சனி, 17 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 36 அல்லித்தண்டு காலெடுத்து, அடிமேல் அடியெடுத்து,

" அல்லித்தண்டு காலெடுத்து, அடிமேல் அடியெடுத்து, சின்ன கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்?" பேசாலைதாஸ்.
                                                                      கவியரசு கண்ணதாசன் எழுதிய பாட‌லில் என்னைக்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. காக்கும் கரங்கள் திரை ப்பட த்துக்காக, கே.வி.மகாதேவன் இசையில். கண்ணதாசனின் வரிக ளில் மிதந்தது இந்த பாடல்! தமிழ் இலக்கியத்தில் எத்தனையொ மலர்கள் இருக்கின்றன. அத்தனையும் பெண்களின் அழகு முகத்தையும், இதய த்தையும் வர்ணிக்க, கண்ணதாசன் மட்டும், சற்று விலகி, ஒரு குழந்தை யின் கால்களுக்கு , அல்லி மலரின் தண்டுகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

 
                                         கவிதைகளிலும் போற்றப்ப ட்டிருப்பது போல சங்க இலக்கியங்களிலும் அல்லி மலர் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில், `பூ அல்லி கொய்யா மோ' என்று சிவபெருமானின் பெருமைகளைப் பாடியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த அல்லி மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு. 

                                                                        இத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம், பொய்கை (நீர் நிலை), நீர்ச்சுனை, மெதுவாக ஓடும் ஆறுகளில் வளரக்கூடிய ஒரு கொடியாகும். தாமரை மலர் போன்று காணப்படும் இது. ஆனால், தாமரை காலையில் மலர்ந்து இரவில் அதன் இதழ்கள் மூடிக்கொள்வதுபோல அல்லியின் இதழ்கள் இரவில் மலர்ந்து காலையில் இதழ் மூடிக்கொள்ளும். 

                                                                            எகிப்தில் உள்ள நைல் நதியில் உள்ள வெள்ளை நிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் தன் இதழ் மூடும். நீரில் மிதக்கக்கூடிய அகன்ற நீள்வட்ட இலைகளும் மெல்லிய குழலையும் கொண்ட அல்லி வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்டது. எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலை யில் மலர்ந்து இரவில் குவியும்.

                                                                          நமது தமிழ் ஈழதேசிய மலராக, காந்தள் மலர் இருப்பதுபோல, தற்போது இலங்கையின்  தேசிய மலராக அல்லி பூ பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் நாட்டின் தேசிய மலராக நீலோற்பவம் காணப்பட்டது. 

                                                                                   அல்லி மலர் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை உங்களோடு பரிந்துள்ளேன், இனி பாடல் பற்றி சிலாகிக்க ஆசைப்படுகின்றேன். பொன்மேனி சிகப்பும், பொல்லாத சிரிப்பும், சொல்லாதா கவிதைகள் சொல்லும்! என்ற வரிகள், என்னை அதிசயிக்க வைத்துவிட்டது. பேசாப்பொருளை, பேசவைப்பதுதான் கவிதையின் அழகு, ஆனால் இங்கு, ஒரு குழந்தையின் சிரிப்பை பாடலாக்கி,  சிரிப்பா க்கி, அதை சொல்லாத கவிதையாக்கி உள்ளார். சொல்லாத சொல், சொல்லாத கவிதை இவைகளுக்கு அர்த்தம் கொடுக்க, கண்ணதாசனுக்கு மட்டுமே கைவந்த கலை, என்னை விட்டுவிடுங்கள் பாவம் நான்! முத்து நகை இரத்தினங்களை, குழந்தையின் மோகன புன்னகை வெல்லும், என்ற இயல் தத்துவத்தை அவர் அழகாக சொல்லியுள்ளார். இனி மீதிப்பாடலை நீங்களே கேட்டு, கற்பனை சிறகுகளை விரியுங்கள்!
https://www.youtube.com/watch?v=HnfgnbhPrgU




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...