புதன், 7 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 27 ஒரு சின்னப்பறவை

பாட்டும் பதமும் 27
" ஒரு சின்னப்பறவை அன்னையை தேடி வானில் பறக்கின்றது"  பேசாலைதாஸ்
                                                  இதுவரையும் கண்ணதாசனின் பாடல்வரிகளை விஸ்வநாதனின் இசையில், இரசித்தோமல்லவா, இனி சற்று மாறுதலு க்காக, புலமைப்பித்தனின் பாடலை, இன்னுமொரு இசை அமைப்பா ளின் இசையோடு எப்படி இருக்கின்றது என்று, பார்ப்போம். புலமைப்பித்தனை, கண்ணதாஸனுக்கு நிகராக கொண்டுவர, முடியாது இருந்தாலும் புலமைபித்தன் பாடலும் சுமாரானது என்பது எனது, எண்ணம்! இசைஅமைப்பாளர் எம், எஸ், சீனிவாசனின் இசையில் அமைந்த இப்பாடல், ஒரு தாயின் சிறப்பை அழகாக எடுத்துக்காட்டுகி ன்றது, தாய்ப்ப்பாசத்திற்கு கட்டுப்படாத உள்ளம் ஒன்று இருக்க முடியுமோ? தாயின் மடியே சொர்க்கம்!

 சொர்க்கம் எங்கே இருக்கின்றது, விண்ணிலா, மண்ணிலா? சொர்க்கம் என்றாலே நம்மை அறியாமல், கண்கள் மேலே, வானத்தை நோக்கும், விண்ணிலே சொர்க்கம் உண்டு, அங்குதான் இறைவன் உறைகின்றான், தேவர்களும், தூதர்களும் உலாவி த்திரின்றனர், புண்ணியம் செய்து மரித்தவர்கள், அதைக் கண்டு மெய்ம றக்கின்றனர் என்று அனேகமாக எல்லா மதங்களும் இதனையே விபரி க்கின்றன. இது உண்மையா என்பதனை நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.

                                                                                  விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல, அதுதான் அன்னையின் மலர் பாதம் என்றான் புலமைப்பித்தான். அவன் சொல்லவருவது இதுதான், சொர்க்கம் மண்ணில் தான் இருக்கி ன்றது, நாம் வாழும் வாழ்க்கையில் இருக்கின்றது. அது தாயவள் அன்பில் தேனாகின்றது, அன்னை என்பது வெறும் மானுடம் அல்ல, அதுதான் உலகத்தில் தெய்வம் என்று, தெய்வத்தை முன்னிறுத்துகி ன்றது, வேதங்களாக அன்னையவள் கூறிய உபதேசங்கள் இருக்கின்றன இவை யாவும் ஒருங்கே இருந்துவிட்டால்,,,, அது சொர்க்கம் தானே! நீங்களே சொல்லுங்கள்.இனி பாடலை கேளுங்கள்!

https://www.youtube.com/watch?v=f9o8GKfHPM0

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...