திருவருட்செல்வர் படத்திற்காக கண்ணதாசன் எழுதி, மல்லிசை மன்னன் விஸ்வனாதன் இசை அமைப்பில், பி. சுசீலா பாடிய பாடல் இது. ஆடல் அரங்கிற்கு சர்க்கரவர்த்தி நுழைவதை பிரமாண்டமாக படம் எடு த்துள்ளார்கள். தொகையறா முடிந்து, பல்லவியை கேட்டபோது, எனக்குள் ஒரு சந்தேகம், கவிஞர் பாடலை பிழையாக எழுதிவிட்டாரோ என்று பலநாள், எண்ணியிருந்தேன்.
ஒரு பெண்ணின் நெஞ்சத்தில், இடம் பிடித்தால்தான், அவள் நம்க்கு, மஞ்சத்தில் இடம் தருவாள், கூடவே நாம் வேண்டும், இன்ப த்தையும் அள்ளித்தரும், தேன் மலராக பெண் இருப்பாள், ஆனால் இங்கு, கவிஞர், நெஞ்சத்தில், இடம் பிடிக்கமுன்னர், எப்படி மஞ்சத்துக்குப்போனார் என்று ஒரு குழப்பம் எனக்கு.
அன்மையில் சொல்வேந்தர் சுகி செலவம் அவர்கள், இந்த பாட்டுக்கு விளக்கம் கொடுத்தார், அதாவது கதாபாத்திரம் (பத்மினி) சர்க்கரவர்த்தியின், பிரத்தியேக, ஆடல் அழகி, அவள் சர்க்கரவர்த்தியிடம், அந்தரப்புரத்தில், மஞ்சத்தில் இருந்தவள், இப்போது அவள் உண்மையாகவே, சகரவர்த்தியின் மீது காதல் கொள்வதாக, தோழிக்கு சொல்கின்றாள், நாட்டி யத்தின் மூலமாக. பார்த்தீர்களா? திரைக்கதையின் பாத்திரத்தை, விளக்க நீண்ட, கதை வசனம் தேவை, ஆனால் ஒரு சொல்லை, மாறிப்போட்டே, கதாபாத்திரத்தை விளக்கும், கவிஞரின் கவிப்புலமையை என்னனென்று நான் சொல்லுவேன்?
கவிதை என்றாலே, சொல்லால், சொல்லுக்குள் விளையாடும் ஒரு வினோத விளையாட்டு! The best words are in the best order, that is the poetry. என்று ஆங்கில கவிஞர்கள் சொல்லுவார்கள். இந்த பாடலில் ஒரு அடிவரும், மாயவனோ, தூயவனோ, நாயகனோ நானறியேன் என்று அவள் சொல்வது, தன்னை அறியாமல் மனதை பறி கொடுத்துவிட்டதை சொல்லாமல் சொல்கின்றாள். செந்தமிழ் சொல் எடுத்து, இசை தொடுப்பேன், வண்ண த்தந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன் என்றவரிகளும், தித்தால் ஒரு சம்பொற்கிண்ணம்! தத்தித்தாவிடும் தங்கக்கிண்ணம்! சித்தத்தால் ஒரு காதல் சின்னம்! அப்பாடா பைந்தமிழ் சொற்கள், கொட்டி உருண்ட்டோ டுகின்றது, கூடவே இளமையான என் நடன சுந்தரி, தோகை மயிலாள், பத்மினியின் நாட்டியம், கவிஞரின் கவிதைக்கு உயிரோட்டமாகின்றது! இனி பாடலை இரசியுங்கள்
https://www.youtube.com/watch?v=IBVrGAiqRGo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக