திங்கள், 19 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 39 மூங்கில் இலை மேலே, துங்கும் பனி நீரே

" மூங்கில் இலை மேலே, துங்கும் பனி நீரே!" பேசாலைதாஸ்

                                                          காட்டுராணி திரைப்படத்தில் வந்த பாடல் இது. இந்தபடம் வெளிவந்த ஆண்டு 1965, இசை பி.எஸ். திவாகர் பாடியவர் பி.சுசீலா, பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். இந்த பாடலின் பல்லவி, செவி வழி வந்த நாட்டார் பாடலில் இருந்து கண்ணதாசன் கடன் வாங்கியுள்ளார். இந்த பல்லவியில் ஒரு சுவையான இலக்கிய சமாச்சாரம் உண்டு.

                                                                               ஒரு முறை கம்பர் வயல்வெளிப்பக்கம் சென்றாராம். அப்போது உழவர்கள் உழவுத்தொழில் செய்துவந்தார்களாம். அப்போது ஒரு உழவர் மாலைவேளையில் ஏற்றப்பாட்டு பாடினாராம்..

மூங்கில் இலைமேலே........
தூங்கும் பனிநீரே....

என்று இவ்வாறு பாடிய உழவர் அன்றைய பணியை நிறைவு செய்து பாடலை முழுதும் பாடமலேயே வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். பாடலைக் கேட்டு வியந்த கம்பர் பாடலை முழுவதும் கேட்க இயலவில்லையே என்று வருந்தி னாராம்...அந்தப்பாடலின் அடுத்த அடிகளைக் கேட்டு மகிழவேண்டும் என்று எண்ணிய கம்பர் அடுத்த நாளும் அங்கு வந்து உழவனின் பாடலுக்காகக் காத்திருந்தாராம்..

                                                                         மறுநாள் வந்த உழவன் பாடினானாம்..

தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே!

என்று. இந்த உழவனின் பாட்டைக்கேட்டு கம்பன்  வியந்து போனாராம். இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சிந்திப்பதை விட “கவிச்சக்கரவர்த்தி கம்பரே வியக்கும் வகையில் இந்த வாய்மொழி ப்பாடல்களின் சுவை இருக்கிறது என்ற கருத்தை உணர்ந்து கொள்ளுதல் நயம் பயப்பதாக அமையும். கம்பரும், கண்ணதாசனும் கருத்தொருமித்த, கவிஞர்கள் என்று சொல்லாமல் சொல்லவந்தேன். இனி பாட்டைக்கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=ujtBl7RKFEA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...