திங்கள், 19 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 38 மாலை மாற்றுப்பாடல்களும், சினிமா பாடல்களும்

பாட்டும் பதமும் 38
"மாலை மாற்றுப்பாடல்களும், சினிமா பாடல்களும்" பேசாலைதாஸ்
                                             இலக்கியத்தில் காணப்பட்ட காப்பிய இலக்கியத்தை கண்ணதாசன் வெகு எளிதாக, பாமரமக்களும் புரிந்து கொள்ளும் படி, எழுதியுள்ளார். அதேவேளை, சொற்களை வைத்து சொற்சிலம்பு கவி தைப்பாடல்களையும் சினிமாவில் புகுத்தியுள்ளார். காய் என்ற சொல்லைக்கொண்டு, அத்திக்காய், காய், காய். ஆலங்காய்வெண்ணி லவே என்ற பாடல்..

                                                 பார்த்தேன், இரசித்தேன், பக்கம் வர துடித்தேன், மலைத்தேன்,  இதுவென மலைத்தேன், என்று தேன் என்ற சொல்லை விகுதியாக கொன்டு எழுதினார். அதுபோல, வான் நிலா, நிலா அல்ல என் வாலிபம் நிலா என்ற பாடலிலும், நிலா என்ற சொல்லைவைத்து பாடல் எழுதினார். இப்படி பல பாடல்களை சொல்லலாம். தற்போது புது முயற்ச்சியாக மாலை மாற்று தமிழ் கவிதைகளையும், சினிமா பாடலாக வெளிவரத்தொடங்கியுள்ளது.. 

                                                                    முதலில் மாலை மாற்றுப்பாடல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) என்பது பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும். தமிழ் இலக்கியத்தில் ஓவியக் கவி, மிறைக் கவி ஆகிய பிரிவுகளுள் மாலைமாற்று அடங்கும். மாலைமாற்று என்பத ற்கான ஆங்கிலச் சொல்லான Palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்க ளிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. 

                                                   தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை  போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும். ஆங்கிலத்தில் Civic, Radar, Level, Madam, Malayalam, Pop, Noon, Refer போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும்.. மாலைமாற்று சொல்லாக வும் வரலாம், சொற்தொடராகவும் வரலாம். உதாரணம்: தமிழ் மொழியில்

தேரு வருதே,
மாடு சாடுமா,
மோரு தாருமோ
தோடு ஆடுதோ
மேக ராகமே
மேள தாளமே
போன்ற தொடர்கள் மாலைமாற்றாக அமைந்துள்ளது.

ஆங்கிலத்தில்

Was it a cat I saw?,
Do gees see God?,
A Toyota's a Toyota,
A nut for a jar of tuna,
Madam, I am Adam
போன்ற தொடர்கள் மாலைமாற்றுகள் ஆகும்.

தமிழ் இலக்கியத்தில் திருஞானசம்பர்த்த மூர்த்தி தோத்திர பாடல்களை மாலை மாற்று பாடலாக ஆக்கியுள்ளார்.

இனி நான் இரசித்த முதாலாவது மாலை மாற்றுப்பாடல், இது 
வினோதன் எனும் தமிழ்த்திரைப்படட்த்தில் இடம்பெற்ற "மேகராகமே மேளதாளமே தாரா-ராதா!" எனும் நீண்ட திரைப்படப்பாடலும் இந்தியாவின் முதலாவது மாலைமாற்றுப் பாடல் ஆகும். இதனை மதன் கார்க்கி எழுதியதுடன் டி. இமான் இசையமைத்துள்ளார்
https://www.youtube.com/watch?v=sc9LGLITkWc


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...