சம்சாரம் என்பது வீணை பேசாலைதாஸ்
மயங்குறாள் ஒரு மாது என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது! விஜய பாஸ்கர் இசை அமைப்பில் உருவாகி பாலசுப்ரமணியத்தினால் பாடப்பட்ட பாடல், கவிஞர் கண்ணதாசனின் சத்தான வரிகள் அடங்கிய பாடல் இது! இந்த பாடல் பற்றி, அந்த படத்தின் இயக்குணர் எஸ்.பி. முத்துராமன் கூறிய போது, மயங்குறாள் ஒரு மாது திரைப்படம் வெளிவந்த போது, அந்த படம் கடும் விமர்சணத்துக்கு உள்ளாக்கப்ப ட்டது. கதநாயகி இந்த படத்தில் இறக்கவேண்டும் அல்லது திரைப்பட த்தை, வாங்கி விநோயோகிக்கமாட்டோம் என்று, விநோகிஸ்தர்கள் ஒரேயடியாக மறுத்துவிட்டனர்.
ஒரு கல்லூரிப்பெண், பருவக்கோளாறு, காரணமாக, தவறிழைக்கின்றாள், அந்த தவற்றை மறைத்து, அந்த பெண்ணை காப்பாற்றி, நல்லதொரு மணவாழ்க்கையில் வாழவைப்பதே கதையின் மையப்பொருள். தவறிழைத்த பெண் தண்டிக்கப்பட வேண்டும், என்ற பிற்போக்குத்தனமான எண்ணத்திற்கு எதிராக, சவாலக எடுக்கப்பட்ட படம் என்று இயக்குணர் பெருமையாக சொன்ன திரைப்படம். பாடல் காட்சியில் , கணவன், ஏமாற்றிய காதலன், ஏமாற்றப்பட்டு, உடல் உறவில் ஈடுபட்டதை, படமெடுத்து, கதாநாயகியை பயமுறுத்தும் வில்லன் இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் தோன்ற, முக்கோன பரிணாமத்தில் கதாபாத்திரங்களை படமாக்கிய ஒருபாடல் காட்சி இது பாடலை நீங்களும் கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=ls2GRbv_1lA
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக