வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 31 என் வேதனையில், உன் கண் இரண்டும் என்னோடு அழுவதேன்?

என் வேதனையில், உன் கண் இரண்டும் என்னோடு அழுவதேன்?  பேசாலைதாஸ்
                                                       பாடல் இடம் பெற்ற படம் யார் நீ? ஜெய்சங்கர், ஜெயலலிதா இணைந்து நடித்த‌ படம்: யார் நீ 1968 இல் வெளிவந்தது – பாடியவர்: சுசீலா – இசை: வேதா. எனக்கு சோகம் வரும்போதெல்லாம், என் உள்ளத்தையும் மீறி, என் உதடுகள் முணுமுணுக்கும் பாடல், இது எப்படிப்பட்ட பாடல் . எப்படிப்பட்ட இசை என்று வியக்க வைக்கும் பாடல்.மெல்லிசைமேதை மதன் மோகன் ஹிந்தியில் இசையமைத்த பாடலின் தமிழ் வடிவம்.துயரத்தை தேக்கி வைத்து கொட்டி தீர்க்கும் பாடல்.வார்த்ததையில் விவரிக்க முடியாத துயரம் தோய்ந்த பாடல். சாருகேசி ராகத்தில் துயரமாக நெஞ்சை பிழியவைக்கும் பாடல்! துன்ப மழையில் நின்ற போது, கண்களில் உன்னை நான் கண்டேன்! காலதேவன் வாசல் வழியே போகின்றேன், இன்று நான் யாரோ? போகும் வழியில், அன்பு முகத்தை பார்க்கின்றேன், நாளை நான் யாரோ? பிரிவு சோகம் மனதில் எழுகின்ற போடெல்லாம் இப்பாடலை கேட்டுப்பாரு ங்கள், உங்கள் மனதுக்கு ஒத்தடமாக இந்த பாடல் அமையும், நான் இரசித்ததை, சுவைத்ததை சொல்கின்றென் அவ்வளவு தான்! இதோ பாடலை கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=yyLNSzPWlnk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...