"சொன்னதும் நீதானா? சொல் சொல் என்னுயிரே! சம்மதம்தானா?" பேசாலைதாஸ்
இந்த பாடல் இடம் பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலையம். சீறிதர் இயக்கத்தில் உருவான படம், பாடலை பாடியவர் பி சுசீலா, இசை மெல்லிசை மன்னன் விஸ்வநாதன். பாடல் ஆசிரியர் கண்ணதாசன்.
இந்த பாடலில் நான் கண்டு கொண்ட, ஒரு சிறப்பம்சம், இந்த பாடலை ஒரு பெண்ணின் உணர்வோடு, ஒரு பெண் தான், பாடமுடியும், இந்த பாடலை ஆண்குரல் பாடினால் இரசிக்கமு டியாது, இதற்கு காரணம், ஒரு பெண்ணாகவே உணர்ந்து கண்ணதாசன், பெண்ணின் மனதுக்குள் புகுந்து இந்த பாடலை எழுது இருப்பதே காரனம் என்பது என் கருத்து!
இன்னொரு கைகளிலே, யார் யார் நானா? என்ற கேள்விக்கனையே ஒரு பெண்ணின் ஏக்கத்தை உணரவைக்கி ன்றதல்லவா! இறுதிவரை துணை இருப்பேன் என்றாயே! இப்போது என்னை ஏங்கவைக்கலாமா? சொல், சொல்,,,,என்ற வரிகள்.
ஒரு மனதில் ஒருமுறைதான், உருவாகும் உறவே காதல்! அந்த உறவில் ஒரு சிறு கீறல் விழுந்தாலே, உள்ளத்தில் உள்ள காதல் கரைந்துவிடும்! ஒளிவு மறைவு இன்றி உள்ளத்தின் உறவு கள் இருக்கவேண்டும் என்பதே இந்த பாடல் உணர்த்தும் கருப்பொருள்.
இந்த பாடல் உருவான விதமே தனி ரகம்!
மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வா ர்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.
இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போ ஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.
இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வர வில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்கு நருக்கு திருப்தி இல்லை.
அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்பட வில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டு விட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரி களையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன். ‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது. இனி பாடலை கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=znRUzlYa3bk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக