சனி, 10 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 32 ஆண்டவன் படைச்சான்,

ஆண்டவன் படைச்சான், எங்கிட்ட கொடுத்தான், அனுபவி ராஜா,  என்று அனுப்பிவைச்சான்!  பேசாலைதாஸ்
                                                                      மனிதர்களை மூடன், மடையன் என வசை பாட கவிஞர்களுக்கு மட்டும் தான் தெரியும், உரிமையும் உண்டு, ஏனெனில் அவர்கள் இரசனையோடு வாழ்வை உற்று நோக்குபவர்கள். மனித மனது எப்போதும்,  முன்னுக்குப்பின் முரணானது, இரண்டில் நிலை கொள்ளும், ஒன்று இறந்தகாலம் மற்றது எதிர்காலம், அது ஒருபோதும் நிகழ்கின்ற காலத்தில் நிலைப்பதில்லை. ஆனதில்தான் கவிஞர் அழகாக சொன்னான், நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன், நடப்பதை எண்ணி கவøலைப்பட்டால் அவன் மூடன்.

                                             எனவே நான் சொல்கின்றேன் நீங்கள் மூடனாக இருக்க தேவையுமில்லை, மடையனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, முதலில் மனிதனாக இருக்கப்பாருங்கள், முடிந்தால் நல்ல இரசிகனாக வாழப்பாரு ங்கள்! இரசிக்கத்தானே இந்த மனசு, கொஞ்சம் இரசனையோடு வந்து பழகு, என்று நான் உங்களை அழைகின்றேன். வாழ்வில் இன்பம் வந்தாலும், இரசி க்கவேண்டும், துன்பம் வந்தாலும் இரசிக்கவேண்டும். துன்பம் இல்லை என்றால், வாழ்வில் இன்பத்தின் அர்த்தம் புரியாது, இது என் வாதம்! 

                                                 நிகழ்காலத்தில் நிலைத்தல், என்பது மிகப்பெரிய தத்துவதேடல், ஒருமுறை மகணரிசியிடம் ஒரு ஐரோப்பியன் கேட்டான் .  எனக்கு நிறைய எண்ணங்கள் உண்டு ஆனால் கடவுளை என்னால் காண முடியவில்லை, கடவுளை நான் காண்வேண்டும்(" I was full of thoughts and ideas, but I could not see the God I want to see him" ) என்றானாம் அதற்கு மகணரிசி அழகாக சொன்னார். Look between thoughts, there is God" இரு எண்ணங்களுக்கிடையே இருக்கும் இடைவெளியில் க‌டவுள் இருக்கின்றார் என்று, மாணிக்கவாசகர், திருவாசகத்தில் அழகாக சொன்னார் "வேகம் தடுத்தாண்ட வேந்தன் அடிவாழ்க!" தொடராக அலைபோல நீண்டு கொண்டே போகும் மனித எண்ணங்களை தடுத்து நிறுத்தி, அதில் அமைதி கண்டு, இரசித்து வாழ்க என்பதே அதன் அடிப்பொருள். எண்ணங்களால் நிரம்பியதே மனது, எல்லா எண்ணங்களையும் தொலைத்துவிடு வருவது வரட்டும் என்று வாழ்வை இரசிக்க, கவிஞர் அழகாக இந்த பாடலில் சொல்கின்றார்.

                                                 நிகழ்காலத்தில் நிலைப்பது, அதாவது இந்த கனமே சாசுவதம்! இந்த கனம் தான் உண்மையானது அதை முடிந்தால் இரசி! கண்ணதாசன் சொன்னான், " போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல இரசிகன், (அவன் தான் பேசாலைதாஸ்) அவன் இவனே! இவன் அவனே!  இப்பொது நீங்கள் வாழுகின்ற வாழ்க்கைதான் உண்மையானது அதனை இரசியுங்கள்! தாவிப்பாயும் மனம் என்ற குரங்கை அடைக்கி வையுங்கள்! பாரதி சொன்னான். "“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்! ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்  அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய், நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்  விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்" ஆமாம் மனித மனது அப்படித்தான்! ஒன்றியே பற்றிக்கொள்ளூம், அதை விடாது ( காணி, கட்டிடம் கட்டுவது) அன்பர்களே! கவிஞர் கண்ணதாசன், நிகழ்காலத்தை இரசியுங்கள், நிலைத்து இருங்கள் என்ற மாபெரும் தத்துவத்தை, பெட்டிக்கடைக்காரன் தொட்டு, மீன் விற்கும் பெண், கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு, எளிமையாக பாடினான், ஆண்டவன் படைத்தான், எங்கிட்ட கொடுத்தான் என்று. இதோ பாடலை கேளுங்கள், நான் சொல்லவந்தது உங்களுக்கு புரியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...