திங்கள், 5 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 25 அண்ணன் காட்டியவழியம்மா,,,,,,

பாட்டும் பதமும் 25
"அண்ணன் காட்டியவழியம்மா,,,,,, தெரிந்தே கெடுப்பது பகையாகும்! தெரியாமல் கெடுப்பது உறவாகும்" பேசாலைதாஸ்
இந்தப்பாடல் படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் வருகின்றது. இது ஒரு அரசியல் பாடல் ஆனால் திரையின் பாத்திரத்திற்கும், கதைக்கும் அப்ப டியே பொருந்துகின்றது, சிவாஜியின் அற்புத நடிப்பு, கண்களை குளமா க்கும். கவிஞர் கண்ணதாசன், கருத்து பேதத்தால், அண்ணாதுறையை விட்டு பிரிந்து சென்ற காலம் அது! ஒரு உறைக்குள் இரு வாள் இருக்க முடியாது, ஒரு கட்சிக்குள் இரு கவிஞர்கள், இரு எழத்தாளர்கள் இருக்கக்கூடாது என்ற, கருணாநிதியின் இராஜதந்திரத்தால், அண்ணாவும் கண்ணதாசனும் பிரிய நேரிட்டது, அண்ணாதுரை தன்னை வஞ்சித்துவிட்டதாக அவர் எழுதிய கவிதையே திரக்கதைக்கும் அப்படியே பொருந்திவிட்டது. இவர் எழுதிய கவிதையை, அண்ணாதுறையிடம், கண்ணதாசன் உங்களைப்பற்றி பாட்டு எழுதி இருகின்றார், என கருணாநிதி சொல்ல, அதை வாசித்திவிட்டு, அண்ணாதுறை சொன்னாராம், " போகாட்டும் விட்டுவிடு, தூய தமிழில் திட்டி இருக்கின்றான் தம்பி" என்று பெருமையோடு சொன்னாராம், அண்ணதுறை.
                                                                                            அண்ணன் காட்டிய வழியம்மா, வலியம்மா என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம், இந்தபாடலில் வரும் அத்தனை வசனத்தையும் கவன‌மாக அவதானித்தால், ஒவ்வொரு வசனமும் அர்த்தமுள்ளது. கண்ணை இமை கெடுப்பது, அன்பின் பழி, கெடுக்கும் கை, தொடாமல் சுடும் சிரிப்பு, தெரியாமல் கெடுக்கும் உறவு என்று தொடராக செல்லும், வசன அமைப்பு, பலே! 

                                                          அதிக விளக்கம் நான்சொல்லதேவையில்லை.
இதில் ஒரு வசனம் வரும், பொருத்தருள்வாய் என கும்பிட்டேன், கும்பிட்ட கையை முறித்துவிட்டான், இந்த வசனத்தில், கவிஞர் திருக்குறளை ஞாபக படுத்துகின்றார். கூடா நட்பு என்ற பகுதியில் 828 வது குறளாக 

"தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; ஒன்னார் அழுத கண்ணீரும், அனைத்து." 
அதாவது கும்பிட்ட கைக்குள், துப்பாக்கி இருப்பது போல, வஞ்சிப்பார் அழுத கண்னீரும் இருக்கும், என்பதே அது. கோட்சே காந்தியை கும்பிட்டு, சுட்டதை இங்கே காட்சியாக உங்கள் மனத்திரையில் கொண்டு வருகின்றேன். இனி பாட்டைக்கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=877VoyR6JkM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...