திங்கள், 5 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 26 யார் அந்த நிலவு?

பாட்டும் பதமும் 26

"யார் அந்த நிலவு? ஏன் இந்த கனவு?" பேசாலைதாஸ்
எனக்கு பிடித்தமான ஓர் பாடல், உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கின்றேன், சிறந்த பாடல், சிறந்த இசை, சிறந்த குரல், சிறந்த கதை, சிற ந்த நடிப்பு இவை அனைத்தும் ஒருங்கே அமைய ப்பட்ட பாடல் இது! நிலவென்றாலே எனக்கு கொள்ளை ஆசை, அதுவும் நோர்வே நாட்டில், வெண்பணி மலைமுகட்டில் வழிய, அதன் வழியே, என் வெண் முழுமதி, மெல்ல தழுவி, எழும்பும் அற்புத‌ காட்சி! என்னை நானே மற ந்து, வெண்பனி மலை முகட்டின் மீது, வெறுப்பு கொள்வேன், என் நிலாமதியை எப்படி சொந்தம் கொள்வாய் எனக்கேட்பேன்!. என் மனைவி பெயர் கிறிஸ்மதி, மூத்த மகள் பெயர், வான்மதி, ஒரேஒரு அருமைமகன், மதிவாணன், என் செல்ல கடைக்குட்டி கலைமதி இப்படி என் குடும்பமே மதி கொண்ட குடும்பம்! எனக்கொரு இரகசிய காதலி இருக்கின்றாள், அவள் தான் நிலா, என் கற்பனைக்கும், கவிதைகளுக்கும், உரமூட்டுபவள், காதலில் வளர்ந்து  மாதத்தில் ஒரு நாள்! உடல் உறவு (முழுமதி) கொள்ளும், பின்னர் ஊடலில் தேய்ந்து அமவாசையில் தவிக்க விட்டு, மூன்றாம் பிறையில் கண் திறப்பள் அவள்! . நான் எழுதும் கதை,  என் உள்ளத்தில் எழும்  கவிதைகளை நிலாமதி வலைப்பூங்காவில் தோரணமாக கட்டி தொங்கவிட்டிருக்கின்றேன்.

                                                                யார் அந்த நிலவு என்ற பாடலில், காதலி இல்லாமல் தவிக்கும் ஒருவன், இன்னொருவன் மனைவிக்கு, கணவனாக நடிக்கும் ஒரு இக்கட்டான நிலை, இதை சித்தரிக்கும் காட்சியும் பாடல் பின் புலமும்,,,விஸ்வநாதன் மும்முரமாக இசையை தேடிக்கொண்டிருக்கின்றார், சாந்தி என்ற பிம்சிங்கின் படத்துக்காக,  "ஆங்கில பொப்பாடல், மாதிரி, அதுதான், கிளிவ் ரிச்சார்டின் பாட்டு, We don't talk more  மாதிரி புதுமையா இசையில், அமைக்கக் கூடாதா" என சிவாஜி சேர், கிண்டல் அடிக்க," அண்னே நான் அமைச்சுட்ட, நீங்க அதுமாதிரி நடிப்பீங்களா?" என விஸ்வநாதன் கேட்க, விஸ்வநாதனை, ஏற இறங்க, பார்த்துவிட்டு, சிவாஜி சென்றுவிட்டார், அடுத்த நாள், இசை ரெடி,  இசையை, கவிஞருக்கு காட்ட, பாடலும் ரெடி, அதை செளந்தராஜனுக்கு போட்டு காட்டினார் விஸ்வநாதன், " என்ன இது! உச்ச ஸ்தாயில் ஓங்கிப்பாடும், என்னைப்போய், யார் இந்த நிலவு என்று, தாழ்ந்த ஸ்தாயில் பாடச் சொல்கின்றீர்களே, நான் மாட்டேன்" என செளந்தர‌ராஜன் சொல்ல, " நான் சொல்லுற மாதிரி நீ பாடினா இதுதான் நீ பாடிய பாட்டில் சிறப்பாக அமையும்  என அவர் சொல்ல, அவரும் பாடிவிட்டார், இப்போது சிவாஜி சாருக்கு போட்டு காட்டியபோது, பாட்டை கேட்டுவிட்டு, எடுத்த எடுப்பிலே நடிக்கும், சிவாஜி கொஞ்சம் யோசித்தாரம், எனக்கு ஒரு நாள்  அவகாசம் தாருங்கள் என்று சொல்ல, பீம்சிங் தலையை சொரிந்துவிட்டு, அடுத்த நாள், போய்க்கேட்டார், இன்னுமொரு நாள் அவகாசம் கேட்டு, நடித்தபாடல் காட்சி தான் இது! அவரின் கையில் இருந்த சிகரட் கூட இதில், நடித்திருக்கின்றது, நான் அவ்வப்போது என் மனைவி, என் காதலி, அதுதான் என் ஆசை நிலாவோடு சஞ்சலப்படும் போதெல்லாம் பாடும் பாட்டு! நீங்களும் கேளுங்கள்! Cliff  Richard இன் We don't talk more என்ற பாடலையும் இணைத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...