"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்" பேசாலைதாஸ்
கடவுளை திட்டுகின்றேன், எனக்கு என்னவோ நடந்துவிட்டது என்று நினைக்கின்றீர்களா? இந்த பாட்டுக்கு ள்ளே ஒரு சுவா ரஸ்யமான விடயம் இருக்கின்றது. வானம்பாடி’ – இது கவிஞர் தயாரித்த இனிமையான பாடல்கள் நிறைந்த வெற்றிச்சித்திரம். இதில் கதாநாயகன் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். பாடுவது போன்ற பாடல் காட்சிக்காக ஒரு பாடல்.
பாடலைக் கவிஞர், “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன் காதாலித்து வேதனையில் சாகவேண்டும்!” என்ற பல்லவியுடன் எழுதியிருந்தார். பாடலைப் பாடவந்த டி.எம். சௌந்தரராஜன், ‘கடவுள் சாகவேண்டும்!’ என்ற பல்லவியைப் பார்த்து பயந்து, ‘நான் பாடமாட்டேனுங்க!’ என்று சொல்லிவிட்டார். அவர் மறுப்பு, கவிஞருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது என்றாலும், வார்த்தைகளை வாரி வழங்கும் கவி மன்னர் கண்ணதாசன், பாடகரின் உணர்வுக்கு மதிப்புத் தந்து. “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!” என்று, பல்லவியை மறுவிநாடியே மாற்றித் தந்தார்.
இன்றுவரை, கவிஞரின் திறமைக்கும், இசையமைத்த் கே.வி. மகாதேவனின் பெருமைக்கும், டி.எம். சௌந்தர ராஜனின் கடவுள் பக்திக்கும் ஏற்றங்கள் தரும் பாடலாகவே இப்பாடல் திகழ்கிறது. கண்களில் ஆசை பிறக்கின்றது, அந்த ஆசையே விஷமாக ஆட்களை கொல்கின்றது! கடவுளை அழைத்து வந்து ஆசையில் மிதக்க விட்டு, கடவுளுக்கே அனுபவ பாடத்தை சொல்ல துடிக்கும் கவிஞரின் துணிவை நான் இந்த பாடலில் இரசிக்கின்றேன், நீங்களும் இரசியுங்கள்
https://www.youtube.com/watch?v=FlkDNOi21i8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக