" கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? " பேசாலைதாஸ்
ஆலையமணி படத்துக்காக, மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் இசையில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில், செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய பாடல், காதல், இலக்கியநயம், பக்தி எல்லாமே சேர்ந்த ஓர் கலவை தான் இந்த பாடல். கல்,சொல் என்று எதுக மோனையாக வரும் இந்த பாடலில், ஒரு அடிவரும் "கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்.கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்!" மாணிக்கவாசகர் மனமுருகி, இறைவனுகாக பக்திப்பா டல்தான் பாடினார். காதலியின் வார்த்தைகளை கொண்டுபோய், திருவாசகத்தோடு கலக்கின்றார் கண்ணதாசன், பக்தியையும், காதலையும் கலக்கும் ஒரு கலவைக்காரன் இந்த கவிஞன்.
"உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா ,இல்லையென்று சொல்வதுந்தன் இடைய ல்லவா மின்னல் இடையல்லவா" இந்த பாடல் வரிகளை சற்றே கவனியு ங்கள்! இறைவன் இருக்கின்றானா? இல்லையா? என்ற கேள்விக்கு நீங்கள், பெரிய பெரிய தத்துவங்களை தேடவேண்டிய அவசியமே இல்லை. கடவுள் உண்டு என்று, பெண்களின் கண்களும், பெண்களின் இடையும் சொல்லித்தரும் . பெண்களுக்கு இடை இருக்கா, இல்லையா என்ற கேள்வியை எல்லாக்காலமும், எல்லாக்கவிஞர்களும் கேட்டுக்கொ ண்டதுண்டு. "நடையா இது நடையா நாடகம் அன்றோ நடக்குது, இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது" என்று குட கண்ணதாசன் பாடியுள்ளார்.
பெண்களுக்கு இடை இருக்கா இல்லையா என சண்டை போட்டது அந்தக்காலம், இப்போது பெண்களுக்கு எடை இருக்கா? தொடை இருக்கா? என்று சண்டை போடுவது, இந்த காலம், பார்த்தீர்களா இரசனை எங்கே போகின்றது என்று? உண்டு என்று சொல்லும் போது, பெண்களின், கண்கள் மேலும் கீழும் அசையும் அதைவைத்து, கவிஞர் உண்டென்று சொல்வது உன் கண் அல்லவா! என்றான். பெண்கள் நடக்கும் போது இடை படும்பாட்டை பார்த்திருப்பீர்கள், அது இடம், வலமாக ஒய்யாரமாக அசையும், இல்லை என்று சொல்லும் போது எப்படி, இடை யனது, இடம் வலமாக அசையுமோ, அது போல பெண்கள் இடையும் அசையும், எனவேதான், கவிஞர் இல்லை என்று சொல்லுவது, உந்தன் இடை அல்லவா என்று பாடினான்!
கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா, காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா, அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி,சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி இந்த வரிகளில் கவிஞன் என் தாய்த்தமிழை மங்கயாக வர்ணித்து, கம்பன், காளிதாசன் இவர்களை எல்லாம் துணைக்கு அழக்கின்றான் கண்ண தாசன் இதனைப்பார்த்து, கண்ணதாசின் இரசிகன், பேசாலைதாஸ் மெய்மறக்கின்றான், இனி பாடலை கேளுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக