வியாழன், 8 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 29 கண்ணா கறுமை நிறை கண்ணா!


கண்ணா கறுமை நிறை கண்ணா! பேசாலைதாஸ்
                                                       இப்பாடல் இடம் பெற்ற படம், நானும் ஒரு பெண், ஏ.சி.திருலோகச்சந்தரின் கைவண்ணத்தில் உருவான படம், கவிஞரின் திறமையை வெளிக்கொண்டுவரும் பாடல்களில், இதுவும் ஒன்று. கறுமை நிறத்தால், கணவனால் ஒதுக்கப்படும் ஒரு பெண்ணின் குமுறலை, கடவுளிடம் முறையிடும் ஒரு பெண்ணின் உள்ளக்குமு றல்லாக பாடல் எழுதப்பட்டுள்ளது. கடவுளே நீ கறுப்பாய் இருக்கின்றாய் ஆனாலும் உண்ணை வெறுப்பாரில்லை, ஆனால் என்னைக்கண்டாலே பொறுப்பரில்லை என்று சாதாரண வார்த்தையில் சொல்வதை கவிஞர் வார்த்தை ஜாலமில்லால் கவியாக்கியிருக்கின்றார். மனதைப்பா ர்க்காமல் வெறும் அழகைபார்க்கும் மனிதர்கள், நிறம் பார்த்து, சாதிபார்த்து, அந்தஸ்த்து பார்க்கும் மனிதரிம் ஏன் பெண்ணை படை த்தாய் என்று கேள்வி கேட்பதாகவும், நீயும் கறுப்பு, நானும் கறுப்பு, ஏன் என்னை சேர்க்கவில்லை என்று ஏங்கும் ஒரு பெண்ணின் இதய ஏக்கமாகவும், பாடல் வரிகள் மிக அழகாக விழுந்துள்ளன.
                                                                                             இந்தப்பாடல் உருவான விதம் சுவாரஸ்யமிக்கது, இயக்குணர் ஏ.சி.திருலோகசந்தர் எப்போதும், கவி ஞரின் வார்த்தைகள், மக்களை சென்றடையவேண்டும் என்பத ற்காக, இசையின் ஒலி அளவை குறைத்து, வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். கவிஞர் இப்பாடலை எழுதி கொடுத்த பின், இசை அமை க்கும் போது, இயக்குணருக்கு, சரணத்தில் இருந்த வரிகள், பல்லவியை விட, வலிமையாக இருப்பதால், உடனடியாக சரணத்தை பல்லவியாக‌ மாற்றும்படி, இசைக்கூடத்தில் இருந்தபடியே, உதவி இயக்குணர்  எஸ்.பி. முத்துராமன் மூலமாக, கவிஞருக்கு கவிதை திரும்ப பறந்தது, கவிஞரை எங்கேயெல்லாம் தேடியும், அவரை கண்டுபிடி க்கமுடியவில்லை, திடி ரென அவர் தனது காரில், போவதை கண்டு,  அவரை மறித்து, விடயத்தை சொன்னவுடன் காரில் இருந்தபடியே , கவிஞர் பாடலை திரும்ப‌ எழுதி, இசை அமைக்கப்பட்டதே நீங்கள் இப்போது கேட்க இருக்கும் பாடல்!
https://www.youtube.com/watch?v=xO1RW80P8YU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...