மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே! பேசாலைதாஸ்
அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் பாசமலர் படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் இது, மெல்லிசை மன்னன் விஸ்வநாதனின் நெஞ்சை வருடம் இசை, எந்த மொழி சார்ந்த வர்கள் கேட்டாலும் ஒரு கணம், நின்று காதுகளை திருப்பவைக்கும் மெல்லிய வருடல் இசை. குறிப்பாக குழுந்தைகளிடம் பாடிக்காட்டுங்கள் அவர்களே நெஞ்சம் உருகுவார்கள். இந்த பாட்லில் கண்ணதாசன் செழுமையான மொழிச்சொல்லை பிர்யோகித்திருப்பார். குழந்தை தூங்கும் போது, தூங்குகின்றார்கள், நித்திரை கொள்கின்றார்கள் என்று சொல்வது செழுமை இல்லை, எனவேதான் கண் வளராயோ என்று அந்த காலத்தில் தாலாட்டுப்பாடுவார்கள்.
கடந்து போன காலங்களை நினைக்கையில் இதயத்துடன் பிணைந்த பாடல்களின் வாசம் நம் நெஞ்சங்களை நிறை க்கும். பிஞ்சுமனங்களில் வேரூன்றி, பற்றிப்படர்ந்து , நெஞ்சின் அடி யாழத்தின் உள்ளுறைகளில் புதைந்த பாடல்களை நம்மால் இலகுவாக மறக்கமுடிவதில்லை.
Music and Rythm find their way in to the secret places of the Soul – என்பார் பிளேட்டோ.
கடந்து கால நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கு இசை ஒரு இலகுவான சாதனம். பழையபாடல்களைக் கேட்கும் போது எந்தெந்தப்பாடல்களைக் எங்கெல்லாம் கேட்டோம், எந்தச் சூழ்நிலையில் அவற்றைக்கேட்டோம் என்பதெல்லாம் விரல் சொடுக்கில் வந்து விழுந்து விடுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களிலும் , துக்க கரமான சம்பவங்களிலும் இசை கலந்தே இருக்கிறது.!
நினைவுகளின் ஓடையாக இசை விளங்குகிறது.இசையுடன் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். ஒவ்வொரு பாடலும் நம்முடன் உரையாடல்களை நிகழ்த்தியே வந்து ள்ளது.இசையின் முருகு இளம்வயது பருவத்தில் நம்மை ஆட்கொள்கி றது. இனிய வாத்திய இசையுடன் அதை பருகும் போது மனம் எழில டைகிறது.உணர்ச்சி நிறைந்த இசை உள்ளத்தில் சிறு பொறியைத் தோற்றுவித்து நுண்ணறிவில் சுவாலையை ஏற்படுத்துகிறது இதனால் எழும் அறிவார்வத்திற்கு உயிர் கொடுக்கிறது.
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே….
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
இந்தப்பாடல் வரிகளை வாசிக்கும் போதே எத்தனை பரவசம் ஏற்படுகிறது.பாடலின் ஒலிநயம் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்த அத னுடன் இணைந்த இசையோ நம்மை நெகிழ வைக்கிறது. நதியில் விளையாடி,,, கொடியில் தலை சீவி! உயர் இலக்கியத்தண்மை படலில் பளிச்சிடுகின்றது. இந்த பாடலின் உயர்வை நான் சொல்வது, அதிக பிரசங்கித்தனமாகிவிடும். அவரவர்க்கு இந்த பாடல் வெவ்வேறு உணர்ச்சி ததும்பல்களை தரக்கூடும், பாடலை நீங்களும் கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=imwsn-J8NuM