம் பெருக்கெடுக்கும் போது செழிப்பாய் வளர்ந்து, உறவைக்காத்துக்கொள்ளும். அதுபோலவே பாசமுள்ள உள்ளங்கள், வறஉமை, செல்வம் இவைகளை வைத்து உறவை எடைபோடாது. இந்த கருத்தை, வற்றிய குளத்தை பறவைகள் நாடி, வருவதுகிடையாது, வாழ்க்கையில் வறுமை வருகின்றபோது உறவுகள் கிடையாது என்று கவிஞர் அழ்காக எழுதினார் இனி பாடலை செவிமடுங்கள்!

வியாழன், 11 ஜனவரி, 2018

சின்னப்பெண் ஆன போதிலே! ஆங்கில இசையில் வந்த தமிழ் பாடல்

சின்னப்பெண் ஆன போதிலே! ஆங்கில இசையில் வந்த தமிழ் பாடல் பேசாலைதாஸ்

அன்பர்களே! நான் என் பிள்ளைகளுடன் இசை பற்றி உரையாடும் போது, அவர்கள் ஆங்கிலப்பாடல் மற்றும் நோர்வே மொழிப்பாடல் பற்றிய உயர்வை என்னிடம் சொல்வார்கள், நானும் இப்பொழுது ஆங்கில பாடல்களை விரும்பி கேட்பதுண்டு, அதிலும் Melody, Classical music என்னை கவர்ந்தவை. ஒருமுறை ஹிட்ச்காக்கின் படம் The Man who knew too much.  படத்தை பார்க்க நேரிட்டது இதில் டோரிஸ் டே பாடிய பாடல் Che sara, Che sara. என்ற பாடல் அப்படியே தமிழ் சினிமாவிலும் வருகின்றது- Che sara, sara என்ற இந்த வார்த்தை கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் ஃபாஸ்டஸில் வரும் வார்த்தை. Che sara, sara is a latin world which means What ever will be will be. என்ன நடக்குமோ அது தான் நடக்கும். அந்த பாடலின் வரிகள் இது.
When I was just a child
I asked my mama what will I be?
Will I be a doctor? Will I be an actor?
This what she said to me
Che sara, sara
Whatever will be will be
Future is not ours to see
Che sara, sara


When I just enter school
I asked my teacher
What will I be?
Will I be a major
Will I be a Colonel
This what she said to me
Che sara, sara
Whatever will be will be
Future is not ours to see
Che sara, sara Che sara sara


When I just enter teens
I asked my sweet heart 
What will I be?
Will I be a rainbow day after day
This what she said to me
Che sara, sara
What ever will be will be
Future is not ours to see
Che sara, sara
Che sara, sara, Che sara, sara

’ஆரவல்லி’ படத்தில் எஸ்.ஜி.ஈஸ்வர்,  மைனாவதி ( பண்டரி பாய் தங்கை) இருவரும் பாடுவதாக வரும் பாடல்

”சின்னப்பெண் ஆன போதிலே என் அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? அம்மா நீ சொல் என்றேன். வெண்ணிலா, நிலா என் கண்ணல்லவா கலாஉன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காண் நிலா.”
Che sara மெட்டிலேயே அமைந்த பாடல். உங்களுக்காக ஆங்கிலப்பாடலையும் தமிழ்பாடலையும் தருகின்றேன்.


சிட்டுக்குருவியும் பைந்தமிழ் இலக்கியமும் சினிமா பாடலும் ஒரு பார்வை!

சிட்டுக்குருவியும் பைந்தமிழ் இலக்கியமும் சினிமா பாடலும்  ஒரு பார்வை! பேசாலைதாஸ்
காக்கா, குருவி, சேவல், மயில், குயில் இவை எல்லாம் நம் தமிழர் வாழ்வில் இரண்டரக்கலந்தவை! கான் மயிலாட கண்டிருந்த வான் கோழி, தன் பொல்லாச்சிறகடித்து ஆடினால் போலுமே, கால்லாதான் கற்ற கவி என்ற செய்யுளும், காக்கா பறந்துவா, கண்ணுக்கு மை கொண்டுவா என்ற பாப்பா பாடலும், குயிலின்  ஓசையில் மன மகிழ்ந்த கவிஞர்கள் இயற்றிய பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் நிறையவே இருக்கின்றன. இதே போல ‘சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’ எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா பாடல்கள் மூலம் நாம் உணரலாம்.
                                                                                                             மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப் பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி வாழ்ந்தார்கள். இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு இயற்கையைப் போற்றவும் செய்தனர். தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி, தன் துணை முட்டையிடுவதற்கு மென்மையான படுக்கையமைத்த நிகழ்வு குறுந்தொகைப் பாடல் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவியிடம் ஊடல் கொண்டு பரத்தையிடம் சென்ற தலைவன் தலைவியிடம் மீண்டும் சேர விரும்பி ஊடலை நீக்கப் பாணனை அனுப்புவதைப் பதிவுசெய்யும் அந்தப் பாடலை எழுதியவர் வண்ணக்கன் தாமோதரனார்.


யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல்முதிர் பேடைக்கு ஈன்இல் இழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே

(குறுந்தொகை, 85).

மருதத் திணையினைச் சார்ந்த இப்பாடலின் பொருளானது, சிட்டுக் குருவிக் குடும்பம் ஒன்றில் காதல் வாழ்க்கை நடத்துகின்றது. ஊரினுள் வாழும் துள்ளல் நடையினை உடைய ஆண் குருவி, கர்ப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு நல்ல இடத்தை அமைத்துத் தரும் பொருட்டு, சாறு பொதிந்த இனிய கோலை உடைய கரும்பினது மணம் வீசாத வெண்மையான மென்மையான பூக்களைக் கோதி எடுக்கும் புது வருவாயை உடைய ஊருக்குத் தலைவன். இப்பாடலின் மூலம் சிட்டுக் குருவியின் உயரிய பண்பு வெளியிடப்படுகிறது. தோழி தலைவனிடம் தவறினை நினைத்து வருந்துமாறு கூறுகின்றாள். இதோ அந்த பாடல்!


சைலோபோன் [ xylophone ] இசைக்கருவியும் தமிழ் சினிமா பாடல்களும்

சைலோபோன் [ xylophone ] இசைக்கருவியும் தமிழ் சினிமா பாடல்களும்  பேசாலைதாஸ்

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி ,17 ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க அடிமைகளால் மத்திய அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.மரக்கட்டைகளால் உருவான இந்த வாத்தியம் தாள ஒலியுடன் இணைந்து காதுக்கு இனிய ஒலியை தரும் இயற்கையான,ஆபிரிக்க நாட்டுப்புற இசைக்கருவியாகும்.

காலனி காலத்தில் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கநாடுகளில் புகழபெற்ற இந்த வாத்தியம் சில நாடுகளில் பிரதான வாத்தியமாகப் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக குவாட்டமாலா நாட்டின் தேசியவாத்தியம் என்று சொல்லும் அளவுக்கு பெயர்பெற்று விளங்குகிறது. இந்நாடுகளில் இதனை Marimbo என்று அழைக்கின்றனர்.

மெக்சிக்கோவில் சிலமாற்றங்களை பெற்ற இந்த வாத்தியம், மத்திய அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது..லத்தீன் அமெரிக்க வாத்தியம் என அறிமுகமாகி , பின் வட அமெரிக்காவில் [USA] மேலைத்தேய இசையில் பயன்பட தொடங்கியது.

மத்திய அமெரிக்காவின் வீதியோர இசைக்கருவியாக மட்டுமல்ல, பெரிய இசை நிகழ்ச்சிகளிலும், பின் 1940களில் ஐரோப்பிய உயர் இசையான “சிம்பொனி “இசை வரையும் பாவனைக்கு வந்துவிட்டது.

1960 களில் தமிழ் திரையில் பயன்பாட்டுக்கு வந்த இந்த இசைக்கருவியை அதிகம் பயன்படுத்தி காதுக்கு இனிமையான பாடல்களைத் தந்தவர்கள் மெல்லிசைமன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர் என்று துணிந்து கூறலாம். மதுரா நகரில் தமிழ் சங்கம்  இந்தப்பாடலின் ஆரம்ப இசையிலேயே , குழலுடன் இணைத்து Xylophone ஐ மிக அருமையாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.பாடலின் இனிப்புக்கு முத்தாய்ப்பாக இந்த வாத்தியத்தையும் இணைத்து தருகிறார்கள். பாடலை கேளுங்கள் அன்பர்களே!

செனாய் வாத்திய இசைக்கருவியும் தமிழ் சினிமா பாடல்களும்

செனாய் வாத்திய இசைக்கருவியும் தமிழ் சினிமா பாடல்களும்  பேசாலைதாஸ்
புதுப்புது வாத்தியங்களை சலன மின்றி அறிமுகம் செய்த மெல்லிசை மன்னர்கள் வட இந்திய இசைக்கருவியான செனாய் வாத்திய இசைக்க ருவியை பயன்படுத்திய பங்கு விதந்துரைக்கத் தக்கது.ஏற்கனவே இந்தி த்திரையிசையில் வேரூன்றி விருத்தி பெற்ற இக்கருவியை ஆங்காங்கே ஒரு சில பாடல்களி லும் ,பெரும்பாலும் சோகக்காட்சிகளிலும் பிற இசை யமைப்பாளர்களும் பயன்படுத்தி யிருக்கின்றனர்.
                                                       தமிழ் சூழலில் செனாய் சோக உணர்வை தரும் வாத்தியமாக கருத்தப்பட்டுவந்த சூழ்நிலையில் அபூர்வமாக ஒரு சில பாடல்களும் வெளிவந்தன அந்நிலையில் “சோகக்காட்சியா” ? கொண்டுவா செனாய் வாத்தியக்கருவியை ” என அன்றிருந்த ஒரு கால கட்டத்தில் அந்த வாத்தியத்தை அதிகமான மகிழ்ச்சிப்பாட ல்களிலும் வைத்துக்காட்டி பெருமை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்றால் மிகையில்லை.
                                                                இன்ன வாத்தியம் இன்ன உணர்வைத்தான் பிரதிபலிக்கும் என்ற வரையறைகளைத் தாண்டி ,”அவற்றின் எல்லை இது தான் ” என்று முன் சொல்லப்பட்ட கருத்துக்களை மீறி புதிய கோணங்களில் பயன்படுத்தி னர். இன்னொருமுறையில் சொல்வதெ ன்றால் தலைகீழ் விகிதத்திலும் பயன்படுத்தினார்கள் எனலாம் . செனாய் வாத்தியத்தை காதல்பா டல்களில் மட்டுமல்ல ,பலவிதமான பாடல்களிலும் புதுமுமையாகப் பயன்படுத்தி வியக்க வைத்த ஒரு காதல் பாட்டு “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்” – பாலும் பழமும் [1961]
                           இந்தப் பாடலின் இசையில், அதன் இனிமையில் செனாய் பயன்பட்டிருப்பதை பலரும் கவனித்தருக்க மாட்டார்கள்.அதை உற்று நோக்கிக் கேட்கும் போது மட்டுமே அதன் இன்பத்தை நாம் அனுபவிக்க லாம்.பாடலின் பல்லவியின் முடிவிலும் , சரணத்திலும் செனாய் வாத்தியத்தின் குழைவையும், இனிமையும் வியக்கலாம். பாடலின் பல்லவி முடிந்தவுடன் காலையை குளிர்ச்சியுடன் வரவேற்கும் செனாய் இசையை இன்பப்பெருக்காகத் தருகிறார்கள். இப்பாடலின் முடிவில் “அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன் ” வரிகளை தொடரும் வயலின் இசையும் , புல்லாங்குழல் இசையும் சம்போகம் செய்து இன்ப மாய்ப் புலரும் இனிய கலைப்பொழுதை இதமாக வருடிக் கொடுக்கி ன்றன. காலைப்பொழுது இருக்கும்வரை இந்தப்பாடல் இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இருக்க முடியாது.


கண்ணதாசனின் முதல் பாடல்

கண்ணதாசனின் முதல் பாடல்  பேசாலைதாஸ்

காரைக்குடி சிறுகூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசன் வறுமையின் நிமித்தமாக சென்னைக்கு பிழைப்பு தேடிவந்தவர். மார்டன் தியேட்டரில் திரைக்கதை எழு துவதற்கு வாய்ப்பு தேடிய பொழுது, கன்னியின் காதலிக்கு பாடல்கள் எழும் வாய்ப்பு கிட்டியது. கன்னியின் காதலி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்க த்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகமான பன்னிரண்டாவது இரவு என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது இத்திரைப்படம். என். டி. சுந்தரத்தின் வசனத்திலும் வேதாந்தம் ராகவய்யாவின் நடனப்பயிற்சியிலும் உருவான இத்திரைப்படம் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எல். வசந்தகுமாரி பின்னணி பாடினார். கண்ணதாசனின் முதல் பாடலை இதோ உங்களுக்காக தருகின்றேன்.

புதன், 10 ஜனவரி, 2018

கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ்

கரகரப்பிரியா ராகத்தில்  சினிமா பாடல் பேசாலைதாஸ்

கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்கும் இந்த ராகம் இனிமையும் ,பேரெழிலும் நிறைந்தது.நாதஸ்வரத்தில் இந்த ராகத்தைக் கேட்பவர்கள் இலகுவில் மனதை பறி கொடுத்து விடுவார்கள் என்ற அடித்துக் கூறலாம்.விரிவான ஆலாபனைக்கு ஏற்ற ராகமாக விளங்குவதால் ஆற்றல்மிக்க கலைஞர்களுக்கு தங்கள் வித்துவத்தைக் காண்பிக்க ஏதுவான ராகம்.

செவ்வியல் சட்டகங்களைக் கொஞ்சம் தளர்த்திப் பார்த்தோமானால் இந்த ராகம் நாட்டுப்புற இசையிலிருந்து பிறந்தது என்பதை இலகுவில் கண்டு விடலாம்.பழம் பெரும் தமிழ் ராகமான இன்றைய கரகரப்ரியா ராகத்தின் ஆதிகாலத் தமிழ் பெயர் படுமலைப்பண் என்பதாகும்.

பன்னெடுங்காலமாக தமிழ் மக்கள் பழகி வந்த ராகங்கள் பக்தி இசையில் திருப்பப்பட்டு , ஆட்சி மாற்றங்களுடே சம்ஸ்கிருத மயப்பட்டு தமிழ் பெயர்கள் எல்லாம் மாற்றப்பட்டு தமிழ் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போயின.

என்னதான் ராகங்களின் பெயர்களை மாற்றினாலும் அதில் உள்ள‌ இனிமையை மக்கள் மறந்தாரில்லை.

தமிழ் திரை இசையும் கரகரபிரியா ராகத்தை விட்டு வைக்காமல் .மிக நல்ல பாடல்களைத் தன் பங்கிற்கு தந்துள்ளது எனக்கு பிடித்த கரகரப்பிரியா ராகத்தில் அமைந்த பாடல் இது மாவி பொன் மயிலால் என்ற பாடல். வண்ண மோகினி, என் நடனப்போரொளி என் கனவுக்கன்னி பத்மினியின் ஆட்டம் இப்பாடலுக்கு இன்னும் பெருகூட்டுகின்றது ஆடலுடன் பாடலை கேளுங்கள்!.

பாட்டும் பதமும் 14 "பால் வண்ணம் பருவம் கண்டேன்" பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 14    "பால் வண்ணம் பருவம் கண்டேன்" பேசாலைதாஸ்
அன்பர்களே கவிஞர்கள் எழுத்தாளர்கள் சிந்தனைவாதிகள் இவர்களுக்கெல்லாம், இதிகாசங்கள்  பழைய இலக்கிய படைப்புகள், உத்துசக்தியாக அமைவதுண்டு. கவிஞர் கண்ணதாசனுக்கு கம்பராமாயணம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை இங்கே எடுத்துக்காட்டுகின்றேன்.
இராமர் வனத்திலே தவமிருக்கும் போது, தாடகை என்ற பெரும் அரக்கியை தனது வில்லினால் விழுத்தினான். அதனை கண்ட விசுவாமித்திரர் இராமனின் கை வண்மையை வியந்தார். பின்னர் இன்னுமொரு சந்தர்ப்பத்தில், இராமனின் கால் பட்டதால், கல்லாயிருந்த‌ அகலிகை சாபவிமோசனம் அடைகின்றாள். இதனை பார்த்த விசுவாமித்திரர் " இராமா உன் கை வண்ணம், அங்கே கண்டேன், கால் வண்ணம் இங்கே கண்டேன்" என்கின்றார். கம்பரின் இந்த செய்யுள் வரிகளை கண்ணதாசன் வேறு ஒருவிதமாக பால்வண்ணம் பர்வம் கண்டேன் என்று பாடினார். இப்போது பாட்டை கவனியுங்கள்!

0013நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்"?

பாட்டும் பதமும் 13   " நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன்"?  பேசாலைதாஸ்

அன்பர்களே! கவிஞர் கண்ணதாசன் தன் பாடல்களுக்கு கருப்பொருளாக பழந்தமிழ் இலக்கியங்களை கையாண்டு அதனை தன் எளிய நடையில் சொல்லி புரிய வைக்கும் அசாத்திய‌ திறமை அவன் ஒருவனுக்கே உண்டு.  நளவெண்பா காப்பியத்தில் 184 வது பாடல் இப்படி வருகின்றது
"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து."     இந்த செய்யுளின் பொழிப்பு இப்படி அமைகின்றது. மலர் கொய்யச் சென்ற மங்கை ஒருத்தியின் அழகு முகத்தைத் தாமரை மலரென்று எண்ணி வண்டுகள் வட்டமிட, அவற்றைத் துரத்தும் நோக்கோடு, தன் அழகிய கரத்தை முகத்தருகே கொண்டுவர, விரல்களைக் காந்தள் மலரென்று (கார்த்திகைப்பூ) நினைத்த வண்டுகள் இப்போது விரல்களை நோக்கிப் பாய, செய்வதறியாது அப்பெண் பயத்தில் வேர்த்து நின்றாளாம். என்ன ஒரு அழகிய கற்பனை! இந்த பொழிப்பை வாசித்தவுடன் சட்டென்று இந்த பாடல் வரிகள் உங்களுக்கு வந்திருக்கவேண்டுமே? 
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற... இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் இரு வல்லவர்கள் அன்பர்களே இப்போது பாட்டைக்கேளுங்கள்!

பாட்டும் பதமும் 12 ‘என்ன பார்வை உந்தன் பார்வை -இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 12  
‘என்ன பார்வை உந்தன் பார்வை -இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ பேசாலைதாஸ்
அன்பர்களே நான் கவியரசு கண்ணதாசனை எழுத்துச்சித்தன் என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன் அல்லவா! சொற்களை மிக வித்தையாக பாவிக்கம் உன்னத கலைத்திறமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இதோ!

‘என்ன பார்வை உந்தன் பார்வை -இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற பாடலில், சிறு குசும்புடன் ஓர் இலக்கிய நயம் அமைந்துள்ளது. ‘பார்வை” என்ற வார்த்தையின் இடை எழுத்து - இடையின எழுத்து ‘ர்’ மெலிந்து மறைந்ததால் ‘பாவை’ ஆகிவிட்டது. காதலன் பார்வை பட்டு இடை மெலிந்தாள் பாவை என்பது எப்பேர்ப்பட்ட வார்த்தை ஜாலம்! பாவைக்கும், பார்வைக்கும் ஒரு எழுத்துத்தான் மறைந்துள்ளது. ஆனால் கவிஞன் இங்கு என்ன செய்கின்றான்? காதல் தலைவனின் பார்வை பட்டுத்தான் அந்த "ர்" என்ற எழுத்து மறைந்து காதல் தலைவி மெலிந்து பாவை ஆகிவிட்டாள் என்று சொல்லாமல் சொல்கின்றான் கவிஞன் அப்பாடா என்னே திறமை என் கண்ணதாசனுக்கு? பாடலை உண்ணிப்பாக கவனியுங்கள் இசை உள்ளங்களே!

0011ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்

பாட்டும் பதமும் 11  
ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்  பேசாலைதாஸ்
அன்பர்களே இலக்கியத்திலே கவிதை எழுதும் போது அல்லது ஒரு கவிதையை படிக்கும் பொது, உவமை உவமானம், உயர்வு நவிற்சி, அன்மொழித்தொகை, தொக்கி நிற்கும் கருத்துக்கள், தொடை அந்தாதி, சந்தம் இப்படி ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. இலக்கிய திறனாய்வு செய்பவர்களுக்கு இது எளிதாக புரியும்.
திரைப்பாடல்களில் அந்தாதித் தொடை என்பது மிக அரிதான விஷயமே. அதுவும், ஒரே படத்தில் இரண்டு பாடல்களை அந்தாதியில் அமைக்க ஓர் அசுரத் திறமை வேண்டும். அது நமது கவியரசருக்கு வாய்த்திருந்தது. ‘மூன்று முடிச்சு” படத்தில் வரும் பாடல்களில்,

‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் -

நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்-

நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்-

கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்’என்றும்..

‘ஆடி வெள்ளி தேடி உன்னை நானலைந்த நேரம் -

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்-

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்-

ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்’ என்றும் அந்தாதித் தொடைகள் அணிவகுத்து நம்மை அசர வைக்கும். ‘வசந்தகால நதிகளிலே’ பாடலில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், கமல், தேவி இருவரும் காதலில் மயங்கிக் கிறங்கும் பாடலாதலால், 13 இடங்களில் ‘கள்’ என்ற வார்த்தையைப் பிரயோகித்திருப்பான் அப்பெருங்கவி. அன்பர்களே இப்போது பாடலை கவனமாக கேளுங்கள் என்னோடு நீங்கள் உடன்படுவீர்கள்


0012நேற்றுவரை நீயாரோ நான் யாரோ?

பாட்டும் பதமும் பகுதி 10
நேற்றுவரை நீயாரோ நான் யாரோ? பேசாலைதாஸ்
உலகத்தில் இனம், மதம், மொழி எல்லாவற்றையும் கடந்து தோன்றும் உணர்வு தான் "காதல்" என்ற உணர்வே. முன் பின் தெரியாத ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது, தம் உணர்வுகளிற்குள் இனம் புரியாத பற்றுப் பாசம் பின்னிப் பிணைந்து; ஒரு வித துடிப்பு ஏற்படுகிறது! இந்தத் துடிப்பு முன் பின் உணராத 
துடிப்பாகவும், புதுமையான தாகவும் ஏற்பட்டு விடுகிறது. இத்தனைக்கும் இவர்கள் எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ சந்தித்திருப்பார்கள். இருப்பினும் இந்த உணர்வுகள் 
சந்தித்துக் கொள்கிறது. ஒன்றை ஒன்று கவ்வியும் கொள்கிறது. சங்ககால  குறுந்தொகைப் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது:............. 

"யாயும், ஞாயும் யார் ஆகியரோ 
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளீர்! 
யானும் நீயும் எவ்வழி அறிந்தும் 
செம்புலப் பெயல் நீர் போல 
அன்புடை நெஞ்சம்தான் கலந்தனவே" 

"நான் யாரோ? நீ யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? எந்தவகை உறவும் இல்லாதவர்கள். ஆனாலும் நானும் நீயும் செம்பாட்டு மண்ணில் நீர் கலந்து, அந்த மண்ணில் ஒன்றாகி ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது போல்; நம் இருவருடைய அன்பும் ஒன்று கலந்து விட்டதே" 
என்கின்றான் அந்த காதல் தலைவன். இது உலகியல்."காதல்" உயிர் வாழும் எல்லா இனங்களிற்கும் இருந்து விடுகிறது. " காதல், 
காதல், காதல்! காதல் போயிற் சாதல், சாதல்"...என்றான் பாரதி. 

காதல் இல்லாத இலக்கியங்களே இல்லை எனலாம். இலக்கியங்கள் யாவும் மனித வாழ்வைப் பின்னிப் பிணைத்துக் காட்டுகின்றன. சங்க கால இலக்கியங்களில் எங்கு பார்க்கும் போதும் காதல்தான் 
நிறைந்திருக்கின்றன. சங்க கால இலக்கியத்தை எளிமைப்படுத்தி இலகு தமிழில் எடுத்து வருகின்றன அநேகமான திரை இசைப் பாடல்கள். பாமரரும் புரியும்படி கவி கொடுத்த, பாரதி வழிவந்த கண்ணதாசனும் பல திரை இசைப் பாடல்களில் இணைத்திருக்கிறார். அந்த வகையில் இந்தக் குறுந்தொகைப் பாடலை  கண்ணதாசன் இப்படிக் கொடுத்திருக்கிறார். 

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ 
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ 
காணும் வரை நீ எங்கே நான் எங்கே 
கண்டவுடன் நீ எங்கே நான் அங்கே. 

என்று "வாழ்க்கைப் படகு" படத்தில் இலக்கியக் காதலைப் புகுத்தியிருக்கிறார். அதே வேளை இந்தப் பாடலில் கண்ணதாசன் வள்ளுவனின் குறள் தரும் இலக்கியத்தையும் இணைத்திருக்கிறார் இப்படி:............ 

"யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக் கால் 
தான் நோக்கி மெல்ல நகும். 

என்றான் வள்ளுவன். காதலிற்கு மெருகூட்டுவது "நாணம்" என்ற பொருளாகும். காதல் வயப்பட்ட  ஆணும், பெண்ணும் பேசிக் கொள்ளும் போது, ஆணானவன் நிமிர்ந்து பெண்ணின் முகம் பார்த்துப்  பேசிக் கொள்வான். ஆனால் பெண்ணானவள் ஆண் தன்னைப் பார்க்கும் போது நிலம் பார்த்து காலால் கோலம் போட்டு கொள்வாள். அதேவேளை ஆண் தன்னைப் பாராத நேரம், அவனைப் பார்த்து சந்தோஷித்துக் 
கொள்வாள். இது காதலில் பெண்மையின் சிறப்பு. அவள் நாணுவதில் காதலில் பெருமை பின்னிப் பிணைந்து இருக்கிறது. அதுவே ஒரு பெண்மைக்கும் சிறப்பு என்கிறான் வள்ளுவன்.  இதையே கண்ணதாசன் இந்தப் பாடலில் இப்படிக் கூறுகிறார். 

"உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே ! 
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே ! 

என்று மிகவும் அழகாகவும், நல்ல நயத்துடனும் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறியிருக்கிறார். 


0010என் இசை நிலா!

பாட்டும் பதமும் பகுதி 09 
என் இசை நிலா! பேசாலைதாஸ்
அன்பர்களே அது என்னவோ எனக்கு தெரியாது நிலா என்றால் எனக்கு கொள்ளை பிரியம்! துருவ நாடாம் ப்னிபடர்ந்த நோர்வே நாட்டில் கிட்டதட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். வெள்ளிப்பனி மலை நடுவே அந்த வெண்ணிலாவை காதலிப்பதில் என்னே இன்பம்! என்னிலா ஆசைகள் அதை சொல்வாய் வெண்ணிலா, நிலா இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!
அன்பர்களே அது என்னவோ எனக்கு தெரியாது நிலா என்றால் எனக்கு கொள்ளை பிரியம்! துருவ நாடாம் ப்னிபடர்ந்த நோர்வே நாட்டில் கிட்டதட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். வெள்ளிப்பனி மலை நடுவே அந்த வெண்ணிலாவை காதலிப்பதில் என்னே இன்பம்! என்னிலா ஆசைகள் அதை சொல்வாய் வெண்ணிலா, நிலா இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!அன்பர்களே அது என்னவோ எனக்கு தெரியாது நிலா என்றால் எனக்கு கொள்ளை பிரியம்! துருவ நாடாம் ப்னிபடர்ந்த நோர்வே நாட்டில் கிட்டதட்ட முப்பது வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். வெள்ளிப்பனி மலை நடுவே அந்த வெண்ணிலாவை காதலிப்பதில் என்னே இன்பம்! என்னிலா ஆசைகள் அதை சொல்வாய் வெண்ணிலா, நிலா இந்த பாட்டுக்குப் பின்னால் ஒரு கதை உண்டு...
மெல்லிசை மன்னர் MSV ஒரு ட்யூனைக் கொடுத்து, இதுக்குப் பாட்டு எழுத வேணும்னு கவியரசர் கண்ணதாசனைக் கேட்டுக் கொண்டாராம்.
லா லலா லலா லலா - லலால லாலலா!

கண்ணதாசன்: டேய் விசு! என்னது இது?
நீ பாட்டுக்கு ல லலா, லா லலான்னு வாயாலயே வேகமாச் சொல்லிட்டே! இதுக்கெல்லாம் பாட்டு எழுத முடியாது! அதுக்குன்னு வார்த்தை வரவேணாமா?
விஸ்வநாதன்: அண்ணே சரியாத் தேடிப் பாருங்கண்ணே! கிடைக்கும்!

கண்ணதாசன்: எனக்கு என்னமோ இது சரியா வரும்-னு தோனலை...நீ வேற ட்யூன் போடுடா!
விஸ்வநாதன்: இதப் பாருங்க செட்டியாரே! இது தான் ட்யூன்! இதுக்கு எழுத முடிஞ்சா எழுதுங்க! இல்ல நான் இதுக்கு மட்டும் வேற கவிஞர வச்சி எழுதிக்கறேன்!
(இப்படி ஒரு அன்பு ஊடல் அவர்களுக்குள். இதெல்லாம் கண்ணதாசன்-விஸ்வநாதன் விஷயத்துல சகஜம்-னு இண்டஸ்ட்ரிக்கே தெரியும்!)

கண்ணதாசன்: டேய்...அப்படி எல்லாம் போயிடாதே! சும்மா உன்னைக் கிண்டல் பண்ணேன். இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ...
என்னமோ பெருசா லா, லா, லா, லு-ன்னு ட்யூனைக் கொடுத்தியே! பாரு நானும் லா, லா, லா, லா ன்னே வச்சி எழுதறேன். அப்போ தெரியும்!
வான் நிலா...நிலா அல்ல
உன் வாலிபம் நிலா...
விஸ்வநாதன்: அண்ணே, அடேயப்பா...பாதர் இன் லா, சன் இன் லா, பிரதர் இன லா வைத் தவிர எல்லா லாவும் உள்ளே புகுத்திட்டீங்களே! இவ்ளோ சரக்கை வச்சிக்கிட்டு ஏண்ணே முரண்டு பிடிக்கறீங்க?
கண்ணதாசன்: டேய், உன் கூட நான் விளையாடாம, வேற யார்டா விளையாடப் போறாங்க? விஸ்வநாதன் அண்ணனின் அரட்டையை விட்டு அன்பர்களே பாட்டைக்கேளுங்கள்

0008 ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

பாட்டும் பதமும் பாகுதி 08  
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” பேசாலைதாஸ்

மதுவும் மங்கையும் போதை தருபவை, அது சாதாரண மக்களுக்கானது, கவிதா விலாசம் கொண்டவன், கலாஞக்ஞானம் கொண்டவர்களுக்கு மதுவும் மங்கையும் கவிதையை சுரக்கவைக்கும் தேன் இன்ப பலாச்சுளை, ஒரு கவிஞனை காமுகன் என்று எப்படி சொல்லமுடியும்? அப்படியானால் ஆலிங்கணம் செய்யும் சிவன் காமனா? கங்கைகரையோரம் கோதையருடன் சல்லாபம் செய்யும் கிருஸ்ணன் என்ன காமுகனா? இல்லை கடவுளா? சும்மா உங்களைத்தான் கேட்கின்றேன்!கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சாடுபவர்கள் இந்த பாடலின் வரிகளைத்தான் ஆயுதமாக முதலில் ஏந்துவார்கள். “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமகள் என் துணையிருப்பு” இந்த பாடல் இடம் பெற்ற படம். ரத்தத்திலகம் இந்த‌ படம் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பில் உருவானது. அவனே அப்படத்தில் தோன்றி அவனே பாடுகின்றான். . பாரசீக பெருங்கவிஞன் உமர்கய்யாமின் சுவையான வரிகள் இந்த பாடலில் வருகி ன்றது. உமர் கய்யாம் தன்னை மறந்த நிலையில் இறைவனை நினைத்து பாடிய பாடல்கள் ஏராளம். ஒவ்வொன்றுக்கும் ஒரு உட்பொருள் உண்டு. “கோப்பையிலே என் குடியிருப்பு” என்பது தாயின் கருவயிற்றில் குடியிருந்ததைக் குறிக்கும், “கோலமகள் என் துணையிருப்பு” என்பது தாயின் அரவணைப்பை குறிக்கும் பாடலை இங்கே கேளுங்கள்.
கவிஞர் கண்ணதாசன் கவிதைகளும் பாடல்களும் சாகா வரம் பெற்றவை சிரஞ்சிவிதமானவை இத்த னை குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவன் கண்ணதா சன். ‘மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன்’ என்று அந்த காவியத் தாயின் இளைய மகன் பெருமை கொண்டதில் அர்த்தம் இருக்க த்தான் செய்கிறது. அவன் மறைந்து இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அவன் பாடல்களை நாம் அலசுகின்றோமே? அப்படி யென்றால் “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற அவனது தீர்க்கதரிசனம் பலிக்கிறது என்றுதானே பொருள்?. பாடலை கேளுங்கள் என் இனிய இசைப்பிரியர்களே!

0007 நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை

பாட்டும் பதமும் பாகுதி 07
 “நான் கவிஞனும் இல்லை/ நல்ல ரசிகனும் இல்லை/ காதலெனும் ஆசையில்லா/ பொம்மையும் இல்லை” பேசாலைதாஸ்
அன்பர்களே! பெரும் கவிஞன் தன்னை கவிஞன் இல்லை என்று தன்னையே தலக்கணம் இல்லாமல் சொல்லிக்கொள்ளும் பக்குவம் யாருக்கு வரும். உண்மையான கலைஞர்கள் குழந்தை மனம் கொண்டவர்கள். இயற்கை, அழ்கு இவைகளில் தன்னையே மெய்மறப்பவர்கள். ஒளிவு மறைவு இல்லாதவன் என்று சொன்னால் அது கண்ணதாசனுக்குத்தான் பொருந்தும். உள்ளதை உள்ளதுபோல் சொல்வதற்கு ஓர் அசாத்திய துணிச்சல் வரவேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையால் கண்ணதாசன் பெற்ற ஆத்மார்த்த ரசிகர்கள் ஆயிரமாயிரம்.. “போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்” என்று தைரியமாக‌ அவைகளை உதறித் தள்ளிவிட்டு அவன் மனதுக்கு சரியென்று பட்டதைச் செய்து முடிப்பது கவிஞர் கண்ணதாச னின் அசாத்திய துணிச்சலாகும் அந்த துணிச்சல் திராவிட பாசறையில் இருந்து தன்னைத்தானே புடம் போட்டுக் கொண்ட கண்ணதாசனிடம் சற்று மிகுதியாகவே காணப்பட்டது. “நான் கவிஞனும் இல்லை/ நல்ல ரசிகனும் இல்லை/ காதலெனும் ஆசையில்லா/ பொம்மையும் இல்லை” இந்த வாக்குமூலத்தில் அவனது தன்னடக்கத்தை மட்டுமின்றி அவனது அந்தரங்க இயல்பையும் அவன் பிரகடனப்படுத்தி இருப்பதை நம்மால் காணமுடியும்.

0006 என்னை தோண்டி ஞானம் கண்டேன்

பாட்டும் பதமும் பகுதி 06 
என்னை தோண்டி ஞானம் கண்டேன் பேசாலைதாஸ்
சித்தாந்தத்தையும், வேதாந்தையும் ஐயம் திரிபற, கவிஞன் கண்ணதாசன் ஒருவனே அன்றி வேறு யாரல் தெளிவாக சொல்ல முடியும். உன் உள்ளத்தை தோன்டி ஞானத்தை தேடு. அப்படி தன்னைத்தானே தோண்டி தோன்டி ஞானத்தெளிவு கண்டவன் கவிஞர் கண்ணதாசன் ‘தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதா ந்தம்’ என்று சொல்லும் போதும், ‘கள்ளிக்கேது முள்ளில் வேலி போடி தங்கச்சி, காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி’ என்று புலம்பும்போதும் ஒரு பாம்பாட்டிச் சித்தனா கத்தான் நமக்கு காட்சி தருகிறான் அவன். என்னை நான் இப்போது தோண்டிக்கொண்டிருக்கின்றேன் வயது அறுபது ஆகிறது அல்லவா நீங்களும் தோண்டுங்கள் பிறருக்கு குழியுமல்ல, புதை குழியுமல்ல உங்கள் உள்ளத்தை தோண்டுங்கள்

0005வீடுவரை உறவு வீதி வரை மனைவி

பாட்டும் பதமும் பகுதி 05 
வீடுவரை உறவு வீதி வரை மனைவி பேசாலைதாஸ்

கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞன். அனுபவ வாயிலாக அனைத்தையும் அறி ந்து கொள்ளும் ஒரு ஞானியாக கவிஞர் கண்ணதாசன் ஒருவ னால் மட்டுமே முடியும். “அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடி யதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்து ஒரு பாடல் எழுதினான். வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?தொட்டிலுக்கு அன்னை/ கட்டிலுக்குக் கன்னி/ பட்டினிக்குத் தீனி/ கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாச னின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவனுக்கு பயிற்றுவித்த பாடமது’. “ஒரு வன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்ப டியெல்லாம் வாழ்ந்தவன் நான். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இருக்கிறது” என்று உரைத்தவன் அவன். விழுந்தவன் தானே எழுந்திருக்க முடியும் அன்பர்களே! நீங்கள் வீழ்ந்துவிடதிருக்க தயவு செய்து இந்த பாடலை கேளுங்கள்

0004உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை

பாட்டும் பதமும் பகுதி 04
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசன் ஒரு உளவியல் கவிஞன் உள்ளத்தின் உணர்வுகளை தெட்டத்தெளிவாக உணர்ந்தவன். உள்ளத்தின் ஆழ் மனபதிவுகள் மனிதனின் நடவைக்கைகளை பாதிக்கின்றது என்ற உளவியல் தந்தையான சிக்மன்ட் ஃப்ரைட்டின் உளவியல் தத்துவத்தை மிக எளிதாக தனது பாடலில் வெளிப்படுத்தினார்..உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை என்றுரைத்த கவிஞன் “தெய்வம் என்றால் அது தெய்வம் – அது சிலையென்றால் வெறும் சிலை தான்உண்டு என்றால் அது உண்டு – இல்லை என்றால் அது இல்லை” என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருக்கி ன்றார் கவிஞர் கண்ணதாசன். “உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு உள்ளத்தும் இல்லை புறத்தி ல்லைதானே?” திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வ தற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.இதோ அன்பர்களே பாட்டை கவனமாக கேளுங்கள்

0003 இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று

பாட்டும் பதமும் 03
 இரவுக்கு ஆயிரம் கண்கள் பலுகலுக்கு ஒன்றே ஒன்று,,,, பேசாலைதாஸ் 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ்மொழியில் பெயர்த்த தலையாய கவிஞருள் கண்ணதாசன் குறிப்பிடத்தக்கவன். அவன் கம்பனையும், பாரதியையும், பட்டி னத்தாரையும் மட்டும் அறிந்து வைத்தவனில்லை; அதற்கு மேலாக பாரசீக மேதைகளையும், மேலை நாட்டு அறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் கரைத்துக் குடித்தவன் என்ற உண்மை புலப்படுகிறது கவிஞர் கண்ணதாசன் ஆங்கில இலக்கி யத்தை கற்கவில்லை ஆனாலும் பிரான்ஸிஸ் வில்லியம் போர்டி லோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையடிகளை ஒத்த அதே கவிதையை கவிஞர் எழுதினார். ஆங்கில கவிஞன் எழுதிய கவிதை இது!
The night has a thousand eyes, And the day but one; Yet the light of the bright world dies With the dying sun. The mind has a thousand eyes, And the heart but one: Yet the light of a whole life dies. When love is done.
அந்த கவிதை தமிழில் இதோ,,,,,,, “இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள், உறவுக்கு ஒன்றே ஒன்று” குலமகள் ராதை என்ற படத்தி ற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது:

..... தொடரும்,,,,,

0002இந்த புன்னகை என்ன விலை?

பாட்டும் பதமும் 02
 இந்த புன்னகை என்ன விலை? பேசாலைதாஸ் 
கண்ணதாசனின் கவிதை எழுதும் பாணி அலாதியானது. அவன் ஒரு எழுத்துச் சித்தன், வார்த்தைகளில் அவனுக்கு முடிச்சு போடவும் தெரி யும். போட்ட முடிச்சுக்களை அவிழ்க்கும் கவிப்பக்குவமும் அவனுக்கு கைவந்த கலை. கேள்வி யும் எழுப்பி பதிலும் சொல்வதில் அவன் கில்லாடி. “ இந்த‌ புன்னகை என்ன விலை?” என்ற கேள்விக்கு அருமை யான பதில் " என் இதயம் சொன்ன விலை" என்று கவிஞன் விடை தருகி ன்றான். ஒரு அனுபவமிக்க சந்தை வியாபாரி போல இதய ங்களை விற்கவும், வாங்கவும் இவனை விட யாரால் முடியும்? இதயத்தை மட்டுமா விலை பேசினான்? கன்னியின் கண்ண ங்களை, கண்களை எல்லாவற்றையும் கூறு போட்டு விற்கும், கசாப்புக்கடை வியாபாரி போல, கவி ஞன் இங்கே மாறுகின்றான். ..... தொடரும்,

0001 பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா?

பாட்டும் பதமும் 01 

பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா? 
பேசாலைதாஸ் 
கவியரசு கண்ணதாசனை கவிஞன் என்று அழைப்பதைவிட கஞ்சன் என்று அழைப்பதை நான் பெருமையாக கொள்கின்றேன். வார்த்தை களையும், சொற்களையும் மிக நேர்த்தியாக, ஓரிரு வரிகளுக்குள் தத்துவத்தை, அழகியல் அம்ச த்தை அள்ளிச் சொருகும் சொற்சிக்கனம், கவியரசு கண்ணதாசனை விட வேறு யார் இருக்கு முடியும் சொல்லு ங்கள்! பேசுவது கிளியா? இல்லை பெண்னரசி மொழியா? கோயில் கொண்ட சிலையா இல்லை கொத்து மலர் கொடியா? “பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா? சேரனுக்கு உறவா? செந்தமிழர் நிலவா?” இரண்டிரண்டு வார்த்தைகளாய், எதுகை மோனையாய், கேள்வி பதிலாய், சந்தத்தின் விந்தை தோய்ந்த அந்த பாடல் அப்பப்பா கேட்டுக்கொண்டே இருக்கலமல்லவா..... தொடரும்,,

0009 பி யுசின்னப்பா பற்றிய ஒரு பார்வை


பி. யு. சின்னப்பா பற்றிய ஒரு பார்வை பேசாலைதாஸ்

அன்பர்களே  திருவிளையாடல்' திரைப்படத்தில் பல்வேறு இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டு பாடலையும் பாடுபவராக சிவாஜி கணேசன் நடித்திருக்கும் காட்சியில் பாடலைப் பாடியது டி.எம்.சௌந்தரராஜன் என்றால், இதற்கு பல ஆண்டுகள் முன்னதாகவே 'ஜகதலப்பிரதாபன்' என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஐந்து வேடங்களில் நடித்தும், சொந்தக் குரலில் பாடலைப் பாடியும் இருந்தவர் பி.யூ.சின்னப்பா. அபார இசை அறிவும், வெண்கலக் குரலும், அற்புத நடிப்புத் திறனும் கொண்டவர் பி.யூ.சின்னப்பா. வெள்ளை கறுப்பு நிறத்தில் இந்தப்படம் வெளியானது மட்டுமல்ல ரீ ரெக்கர்டிங் இல்லாத அந்த கால கட்டத்தில் ஒரே முறையில் எடுக்கப்பட்ட படம் இது.



பி. யு. சின்னப்பா பற்றிய ஒரு பார்வை பேசாலைதாஸ்

பி. யு. சின்னப்பா பற்றிய ஒரு பார்வை பேசாலைதாஸ்
அன்பர்களே  திருவிளையாடல்' திரைப்படத்தில் பல்வேறு இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டு பாடலையும் பாடுபவராக சிவாஜி கணேசன் நடித்திருக்கும் காட்சியில் பாடலைப் பாடியது டி.எம்.சௌந்தரராஜன் என்றால், இதற்கு பல ஆண்டுகள் முன்னதாகவே 'ஜகதலப்பிரதாபன்' என்கிற படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஐந்து வேடங்களில் நடித்தும், சொந்தக் குரலில் பாடலைப் பாடியும் இருந்தவர் பி.யூ.சின்னப்பா. அபார இசை அறிவும், வெண்கலக் குரலும், அற்புத நடிப்புத் திறனும் கொண்டவர் பி.யூ.சின்னப்பா. வெள்ளை கறுப்பு நிறத்தில் இந்தப்படம் வெளியானது மட்டுமல்ல ரீ ரெக்கர்டிங் இல்லாத அந்த கால கட்டத்தில் ஒரே முறையில் எடுக்கப்பட்ட படம் இது.



ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...