வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 30 அம்மம்மா கேளடி தோழி,


 அம்மம்மா கேளடி தோழி,  சொன்னானே ஆயிரம் சேதி - பேசாலைதாஸ்

                                                                    பாடல் இடம் பெற்ற படம், கறுப்பு பணம், இது கண்ணதாசனின் சொந்த படம். பாடியவர் : எல்.. ஆர் .ஈஸ்வரி இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி செவ்வியல் இசையில் வெளிப்படையாக தெரியும் ராகங்களை மறைத்து ,அவற்றில் எழும் ஜீவன்களை மெல்லி சையாக்கி ராகங்களை புதிய கோணங்களில் தந்து மெருகூட்டியவ்ர்கள் மெல்லிசை மன்னர்கள்.

                                                                      காபரே நடன பின்னணியில் இரு பெண் பாத்திரங்கள் பாடும் பாடலாக அமைக்கப்பட்ட அதி உன்னதமாக விர கதாபத்தை வெளியிடும் பாடல்.சாருகேசி ராகத்தில் இப்படி ஒரு பாடலா என்று வியக்க வைக்கும் பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்களில் மிகவும் சிறப்பான பாடல்.கவிஞர் கண்ணதாசன் தயாரித்த படத்தில் இடம் பெற்றதால் , மெல்லிசை மன்னர்களிடம் எல்.ஆர்.ஈஸ்வரி தான் பாட வேண்டும் என்று கூறி பாட வைத்த பாடல். பி.சுசீலா தான் பாட வேண்டும் என்பது இசையமைப்பாளர்களின் கருத்து.தயாரிப்பாளர் என்ற முறையில் சொல்கிறேன் ” எல்.ஆர்.ஈஸ்வரி பாடவில்லை என்றால் வேறு இசையமைப்பாளர்களை நியமித்து விடுவேன் ” என்று  கண்ண தாசன் திடமாக  கூறியதால் எல்.ஆர்.ஈஸ்வரி பாட நேர்ந்தது.பி.சுசீலா ஒருமுறை கூறியது போல ” பழைய பாடல்களை யார் பாடினாலும் நன்றாக இருக்கும் ” என்பதை நிரூபிக்கும் வகையில் எல்.ஆர்.ஈஸ்வரி மிக மிக அருமையாகப் பாடிய பாடல் இது.
https://www.youtube.com/watch?v=6W0Ojt4j148

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...