செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 35 பூச்சியத்துக்குள்ளே ஒரு இராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்


" பூச்சியத்துக்குள்ளே ஒரு இராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்"  பேசாலைதாஸ்

                                                              இந்த பாடல் வெளிவந்த படம், வளர்பிறை, 1962 இல் வெளியானது, சிவாஜி, சரோஜதேவி நடித்தபடம். இசை, கே .வி. மகாதேவன். யோகனந்த இயக்கத்தில் வெளியான படம். கடவுளை புரிந்து கொள்ள நாம் முயற்ச்சித்தால் நாம் முட்டாளாகிவிடுவோம். அவனை புரிந்து கொள்ளும் அளவுக்கு, நமக்கு புத்தி இல்லை. அப்படி முயன்றால் அது, என்னால் முடியும் என்ற ஆணவத்தில் முடியும். ஆண வம் வந்தால், பின்னே ஆண்டவன் எங்கே? கடவுளை தேடும் முயற்ச்சி, வாரியர் சொன்னது போல குண்டாவுக்குள், அண்டாவை தேடுவதை ப்போலாகும். 

                              கிறிஸ்தவத்தில் ஒரு கதை உண்டு. புனித அகுஸ்தினார், இறைவனைப்பற்றி சிந்தித்துக்கொண்டு, கடற்கரையோரம், நடந்தார். அப்போது கரையில் ஒரு சிறுவன், கரையில் ஒரு குழி தோண்ட்டி, அதில் ஒரு சிற்பியால் கடல் நீரைக் கொண்டு, நிரப்ப முயற்ச்சி செய்துகொ ண்டிருந்தான், அப்போது அகுஸ்தீனார் அந்த சிறுவனைப்பார்த்து, என்ன செய்கின்றாய், எனக்கேட்க‌, அந்த சிறுவன், இந்த சிற்பியால்,  கடல் நீரையெல்லாம் , இந்த குழிக்குள் ஊற்றுகின்றேன் என்று சொன்னான், அதற்கு அகுஸ்தீனார், இது என்ன முட்டள்தனம், சின்ன சிற்பியால், கடல் நீர் முழுவதையும் அள்ள உன்னால் முடியுமா? எனக் கேட்க, நீர் மட்டும், உமது சின்ன மூளையால், கடலிலும் பெரிதான கடவுளை அறிய முடியும் போது, என்னால் முடியாத எனக்கேட்டுவிட்டு மறைந்தானாம். கடலில் கரைந்த  உப்புச்சிலை, கரைக்குவந்து, கதை சொல்வதைப்போல, கடவுளை அறியும், முயற்ச்சி அமையும்!

                                                                                 முற்றும் கசந்ததென்று, பற்றற்று வந்தவர்க்கெல்லாம், சுற்றம் என்றிருப்பவன் இறைவன் என்று கவிஞர் சொல்கின்றார். தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்ற சுடரே/ தொடக்கறுத்தோர் சுற்றமே'' என்று தொடங்கும் ஒரு கம்ப ராமாயணப் பாடல். 'தொடக்கறுத்தோர் சுற்றமே' என்ற  இரண்டு சொற்களின் பொருளைக்கொண்டு,  'முற்றும் கசந்ததென்று' என்ற சரணத்தை அமைத்துவிட்டார் கவிஞர் கண்ணதாசன். உயர்ந்த கருத்துகளுக்கு எல்லைதான் ஏது!

                                                                   தென்னை இள நீருக்குள்ளே, தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காய் போல இருப்பான் இறைவன்!. தேங்காய் ஓட்டு க்குள்ளே தானே, இளநீர் இருக்கும்!  இங்கே கவிஞர் மாற்றி பாடுகின்றார், தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே என்று, சித்தர்கள், இப்படித்தான், ஒன்று க்குள், ஒன்றை மாற்றி பாடுவார்கள். கோழிக்குள் முட்டைவைத்து, முட்டைக்குள் கோழிவைத்து இதுதான் கவிஞர் கண்ணதாசன், தத்துவம், பக்தி என்றால் சித்தானாகி, யோகியாகுவான், காதல் என்றால் பித்த னாகி, போகியாகுவான். பக்தி என்றால் கண்ணதாசன், பட்டிணத்தார் கையில் உள்ள கரும்பாவன், காதல் லீலை என்றால் காமதேவன் கையில் உள்ள கரும்பாவான்!

                                                                 வாழையடி, வாழையாக செழித்தோங்கும், வாழைக்கும் கன்று வைத்தவன், ஒருவன் அவன் தான் ஏழை இறைவன்! இறைவனை ஏழையாக கண்ட தத்துவஞானி என் கண்ணதாசன்! உண்மைதான் இறைவன், மனிதனின் அன்புக்காக ஏங்கும் ஏழைதானே! எனக்கு ஆறுதல் தர, ஒரு இதயத்தை தேடுகின்றேன் என்று இயேசு கூறியதை இங்கு நினைவு கூர்ந்து கொண்டு பாடலை கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=b8WQV6YmI5A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...