வியாழன், 22 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 41மலர்ந்தும் மலராத பாதி மலர்போல


மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே! பேசாலைதாஸ்

                                                                       அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் பாசமலர் படத்தில் கண்ணதாசன் எழுதிய‌ பாடல் இது, மெல்லிசை மன்னன் விஸ்வநாதனின் நெஞ்சை வருடம் இசை, எந்த மொழி சார்ந்த வர்கள் கேட்டாலும் ஒரு கணம், நின்று காதுகளை திருப்பவைக்கும் மெல்லிய வருடல் இசை. குறிப்பாக குழுந்தைகளிடம் பாடிக்காட்டுங்கள் அவர்களே நெஞ்சம் உருகுவார்கள். இந்த பாட்லில் கண்ணதாசன் செழுமையான மொழிச்சொல்லை பிர்யோகித்திருப்பார். குழந்தை தூங்கும் போது, தூங்குகின்றார்கள், நித்திரை கொள்கின்றார்கள் என்று சொல்வது செழுமை இல்லை, எனவேதான் கண் வளராயோ என்று அந்த காலத்தில் தாலாட்டுப்பாடுவார்கள்.

                                                              கடந்து போன காலங்களை நினைக்கையில் இதயத்துடன் பிணைந்த பாடல்களின் வாசம் நம் நெஞ்சங்களை நிறை க்கும். பிஞ்சுமனங்களில் வேரூன்றி, பற்றிப்படர்ந்து , நெஞ்சின் அடி யாழத்தின் உள்ளுறைகளில் புதைந்த பாடல்களை நம்மால் இலகுவாக மறக்கமுடிவதில்லை.

Music and Rythm find their way in to the secret places of the Soul – என்பார் பிளேட்டோ.

                                                     கடந்து கால நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கு இசை ஒரு இலகுவான சாதனம். பழையபாடல்களைக் கேட்கும் போது எந்தெந்தப்பாடல்களைக் எங்கெல்லாம் கேட்டோம், எந்தச் சூழ்நிலையில் அவற்றைக்கேட்டோம் என்பதெல்லாம் விரல் சொடுக்கில் வந்து விழுந்து விடுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களிலும் , துக்க கரமான சம்பவங்களிலும் இசை கலந்தே இருக்கிறது.!

                                                                                       நினைவுகளின் ஓடையாக இசை விளங்குகிறது.இசையுடன் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். ஒவ்வொரு பாடலும் நம்முடன் உரையாடல்களை நிகழ்த்தியே வந்து ள்ளது.இசையின் முருகு இளம்வயது பருவத்தில் நம்மை ஆட்கொள்கி றது. இனிய வாத்திய இசையுடன் அதை பருகும் போது மனம் எழில டைகிறது.உணர்ச்சி நிறைந்த இசை உள்ளத்தில் சிறு பொறியைத் தோற்றுவித்து நுண்ணறிவில் சுவாலையை ஏற்படுத்துகிறது இதனால் எழும் அறிவார்வத்திற்கு உயிர் கொடுக்கிறது.

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே….

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே

                          இந்தப்பாடல் வரிகளை வாசிக்கும் போதே எத்தனை பரவசம் ஏற்படுகிறது.பாடலின் ஒலிநயம் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்த அத னுடன் இணைந்த இசையோ நம்மை நெகிழ வைக்கிறது. நதியில் விளையாடி,,, கொடியில் தலை சீவி! உயர் இலக்கியத்தண்மை படலில் பளிச்சிடுகின்றது. இந்த பாடலின் உயர்வை நான் சொல்வது, அதிக பிரசங்கித்தனமாகிவிடும். அவரவர்க்கு இந்த பாடல் வெவ்வேறு உணர்ச்சி ததும்பல்களை தரக்கூடும், பாடலை நீங்களும் கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=imwsn-J8NuM

திங்கள், 19 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 40 சொன்னதும் நீதானா? சொல் சொல் என்னுயிரே! சம்மதம்தானா


"சொன்னதும் நீதானா? சொல் சொல் என்னுயிரே! சம்மதம்தானா?" பேசாலைதாஸ்

                                   இந்த பாடல் இடம் பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலையம். சீறிதர் இயக்கத்தில் உருவான படம், பாடலை பாடியவர் பி சுசீலா, இசை மெல்லிசை மன்னன் விஸ்வநாதன். பாடல் ஆசிரியர் கண்ணதாசன்.

                                                             இந்த பாடலில் நான் கண்டு கொண்ட, ஒரு சிறப்பம்சம், இந்த பாடலை ஒரு பெண்ணின் உணர்வோடு, ஒரு பெண் தான், பாடமுடியும், இந்த பாடலை ஆண்குரல் பாடினால் இரசிக்கமு டியாது, இதற்கு காரணம், ஒரு பெண்ணாகவே உணர்ந்து கண்ணதாசன், பெண்ணின் மனதுக்குள் புகுந்து இந்த பாடலை எழுது இருப்பதே காரனம் என்பது என் கருத்து!  

                                                                 இன்னொரு கைகளிலே, யார் யார் நானா? என்ற கேள்விக்கனையே ஒரு பெண்ணின் ஏக்கத்தை உணரவைக்கி ன்றதல்லவா!  இறுதிவரை துணை இருப்பேன் என்றாயே! இப்போது என்னை ஏங்கவைக்கலாமா? சொல், சொல்,,,,என்ற வரிகள். 

                                                                  ஒரு மனதில் ஒருமுறைதான்,  உருவாகும்  உறவே காதல்! அந்த உறவில் ஒரு சிறு கீறல் விழுந்தாலே, உள்ளத்தில் உள்ள காதல் கரைந்துவிடும்! ஒளிவு மறைவு  இன்றி உள்ளத்தின் உறவு கள் இருக்கவேண்டும் என்பதே இந்த பாடல்  உணர்த்தும் கருப்பொருள். 

                                                                    இந்த பாடல் உருவான விதமே தனி ரகம்!
மகாபாரத கர்ணன் தொடங்கி, நட்புக்கு பலரை உதாரணம் சொல்வா ர்கள். தமிழ்த் திரையுலகில் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வ நாதனும், கவிஞர் கண்ணதாசனும்.

                                                                    இவர்களது கூட்டணியில் உரு வான பல பாடல்களின் பின்னணியில் சுவாரஸ்யங்கள் உண்டு. பாடல் கம்போ ஸிங் செய்யும்போது, யார் முதலில் வருகிறாரோ, அவர் லேட்டாக வருபவர் மீது செல்லமாக கோபப்படுவார். அந்தக் கோபத்தின் விளைவு, அருமையான பாடல் பிறக்கும்.

                                                                      இப்படித்தான், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துக்கான பாடல் கம்போஸிங் நடந்தபோது, எம்எஸ்வி, இயக்குநர் ஸ்ரீதர், பாடகி சுசீலா எல்லோரும் ஆஜராகி இருக்க, கண்ணதாசன் வர வில்லை. நேரம் ஆக ஆக எம்எஸ்வி-க்கு கோபம். கவிஞரைப் பற்றி கடிந்துகொண்டார். லேட்டாக வந்த கவிஞரிடம் பாடலுக்கான சூழலை ஸ்ரீதர் சொல்ல, நான்கைந்து பல்லவிகளை எழுதிக் கொடுத்தார். இயக்கு நருக்கு திருப்தி இல்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், கவிஞரை எம்எஸ்வி கடிந்துகொண் டது பற்றி அவரது காதில் போட்டு விட்டார். அதைக் கேட்டு கவிஞர் கோபப்பட வில்லை. ‘விசு, நீயா அப்படி பேசினாய்’ என்று சிரித்த படியே கேட்டு விட்டு, தனக்கே உரிய பாணியில் ‘சொன்னது நீதானா சொல்.. சொல். என் விசுவே..’ என்று ராகமாக பாட, டக்கென்று பிடித் துக் கொண்டார் ஸ்ரீதர். ‘இதுதான் நான் எதிர்பார்த்தது’ என ஸ்ரீதர் சொல்ல, அந்த வரி களையே பல்லவியாக்கி பாட்டை எழுதினார் கண்ணதாசன். ‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. என் உயிரே.’என்ற அந்தப் பாடல் பெண்களின் கண்களில் நீரை வரவழைத்தது. இனி பாடலை கேளுங்கள்
https://www.youtube.com/watch?v=znRUzlYa3bk

பாட்டும் பதமும் 39 மூங்கில் இலை மேலே, துங்கும் பனி நீரே

" மூங்கில் இலை மேலே, துங்கும் பனி நீரே!" பேசாலைதாஸ்

                                                          காட்டுராணி திரைப்படத்தில் வந்த பாடல் இது. இந்தபடம் வெளிவந்த ஆண்டு 1965, இசை பி.எஸ். திவாகர் பாடியவர் பி.சுசீலா, பாடலை எழுதியவர் கவியரசு கண்ண தாசன். இந்த பாடலின் பல்லவி, செவி வழி வந்த நாட்டார் பாடலில் இருந்து கண்ணதாசன் கடன் வாங்கியுள்ளார். இந்த பல்லவியில் ஒரு சுவையான இலக்கிய சமாச்சாரம் உண்டு.

                                                                               ஒரு முறை கம்பர் வயல்வெளிப்பக்கம் சென்றாராம். அப்போது உழவர்கள் உழவுத்தொழில் செய்துவந்தார்களாம். அப்போது ஒரு உழவர் மாலைவேளையில் ஏற்றப்பாட்டு பாடினாராம்..

மூங்கில் இலைமேலே........
தூங்கும் பனிநீரே....

என்று இவ்வாறு பாடிய உழவர் அன்றைய பணியை நிறைவு செய்து பாடலை முழுதும் பாடமலேயே வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். பாடலைக் கேட்டு வியந்த கம்பர் பாடலை முழுவதும் கேட்க இயலவில்லையே என்று வருந்தி னாராம்...அந்தப்பாடலின் அடுத்த அடிகளைக் கேட்டு மகிழவேண்டும் என்று எண்ணிய கம்பர் அடுத்த நாளும் அங்கு வந்து உழவனின் பாடலுக்காகக் காத்திருந்தாராம்..

                                                                         மறுநாள் வந்த உழவன் பாடினானாம்..

தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே!

என்று. இந்த உழவனின் பாட்டைக்கேட்டு கம்பன்  வியந்து போனாராம். இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சிந்திப்பதை விட “கவிச்சக்கரவர்த்தி கம்பரே வியக்கும் வகையில் இந்த வாய்மொழி ப்பாடல்களின் சுவை இருக்கிறது என்ற கருத்தை உணர்ந்து கொள்ளுதல் நயம் பயப்பதாக அமையும். கம்பரும், கண்ணதாசனும் கருத்தொருமித்த, கவிஞர்கள் என்று சொல்லாமல் சொல்லவந்தேன். இனி பாட்டைக்கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=ujtBl7RKFEA

பாட்டும் பதமும் 38 மாலை மாற்றுப்பாடல்களும், சினிமா பாடல்களும்

பாட்டும் பதமும் 38
"மாலை மாற்றுப்பாடல்களும், சினிமா பாடல்களும்" பேசாலைதாஸ்
                                             இலக்கியத்தில் காணப்பட்ட காப்பிய இலக்கியத்தை கண்ணதாசன் வெகு எளிதாக, பாமரமக்களும் புரிந்து கொள்ளும் படி, எழுதியுள்ளார். அதேவேளை, சொற்களை வைத்து சொற்சிலம்பு கவி தைப்பாடல்களையும் சினிமாவில் புகுத்தியுள்ளார். காய் என்ற சொல்லைக்கொண்டு, அத்திக்காய், காய், காய். ஆலங்காய்வெண்ணி லவே என்ற பாடல்..

                                                 பார்த்தேன், இரசித்தேன், பக்கம் வர துடித்தேன், மலைத்தேன்,  இதுவென மலைத்தேன், என்று தேன் என்ற சொல்லை விகுதியாக கொன்டு எழுதினார். அதுபோல, வான் நிலா, நிலா அல்ல என் வாலிபம் நிலா என்ற பாடலிலும், நிலா என்ற சொல்லைவைத்து பாடல் எழுதினார். இப்படி பல பாடல்களை சொல்லலாம். தற்போது புது முயற்ச்சியாக மாலை மாற்று தமிழ் கவிதைகளையும், சினிமா பாடலாக வெளிவரத்தொடங்கியுள்ளது.. 

                                                                    முதலில் மாலை மாற்றுப்பாடல் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். மாலைமாற்று அல்லது இருவழியொக்கும் சொல் (Palindrome) என்பது பின்புறமிருந்து படித்தாலும் முன்புறம் படித்ததைப்போலவே பொருள் கொண்ட சொல், தொடர் அல்லது இலக்கம் ஆகும். தமிழ் இலக்கியத்தில் ஓவியக் கவி, மிறைக் கவி ஆகிய பிரிவுகளுள் மாலைமாற்று அடங்கும். மாலைமாற்று என்பத ற்கான ஆங்கிலச் சொல்லான Palindrome என்பது கிரேக்க வேர்ச் சொற்க ளிலிருந்து பெறப்பட்டு ஆங்கில எழுத்தாளரான பென் சான்சன் என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. 

                                                   தமிழ் மொழியில் விகடகவி, திகதி, குடகு, தாத்தா, காக்கா, பாப்பா, மாமா, கைரேகை  போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும். ஆங்கிலத்தில் Civic, Radar, Level, Madam, Malayalam, Pop, Noon, Refer போன்ற சொற்கள் மாலைமாற்றுகள் ஆகும்.. மாலைமாற்று சொல்லாக வும் வரலாம், சொற்தொடராகவும் வரலாம். உதாரணம்: தமிழ் மொழியில்

தேரு வருதே,
மாடு சாடுமா,
மோரு தாருமோ
தோடு ஆடுதோ
மேக ராகமே
மேள தாளமே
போன்ற தொடர்கள் மாலைமாற்றாக அமைந்துள்ளது.

ஆங்கிலத்தில்

Was it a cat I saw?,
Do gees see God?,
A Toyota's a Toyota,
A nut for a jar of tuna,
Madam, I am Adam
போன்ற தொடர்கள் மாலைமாற்றுகள் ஆகும்.

தமிழ் இலக்கியத்தில் திருஞானசம்பர்த்த மூர்த்தி தோத்திர பாடல்களை மாலை மாற்று பாடலாக ஆக்கியுள்ளார்.

இனி நான் இரசித்த முதாலாவது மாலை மாற்றுப்பாடல், இது 
வினோதன் எனும் தமிழ்த்திரைப்படட்த்தில் இடம்பெற்ற "மேகராகமே மேளதாளமே தாரா-ராதா!" எனும் நீண்ட திரைப்படப்பாடலும் இந்தியாவின் முதலாவது மாலைமாற்றுப் பாடல் ஆகும். இதனை மதன் கார்க்கி எழுதியதுடன் டி. இமான் இசையமைத்துள்ளார்
https://www.youtube.com/watch?v=sc9LGLITkWc


சனி, 17 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 37 கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும்,


"கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாடவேண்டும்" பேசாலைதாஸ்
                                                                                     கடவுளை திட்டுகின்றேன், எனக்கு என்னவோ நடந்துவிட்டது என்று நினைக்கின்றீர்களா? இந்த பாட்டுக்கு ள்ளே ஒரு சுவா ரஸ்யமான விடயம் இருக்கின்றது. வானம்பாடி’ – இது கவிஞர் தயாரித்த இனிமையான பாடல்கள் நிறைந்த வெற்றிச்சித்திரம். இதில் கதாநாயகன் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். பாடுவது போன்ற பாடல் காட்சிக்காக ஒரு பாடல்.
                                                                  பாடலைக் கவிஞர், “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன் காதாலித்து வேதனையில் சாகவேண்டும்!” என்ற பல்லவியுடன் எழுதியிருந்தார். பாடலைப் பாடவந்த டி.எம். சௌந்தரராஜன், ‘கடவுள் சாகவேண்டும்!’ என்ற பல்லவியைப் பார்த்து பயந்து, ‘நான் பாடமாட்டேனுங்க!’ என்று சொல்லிவிட்டார். அவர் மறுப்பு, கவிஞருக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது என்றாலும், வார்த்தைகளை வாரி வழங்கும் கவி மன்னர் கண்ணதாசன், பாடகரின் உணர்வுக்கு மதிப்புத் தந்து. “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் – அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!” என்று, பல்லவியை மறுவிநாடியே மாற்றித் தந்தார்.

                                                                           இன்றுவரை, கவிஞரின் திறமைக்கும், இசையமைத்த் கே.வி. மகாதேவனின் பெருமைக்கும், டி.எம். சௌந்தர ராஜனின் கடவுள் பக்திக்கும் ஏற்றங்கள் தரும் பாடலாகவே இப்பாடல் திகழ்கிறது. கண்களில் ஆசை பிறக்கின்றது, அந்த ஆசையே விஷமாக‌ ஆட்களை கொல்கின்றது! கடவுளை அழைத்து வந்து ஆசையில் மிதக்க விட்டு, கடவுளுக்கே அனுபவ பாடத்தை சொல்ல துடிக்கும் கவிஞரின் துணிவை நான் இந்த பாடலில் இரசிக்கின்றேன், நீங்களும் இரசியுங்கள்

https://www.youtube.com/watch?v=FlkDNOi21i8

பாட்டும் பதமும் 36 அல்லித்தண்டு காலெடுத்து, அடிமேல் அடியெடுத்து,

" அல்லித்தண்டு காலெடுத்து, அடிமேல் அடியெடுத்து, சின்ன கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்?" பேசாலைதாஸ்.
                                                                      கவியரசு கண்ணதாசன் எழுதிய பாட‌லில் என்னைக்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. காக்கும் கரங்கள் திரை ப்பட த்துக்காக, கே.வி.மகாதேவன் இசையில். கண்ணதாசனின் வரிக ளில் மிதந்தது இந்த பாடல்! தமிழ் இலக்கியத்தில் எத்தனையொ மலர்கள் இருக்கின்றன. அத்தனையும் பெண்களின் அழகு முகத்தையும், இதய த்தையும் வர்ணிக்க, கண்ணதாசன் மட்டும், சற்று விலகி, ஒரு குழந்தை யின் கால்களுக்கு , அல்லி மலரின் தண்டுகளை ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

 
                                         கவிதைகளிலும் போற்றப்ப ட்டிருப்பது போல சங்க இலக்கியங்களிலும் அல்லி மலர் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில், `பூ அல்லி கொய்யா மோ' என்று சிவபெருமானின் பெருமைகளைப் பாடியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கிணற்றில் மலர்ந்த அல்லி மலரில் பேயாழ்வார் தோன்றினார் என்பது வரலாறு. 

                                                                        இத்தகைய பழம்பெருமைகள் வாய்ந்த இந்த மலரானது குளம், பொய்கை (நீர் நிலை), நீர்ச்சுனை, மெதுவாக ஓடும் ஆறுகளில் வளரக்கூடிய ஒரு கொடியாகும். தாமரை மலர் போன்று காணப்படும் இது. ஆனால், தாமரை காலையில் மலர்ந்து இரவில் அதன் இதழ்கள் மூடிக்கொள்வதுபோல அல்லியின் இதழ்கள் இரவில் மலர்ந்து காலையில் இதழ் மூடிக்கொள்ளும். 

                                                                            எகிப்தில் உள்ள நைல் நதியில் உள்ள வெள்ளை நிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் தன் இதழ் மூடும். நீரில் மிதக்கக்கூடிய அகன்ற நீள்வட்ட இலைகளும் மெல்லிய குழலையும் கொண்ட அல்லி வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கொண்டது. எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலை யில் மலர்ந்து இரவில் குவியும்.

                                                                          நமது தமிழ் ஈழதேசிய மலராக, காந்தள் மலர் இருப்பதுபோல, தற்போது இலங்கையின்  தேசிய மலராக அல்லி பூ பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் நாட்டின் தேசிய மலராக நீலோற்பவம் காணப்பட்டது. 

                                                                                   அல்லி மலர் பற்றி எனக்கு தெரிந்த தகவல்களை உங்களோடு பரிந்துள்ளேன், இனி பாடல் பற்றி சிலாகிக்க ஆசைப்படுகின்றேன். பொன்மேனி சிகப்பும், பொல்லாத சிரிப்பும், சொல்லாதா கவிதைகள் சொல்லும்! என்ற வரிகள், என்னை அதிசயிக்க வைத்துவிட்டது. பேசாப்பொருளை, பேசவைப்பதுதான் கவிதையின் அழகு, ஆனால் இங்கு, ஒரு குழந்தையின் சிரிப்பை பாடலாக்கி,  சிரிப்பா க்கி, அதை சொல்லாத கவிதையாக்கி உள்ளார். சொல்லாத சொல், சொல்லாத கவிதை இவைகளுக்கு அர்த்தம் கொடுக்க, கண்ணதாசனுக்கு மட்டுமே கைவந்த கலை, என்னை விட்டுவிடுங்கள் பாவம் நான்! முத்து நகை இரத்தினங்களை, குழந்தையின் மோகன புன்னகை வெல்லும், என்ற இயல் தத்துவத்தை அவர் அழகாக சொல்லியுள்ளார். இனி மீதிப்பாடலை நீங்களே கேட்டு, கற்பனை சிறகுகளை விரியுங்கள்!
https://www.youtube.com/watch?v=HnfgnbhPrgU




செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 35 பூச்சியத்துக்குள்ளே ஒரு இராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்


" பூச்சியத்துக்குள்ளே ஒரு இராச்சியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்"  பேசாலைதாஸ்

                                                              இந்த பாடல் வெளிவந்த படம், வளர்பிறை, 1962 இல் வெளியானது, சிவாஜி, சரோஜதேவி நடித்தபடம். இசை, கே .வி. மகாதேவன். யோகனந்த இயக்கத்தில் வெளியான படம். கடவுளை புரிந்து கொள்ள நாம் முயற்ச்சித்தால் நாம் முட்டாளாகிவிடுவோம். அவனை புரிந்து கொள்ளும் அளவுக்கு, நமக்கு புத்தி இல்லை. அப்படி முயன்றால் அது, என்னால் முடியும் என்ற ஆணவத்தில் முடியும். ஆண வம் வந்தால், பின்னே ஆண்டவன் எங்கே? கடவுளை தேடும் முயற்ச்சி, வாரியர் சொன்னது போல குண்டாவுக்குள், அண்டாவை தேடுவதை ப்போலாகும். 

                              கிறிஸ்தவத்தில் ஒரு கதை உண்டு. புனித அகுஸ்தினார், இறைவனைப்பற்றி சிந்தித்துக்கொண்டு, கடற்கரையோரம், நடந்தார். அப்போது கரையில் ஒரு சிறுவன், கரையில் ஒரு குழி தோண்ட்டி, அதில் ஒரு சிற்பியால் கடல் நீரைக் கொண்டு, நிரப்ப முயற்ச்சி செய்துகொ ண்டிருந்தான், அப்போது அகுஸ்தீனார் அந்த சிறுவனைப்பார்த்து, என்ன செய்கின்றாய், எனக்கேட்க‌, அந்த சிறுவன், இந்த சிற்பியால்,  கடல் நீரையெல்லாம் , இந்த குழிக்குள் ஊற்றுகின்றேன் என்று சொன்னான், அதற்கு அகுஸ்தீனார், இது என்ன முட்டள்தனம், சின்ன சிற்பியால், கடல் நீர் முழுவதையும் அள்ள உன்னால் முடியுமா? எனக் கேட்க, நீர் மட்டும், உமது சின்ன மூளையால், கடலிலும் பெரிதான கடவுளை அறிய முடியும் போது, என்னால் முடியாத எனக்கேட்டுவிட்டு மறைந்தானாம். கடலில் கரைந்த  உப்புச்சிலை, கரைக்குவந்து, கதை சொல்வதைப்போல, கடவுளை அறியும், முயற்ச்சி அமையும்!

                                                                                 முற்றும் கசந்ததென்று, பற்றற்று வந்தவர்க்கெல்லாம், சுற்றம் என்றிருப்பவன் இறைவன் என்று கவிஞர் சொல்கின்றார். தோய்ந்தும் பொருளனைத்தும் தோயாது நின்ற சுடரே/ தொடக்கறுத்தோர் சுற்றமே'' என்று தொடங்கும் ஒரு கம்ப ராமாயணப் பாடல். 'தொடக்கறுத்தோர் சுற்றமே' என்ற  இரண்டு சொற்களின் பொருளைக்கொண்டு,  'முற்றும் கசந்ததென்று' என்ற சரணத்தை அமைத்துவிட்டார் கவிஞர் கண்ணதாசன். உயர்ந்த கருத்துகளுக்கு எல்லைதான் ஏது!

                                                                   தென்னை இள நீருக்குள்ளே, தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காய் போல இருப்பான் இறைவன்!. தேங்காய் ஓட்டு க்குள்ளே தானே, இளநீர் இருக்கும்!  இங்கே கவிஞர் மாற்றி பாடுகின்றார், தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே என்று, சித்தர்கள், இப்படித்தான், ஒன்று க்குள், ஒன்றை மாற்றி பாடுவார்கள். கோழிக்குள் முட்டைவைத்து, முட்டைக்குள் கோழிவைத்து இதுதான் கவிஞர் கண்ணதாசன், தத்துவம், பக்தி என்றால் சித்தானாகி, யோகியாகுவான், காதல் என்றால் பித்த னாகி, போகியாகுவான். பக்தி என்றால் கண்ணதாசன், பட்டிணத்தார் கையில் உள்ள கரும்பாவன், காதல் லீலை என்றால் காமதேவன் கையில் உள்ள கரும்பாவான்!

                                                                 வாழையடி, வாழையாக செழித்தோங்கும், வாழைக்கும் கன்று வைத்தவன், ஒருவன் அவன் தான் ஏழை இறைவன்! இறைவனை ஏழையாக கண்ட தத்துவஞானி என் கண்ணதாசன்! உண்மைதான் இறைவன், மனிதனின் அன்புக்காக ஏங்கும் ஏழைதானே! எனக்கு ஆறுதல் தர, ஒரு இதயத்தை தேடுகின்றேன் என்று இயேசு கூறியதை இங்கு நினைவு கூர்ந்து கொண்டு பாடலை கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=b8WQV6YmI5A

திங்கள், 12 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 34 கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?


" கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? " பேசாலைதாஸ்
                                                               ஆலையமணி படத்துக்காக, மெல்லிசை மன்னன் விஸ்வநாதன் இசையில், கவிஞர் கண்ணதாசன் வரிகளில், செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடிய பாடல், காதல், இலக்கியநயம், பக்தி எல்லாமே சேர்ந்த ஓர் கலவை தான் இந்த பாடல். கல்,சொல் என்று எதுக மோனையாக வரும் இந்த பாடலில், ஒரு அடிவரும் "கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்.கல்லைக் கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்!" மாணிக்கவாசகர் மனமுருகி, இறைவனுகாக‌ பக்திப்பா டல்தான் பாடினார். காதலியின் வார்த்தைகளை கொண்டுபோய், திருவாசகத்தோடு கலக்கின்றார் கண்ணதாசன், பக்தியையும், காதலையும் கலக்கும் ஒரு கலவைக்காரன் இந்த கவிஞன்.

                                                        "உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா வண்ணக்கண் அல்லவா ,இல்லையென்று சொல்வதுந்தன் இடைய ல்லவா மின்னல் இடையல்லவா" இந்த பாடல் வரிகளை சற்றே கவனியு ங்கள்! இறைவன் இருக்கின்றானா? இல்லையா? என்ற கேள்விக்கு நீங்கள், பெரிய பெரிய தத்துவங்களை தேடவேண்டிய அவசியமே இல்லை. கடவுள் உண்டு என்று, பெண்களின் கண்களும், பெண்களின் இடையும் சொல்லித்தரும் . பெண்களுக்கு இடை இருக்கா, இல்லையா என்ற கேள்வியை எல்லாக்காலமும், எல்லாக்கவிஞர்களும் கேட்டுக்கொ ண்டதுண்டு. "நடையா இது நடையா நாடகம் அன்றோ நடக்குது, இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது" என்று குட கண்ணதாசன் பாடியுள்ளார்.

                                 பெண்களுக்கு இடை இருக்கா இல்லையா என சண்டை போட்டது அந்தக்காலம், இப்போது பெண்களுக்கு எடை இருக்கா? தொடை இருக்கா? என்று சண்டை போடுவது, இந்த காலம், பார்த்தீர்களா இரசனை எங்கே போகின்றது என்று? உண்டு என்று சொல்லும் போது, பெண்களின், கண்கள் மேலும் கீழும் அசையும் அதைவைத்து, கவிஞர் உண்டென்று சொல்வது உன் கண் அல்லவா! என்றான். பெண்கள் நடக்கும் போது இடை படும்பாட்டை பார்த்திருப்பீர்கள், அது இடம், வலமாக ஒய்யாரமாக அசையும், இல்லை என்று சொல்லும் போது எப்படி, இடை யனது, இடம் வலமாக அசையுமோ, அது போல பெண்கள் இடையும் அசையும், எனவேதான், கவிஞர் இல்லை என்று சொல்லுவது, உந்தன் இடை அல்லவா என்று பாடினான்!

                                             கம்பன் கண்ட சீதை உன் தாயல்லவா, காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா, அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி,சென்ற பின் பாவலர்க்கு நீயே கதி என்றும் நீயே கதி இந்த வரிகளில் கவிஞன் என் தாய்த்தமிழை மங்கயாக வர்ணித்து, கம்பன், காளிதாசன் இவர்களை எல்லாம் துணைக்கு அழக்கின்றான் கண்ண தாசன் இதனைப்பார்த்து, கண்ணதாசின் இரசிகன், பேசாலைதாஸ் மெய்மறக்கின்றான், இனி பாடலை கேளுங்கள்!

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 33 மன்னவன் வந்தானடி தோழி,

"மன்னவன் வந்தானடி தோழி, மஞ்சத்திலே இருந்து, நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி" பேசாலைதாஸ்

                                                திருவருட்செல்வர் படத்திற்காக கண்ணதாசன் எழுதி, மல்லிசை மன்னன் விஸ்வனாதன் இசை அமைப்பில், பி. சுசீலா பாடிய‌ பாடல் இது. ஆடல் அரங்கிற்கு சர்க்கரவர்த்தி நுழைவதை பிரமாண்டமாக படம் எடு த்துள்ளார்கள். தொகையறா முடிந்து, பல்லவியை கேட்டபோது, எனக்குள் ஒரு சந்தேகம், கவிஞர் பாடலை பிழையாக எழுதிவிட்டாரோ என்று பலநாள், எண்ணியிருந்தேன். 

                                               ஒரு பெண்ணின் நெஞ்சத்தில், இடம் பிடித்தால்தான், அவள் நம்க்கு, மஞ்சத்தில் இடம் தருவாள், கூடவே நாம் வேண்டும்,  இன்ப த்தையும் அள்ளித்தரும், தேன் மலராக பெண் இருப்பாள், ஆனால் இங்கு, கவிஞர், நெஞ்சத்தில், இடம் பிடிக்கமுன்னர், எப்படி மஞ்சத்துக்குப்போனார் என்று ஒரு குழப்பம் எனக்கு. 

                                                   அன்மையில் சொல்வேந்தர் சுகி செலவம் அவர்கள், இந்த பாட்டுக்கு விளக்கம் கொடுத்தார், அதாவது கதாபாத்திரம் (பத்மினி)  சர்க்கரவர்த்தியின், பிரத்தியேக, ஆடல் அழகி, அவள் சர்க்கரவர்த்தியிடம், அந்தரப்புரத்தில், மஞ்சத்தில் இருந்தவள், இப்போது அவள் உண்மையாகவே, சகரவர்த்தியின் மீது காதல் கொள்வதாக, தோழிக்கு சொல்கின்றாள், நாட்டி யத்தின் மூலமாக. பார்த்தீர்களா? திரைக்கதையின் பாத்திரத்தை, விளக்க நீண்ட, கதை வசனம் தேவை, ஆனால் ஒரு சொல்லை, மாறிப்போட்டே, கதாபாத்திரத்தை விளக்கும், கவிஞரின் கவிப்புலமையை என்னனென்று நான் சொல்லுவேன்?

                               கவிதை என்றாலே, சொல்லால், சொல்லுக்குள் விளையாடும் ஒரு வினோத விளையாட்டு! The best words are in the best order, that is the poetry. என்று ஆங்கில கவிஞர்கள் சொல்லுவார்கள். இந்த பாடலில் ஒரு அடிவரும், மாயவனோ, தூயவனோ, நாயகனோ நானறியேன் என்று அவள் சொல்வது, தன்னை அறியாமல்  மனதை பறி கொடுத்துவிட்டதை சொல்லாமல் சொல்கின்றாள். செந்தமிழ் சொல் எடுத்து, இசை தொடுப்பேன், வண்ண த்தந்தத்திலே கவிதை சரம் தொடுப்பேன் என்றவரிகளும், தித்தால் ஒரு சம்பொற்கிண்ணம்! தத்தித்தாவிடும் தங்கக்கிண்ணம்! சித்தத்தால் ஒரு காதல் சின்னம்! அப்பாடா பைந்தமிழ் சொற்கள், கொட்டி உருண்ட்டோ டுகின்றது, கூடவே இளமையான என் நடன சுந்தரி, தோகை மயிலாள், பத்மினியின் நாட்டியம், கவிஞரின் கவிதைக்கு உயிரோட்டமாகின்றது! இனி பாடலை இரசியுங்கள்
https://www.youtube.com/watch?v=IBVrGAiqRGo

சனி, 10 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 32 ஆண்டவன் படைச்சான்,

ஆண்டவன் படைச்சான், எங்கிட்ட கொடுத்தான், அனுபவி ராஜா,  என்று அனுப்பிவைச்சான்!  பேசாலைதாஸ்
                                                                      மனிதர்களை மூடன், மடையன் என வசை பாட கவிஞர்களுக்கு மட்டும் தான் தெரியும், உரிமையும் உண்டு, ஏனெனில் அவர்கள் இரசனையோடு வாழ்வை உற்று நோக்குபவர்கள். மனித மனது எப்போதும்,  முன்னுக்குப்பின் முரணானது, இரண்டில் நிலை கொள்ளும், ஒன்று இறந்தகாலம் மற்றது எதிர்காலம், அது ஒருபோதும் நிகழ்கின்ற காலத்தில் நிலைப்பதில்லை. ஆனதில்தான் கவிஞர் அழகாக சொன்னான், நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன், நடப்பதை எண்ணி கவøலைப்பட்டால் அவன் மூடன்.

                                             எனவே நான் சொல்கின்றேன் நீங்கள் மூடனாக இருக்க தேவையுமில்லை, மடையனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, முதலில் மனிதனாக இருக்கப்பாருங்கள், முடிந்தால் நல்ல இரசிகனாக வாழப்பாரு ங்கள்! இரசிக்கத்தானே இந்த மனசு, கொஞ்சம் இரசனையோடு வந்து பழகு, என்று நான் உங்களை அழைகின்றேன். வாழ்வில் இன்பம் வந்தாலும், இரசி க்கவேண்டும், துன்பம் வந்தாலும் இரசிக்கவேண்டும். துன்பம் இல்லை என்றால், வாழ்வில் இன்பத்தின் அர்த்தம் புரியாது, இது என் வாதம்! 

                                                 நிகழ்காலத்தில் நிலைத்தல், என்பது மிகப்பெரிய தத்துவதேடல், ஒருமுறை மகணரிசியிடம் ஒரு ஐரோப்பியன் கேட்டான் .  எனக்கு நிறைய எண்ணங்கள் உண்டு ஆனால் கடவுளை என்னால் காண முடியவில்லை, கடவுளை நான் காண்வேண்டும்(" I was full of thoughts and ideas, but I could not see the God I want to see him" ) என்றானாம் அதற்கு மகணரிசி அழகாக சொன்னார். Look between thoughts, there is God" இரு எண்ணங்களுக்கிடையே இருக்கும் இடைவெளியில் க‌டவுள் இருக்கின்றார் என்று, மாணிக்கவாசகர், திருவாசகத்தில் அழகாக சொன்னார் "வேகம் தடுத்தாண்ட வேந்தன் அடிவாழ்க!" தொடராக அலைபோல நீண்டு கொண்டே போகும் மனித எண்ணங்களை தடுத்து நிறுத்தி, அதில் அமைதி கண்டு, இரசித்து வாழ்க என்பதே அதன் அடிப்பொருள். எண்ணங்களால் நிரம்பியதே மனது, எல்லா எண்ணங்களையும் தொலைத்துவிடு வருவது வரட்டும் என்று வாழ்வை இரசிக்க, கவிஞர் அழகாக இந்த பாடலில் சொல்கின்றார்.

                                                 நிகழ்காலத்தில் நிலைப்பது, அதாவது இந்த கனமே சாசுவதம்! இந்த கனம் தான் உண்மையானது அதை முடிந்தால் இரசி! கண்ணதாசன் சொன்னான், " போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல இரசிகன், (அவன் தான் பேசாலைதாஸ்) அவன் இவனே! இவன் அவனே!  இப்பொது நீங்கள் வாழுகின்ற வாழ்க்கைதான் உண்மையானது அதனை இரசியுங்கள்! தாவிப்பாயும் மனம் என்ற குரங்கை அடைக்கி வையுங்கள்! பாரதி சொன்னான். "“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்! ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்  அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய், நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்  விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்" ஆமாம் மனித மனது அப்படித்தான்! ஒன்றியே பற்றிக்கொள்ளூம், அதை விடாது ( காணி, கட்டிடம் கட்டுவது) அன்பர்களே! கவிஞர் கண்ணதாசன், நிகழ்காலத்தை இரசியுங்கள், நிலைத்து இருங்கள் என்ற மாபெரும் தத்துவத்தை, பெட்டிக்கடைக்காரன் தொட்டு, மீன் விற்கும் பெண், கூட புரிந்து கொள்ளும் அளவுக்கு, எளிமையாக பாடினான், ஆண்டவன் படைத்தான், எங்கிட்ட கொடுத்தான் என்று. இதோ பாடலை கேளுங்கள், நான் சொல்லவந்தது உங்களுக்கு புரியும்!

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 31 என் வேதனையில், உன் கண் இரண்டும் என்னோடு அழுவதேன்?

என் வேதனையில், உன் கண் இரண்டும் என்னோடு அழுவதேன்?  பேசாலைதாஸ்
                                                       பாடல் இடம் பெற்ற படம் யார் நீ? ஜெய்சங்கர், ஜெயலலிதா இணைந்து நடித்த‌ படம்: யார் நீ 1968 இல் வெளிவந்தது – பாடியவர்: சுசீலா – இசை: வேதா. எனக்கு சோகம் வரும்போதெல்லாம், என் உள்ளத்தையும் மீறி, என் உதடுகள் முணுமுணுக்கும் பாடல், இது எப்படிப்பட்ட பாடல் . எப்படிப்பட்ட இசை என்று வியக்க வைக்கும் பாடல்.மெல்லிசைமேதை மதன் மோகன் ஹிந்தியில் இசையமைத்த பாடலின் தமிழ் வடிவம்.துயரத்தை தேக்கி வைத்து கொட்டி தீர்க்கும் பாடல்.வார்த்ததையில் விவரிக்க முடியாத துயரம் தோய்ந்த பாடல். சாருகேசி ராகத்தில் துயரமாக நெஞ்சை பிழியவைக்கும் பாடல்! துன்ப மழையில் நின்ற போது, கண்களில் உன்னை நான் கண்டேன்! காலதேவன் வாசல் வழியே போகின்றேன், இன்று நான் யாரோ? போகும் வழியில், அன்பு முகத்தை பார்க்கின்றேன், நாளை நான் யாரோ? பிரிவு சோகம் மனதில் எழுகின்ற போடெல்லாம் இப்பாடலை கேட்டுப்பாரு ங்கள், உங்கள் மனதுக்கு ஒத்தடமாக இந்த பாடல் அமையும், நான் இரசித்ததை, சுவைத்ததை சொல்கின்றென் அவ்வளவு தான்! இதோ பாடலை கேளுங்கள்.
https://www.youtube.com/watch?v=yyLNSzPWlnk

பாட்டும் பதமும் 30 அம்மம்மா கேளடி தோழி,


 அம்மம்மா கேளடி தோழி,  சொன்னானே ஆயிரம் சேதி - பேசாலைதாஸ்

                                                                    பாடல் இடம் பெற்ற படம், கறுப்பு பணம், இது கண்ணதாசனின் சொந்த படம். பாடியவர் : எல்.. ஆர் .ஈஸ்வரி இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி செவ்வியல் இசையில் வெளிப்படையாக தெரியும் ராகங்களை மறைத்து ,அவற்றில் எழும் ஜீவன்களை மெல்லி சையாக்கி ராகங்களை புதிய கோணங்களில் தந்து மெருகூட்டியவ்ர்கள் மெல்லிசை மன்னர்கள்.

                                                                      காபரே நடன பின்னணியில் இரு பெண் பாத்திரங்கள் பாடும் பாடலாக அமைக்கப்பட்ட அதி உன்னதமாக விர கதாபத்தை வெளியிடும் பாடல்.சாருகேசி ராகத்தில் இப்படி ஒரு பாடலா என்று வியக்க வைக்கும் பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல்களில் மிகவும் சிறப்பான பாடல்.கவிஞர் கண்ணதாசன் தயாரித்த படத்தில் இடம் பெற்றதால் , மெல்லிசை மன்னர்களிடம் எல்.ஆர்.ஈஸ்வரி தான் பாட வேண்டும் என்று கூறி பாட வைத்த பாடல். பி.சுசீலா தான் பாட வேண்டும் என்பது இசையமைப்பாளர்களின் கருத்து.தயாரிப்பாளர் என்ற முறையில் சொல்கிறேன் ” எல்.ஆர்.ஈஸ்வரி பாடவில்லை என்றால் வேறு இசையமைப்பாளர்களை நியமித்து விடுவேன் ” என்று  கண்ண தாசன் திடமாக  கூறியதால் எல்.ஆர்.ஈஸ்வரி பாட நேர்ந்தது.பி.சுசீலா ஒருமுறை கூறியது போல ” பழைய பாடல்களை யார் பாடினாலும் நன்றாக இருக்கும் ” என்பதை நிரூபிக்கும் வகையில் எல்.ஆர்.ஈஸ்வரி மிக மிக அருமையாகப் பாடிய பாடல் இது.
https://www.youtube.com/watch?v=6W0Ojt4j148

வியாழன், 8 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 29 கண்ணா கறுமை நிறை கண்ணா!


கண்ணா கறுமை நிறை கண்ணா! பேசாலைதாஸ்
                                                       இப்பாடல் இடம் பெற்ற படம், நானும் ஒரு பெண், ஏ.சி.திருலோகச்சந்தரின் கைவண்ணத்தில் உருவான படம், கவிஞரின் திறமையை வெளிக்கொண்டுவரும் பாடல்களில், இதுவும் ஒன்று. கறுமை நிறத்தால், கணவனால் ஒதுக்கப்படும் ஒரு பெண்ணின் குமுறலை, கடவுளிடம் முறையிடும் ஒரு பெண்ணின் உள்ளக்குமு றல்லாக பாடல் எழுதப்பட்டுள்ளது. கடவுளே நீ கறுப்பாய் இருக்கின்றாய் ஆனாலும் உண்ணை வெறுப்பாரில்லை, ஆனால் என்னைக்கண்டாலே பொறுப்பரில்லை என்று சாதாரண வார்த்தையில் சொல்வதை கவிஞர் வார்த்தை ஜாலமில்லால் கவியாக்கியிருக்கின்றார். மனதைப்பா ர்க்காமல் வெறும் அழகைபார்க்கும் மனிதர்கள், நிறம் பார்த்து, சாதிபார்த்து, அந்தஸ்த்து பார்க்கும் மனிதரிம் ஏன் பெண்ணை படை த்தாய் என்று கேள்வி கேட்பதாகவும், நீயும் கறுப்பு, நானும் கறுப்பு, ஏன் என்னை சேர்க்கவில்லை என்று ஏங்கும் ஒரு பெண்ணின் இதய ஏக்கமாகவும், பாடல் வரிகள் மிக அழகாக விழுந்துள்ளன.
                                                                                             இந்தப்பாடல் உருவான விதம் சுவாரஸ்யமிக்கது, இயக்குணர் ஏ.சி.திருலோகசந்தர் எப்போதும், கவி ஞரின் வார்த்தைகள், மக்களை சென்றடையவேண்டும் என்பத ற்காக, இசையின் ஒலி அளவை குறைத்து, வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். கவிஞர் இப்பாடலை எழுதி கொடுத்த பின், இசை அமை க்கும் போது, இயக்குணருக்கு, சரணத்தில் இருந்த வரிகள், பல்லவியை விட, வலிமையாக இருப்பதால், உடனடியாக சரணத்தை பல்லவியாக‌ மாற்றும்படி, இசைக்கூடத்தில் இருந்தபடியே, உதவி இயக்குணர்  எஸ்.பி. முத்துராமன் மூலமாக, கவிஞருக்கு கவிதை திரும்ப பறந்தது, கவிஞரை எங்கேயெல்லாம் தேடியும், அவரை கண்டுபிடி க்கமுடியவில்லை, திடி ரென அவர் தனது காரில், போவதை கண்டு,  அவரை மறித்து, விடயத்தை சொன்னவுடன் காரில் இருந்தபடியே , கவிஞர் பாடலை திரும்ப‌ எழுதி, இசை அமைக்கப்பட்டதே நீங்கள் இப்போது கேட்க இருக்கும் பாடல்!
https://www.youtube.com/watch?v=xO1RW80P8YU

பாட்டும் பதமும் 28 சம்சாரம் என்பது வீணை


சம்சாரம் என்பது வீணை  பேசாலைதாஸ்
மயங்குறாள் ஒரு மாது என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது! விஜய பாஸ்கர் இசை அமைப்பில் உருவாகி பாலசுப்ரமணியத்தினால் பாடப்பட்ட பாடல், கவிஞர் கண்ணதாசனின் சத்தான வரிகள் அடங்கிய பாடல் இது! இந்த பாடல் பற்றி, அந்த படத்தின் இயக்குணர் எஸ்.பி. முத்துராமன் கூறிய போது, மயங்குறாள் ஒரு மாது திரைப்படம் வெளிவந்த போது, அந்த படம் கடும் விமர்சணத்துக்கு உள்ளாக்கப்ப ட்டது. கதநாயகி இந்த படத்தில் இறக்கவேண்டும் அல்லது திரைப்பட த்தை, வாங்கி விநோயோகிக்கமாட்டோம் என்று, விநோகிஸ்தர்கள் ஒரேயடியாக மறுத்துவிட்டனர். 

                                           ஒரு கல்லூரிப்பெண், பருவக்கோளாறு, காரணமாக, தவறிழைக்கின்றாள், அந்த தவற்றை மறைத்து, அந்த பெண்ணை காப்பாற்றி, நல்லதொரு மணவாழ்க்கையில் வாழவைப்பதே கதையின் மையப்பொருள். தவறிழைத்த பெண் தண்டிக்கப்பட வேண்டும், என்ற பிற்போக்குத்தனமான எண்ணத்திற்கு எதிராக, சவாலக எடுக்கப்பட்ட படம் என்று இயக்குணர் பெருமையாக சொன்ன திரைப்படம். பாடல் காட்சியில் , கணவன், ஏமாற்றிய காதலன், ஏமாற்றப்பட்டு, உடல் உறவில் ஈடுபட்டதை, படமெடுத்து, கதாநாயகியை பயமுறுத்தும் வில்லன் இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் தோன்ற, முக்கோன பரிணாமத்தில் கதாபாத்திரங்களை படமாக்கிய ஒருபாடல் காட்சி இது பாடலை நீங்களும் கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=ls2GRbv_1lA

புதன், 7 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 27 ஒரு சின்னப்பறவை

பாட்டும் பதமும் 27
" ஒரு சின்னப்பறவை அன்னையை தேடி வானில் பறக்கின்றது"  பேசாலைதாஸ்
                                                  இதுவரையும் கண்ணதாசனின் பாடல்வரிகளை விஸ்வநாதனின் இசையில், இரசித்தோமல்லவா, இனி சற்று மாறுதலு க்காக, புலமைப்பித்தனின் பாடலை, இன்னுமொரு இசை அமைப்பா ளின் இசையோடு எப்படி இருக்கின்றது என்று, பார்ப்போம். புலமைப்பித்தனை, கண்ணதாஸனுக்கு நிகராக கொண்டுவர, முடியாது இருந்தாலும் புலமைபித்தன் பாடலும் சுமாரானது என்பது எனது, எண்ணம்! இசைஅமைப்பாளர் எம், எஸ், சீனிவாசனின் இசையில் அமைந்த இப்பாடல், ஒரு தாயின் சிறப்பை அழகாக எடுத்துக்காட்டுகி ன்றது, தாய்ப்ப்பாசத்திற்கு கட்டுப்படாத உள்ளம் ஒன்று இருக்க முடியுமோ? தாயின் மடியே சொர்க்கம்!

 சொர்க்கம் எங்கே இருக்கின்றது, விண்ணிலா, மண்ணிலா? சொர்க்கம் என்றாலே நம்மை அறியாமல், கண்கள் மேலே, வானத்தை நோக்கும், விண்ணிலே சொர்க்கம் உண்டு, அங்குதான் இறைவன் உறைகின்றான், தேவர்களும், தூதர்களும் உலாவி த்திரின்றனர், புண்ணியம் செய்து மரித்தவர்கள், அதைக் கண்டு மெய்ம றக்கின்றனர் என்று அனேகமாக எல்லா மதங்களும் இதனையே விபரி க்கின்றன. இது உண்மையா என்பதனை நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.

                                                                                  விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல, அதுதான் அன்னையின் மலர் பாதம் என்றான் புலமைப்பித்தான். அவன் சொல்லவருவது இதுதான், சொர்க்கம் மண்ணில் தான் இருக்கி ன்றது, நாம் வாழும் வாழ்க்கையில் இருக்கின்றது. அது தாயவள் அன்பில் தேனாகின்றது, அன்னை என்பது வெறும் மானுடம் அல்ல, அதுதான் உலகத்தில் தெய்வம் என்று, தெய்வத்தை முன்னிறுத்துகி ன்றது, வேதங்களாக அன்னையவள் கூறிய உபதேசங்கள் இருக்கின்றன இவை யாவும் ஒருங்கே இருந்துவிட்டால்,,,, அது சொர்க்கம் தானே! நீங்களே சொல்லுங்கள்.இனி பாடலை கேளுங்கள்!

https://www.youtube.com/watch?v=f9o8GKfHPM0

திங்கள், 5 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 26 யார் அந்த நிலவு?

பாட்டும் பதமும் 26

"யார் அந்த நிலவு? ஏன் இந்த கனவு?" பேசாலைதாஸ்
எனக்கு பிடித்தமான ஓர் பாடல், உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கின்றேன், சிறந்த பாடல், சிறந்த இசை, சிறந்த குரல், சிறந்த கதை, சிற ந்த நடிப்பு இவை அனைத்தும் ஒருங்கே அமைய ப்பட்ட பாடல் இது! நிலவென்றாலே எனக்கு கொள்ளை ஆசை, அதுவும் நோர்வே நாட்டில், வெண்பணி மலைமுகட்டில் வழிய, அதன் வழியே, என் வெண் முழுமதி, மெல்ல தழுவி, எழும்பும் அற்புத‌ காட்சி! என்னை நானே மற ந்து, வெண்பனி மலை முகட்டின் மீது, வெறுப்பு கொள்வேன், என் நிலாமதியை எப்படி சொந்தம் கொள்வாய் எனக்கேட்பேன்!. என் மனைவி பெயர் கிறிஸ்மதி, மூத்த மகள் பெயர், வான்மதி, ஒரேஒரு அருமைமகன், மதிவாணன், என் செல்ல கடைக்குட்டி கலைமதி இப்படி என் குடும்பமே மதி கொண்ட குடும்பம்! எனக்கொரு இரகசிய காதலி இருக்கின்றாள், அவள் தான் நிலா, என் கற்பனைக்கும், கவிதைகளுக்கும், உரமூட்டுபவள், காதலில் வளர்ந்து  மாதத்தில் ஒரு நாள்! உடல் உறவு (முழுமதி) கொள்ளும், பின்னர் ஊடலில் தேய்ந்து அமவாசையில் தவிக்க விட்டு, மூன்றாம் பிறையில் கண் திறப்பள் அவள்! . நான் எழுதும் கதை,  என் உள்ளத்தில் எழும்  கவிதைகளை நிலாமதி வலைப்பூங்காவில் தோரணமாக கட்டி தொங்கவிட்டிருக்கின்றேன்.

                                                                யார் அந்த நிலவு என்ற பாடலில், காதலி இல்லாமல் தவிக்கும் ஒருவன், இன்னொருவன் மனைவிக்கு, கணவனாக நடிக்கும் ஒரு இக்கட்டான நிலை, இதை சித்தரிக்கும் காட்சியும் பாடல் பின் புலமும்,,,விஸ்வநாதன் மும்முரமாக இசையை தேடிக்கொண்டிருக்கின்றார், சாந்தி என்ற பிம்சிங்கின் படத்துக்காக,  "ஆங்கில பொப்பாடல், மாதிரி, அதுதான், கிளிவ் ரிச்சார்டின் பாட்டு, We don't talk more  மாதிரி புதுமையா இசையில், அமைக்கக் கூடாதா" என சிவாஜி சேர், கிண்டல் அடிக்க," அண்னே நான் அமைச்சுட்ட, நீங்க அதுமாதிரி நடிப்பீங்களா?" என விஸ்வநாதன் கேட்க, விஸ்வநாதனை, ஏற இறங்க, பார்த்துவிட்டு, சிவாஜி சென்றுவிட்டார், அடுத்த நாள், இசை ரெடி,  இசையை, கவிஞருக்கு காட்ட, பாடலும் ரெடி, அதை செளந்தராஜனுக்கு போட்டு காட்டினார் விஸ்வநாதன், " என்ன இது! உச்ச ஸ்தாயில் ஓங்கிப்பாடும், என்னைப்போய், யார் இந்த நிலவு என்று, தாழ்ந்த ஸ்தாயில் பாடச் சொல்கின்றீர்களே, நான் மாட்டேன்" என செளந்தர‌ராஜன் சொல்ல, " நான் சொல்லுற மாதிரி நீ பாடினா இதுதான் நீ பாடிய பாட்டில் சிறப்பாக அமையும்  என அவர் சொல்ல, அவரும் பாடிவிட்டார், இப்போது சிவாஜி சாருக்கு போட்டு காட்டியபோது, பாட்டை கேட்டுவிட்டு, எடுத்த எடுப்பிலே நடிக்கும், சிவாஜி கொஞ்சம் யோசித்தாரம், எனக்கு ஒரு நாள்  அவகாசம் தாருங்கள் என்று சொல்ல, பீம்சிங் தலையை சொரிந்துவிட்டு, அடுத்த நாள், போய்க்கேட்டார், இன்னுமொரு நாள் அவகாசம் கேட்டு, நடித்தபாடல் காட்சி தான் இது! அவரின் கையில் இருந்த சிகரட் கூட இதில், நடித்திருக்கின்றது, நான் அவ்வப்போது என் மனைவி, என் காதலி, அதுதான் என் ஆசை நிலாவோடு சஞ்சலப்படும் போதெல்லாம் பாடும் பாட்டு! நீங்களும் கேளுங்கள்! Cliff  Richard இன் We don't talk more என்ற பாடலையும் இணைத்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw



பாட்டும் பதமும் 25 அண்ணன் காட்டியவழியம்மா,,,,,,

பாட்டும் பதமும் 25
"அண்ணன் காட்டியவழியம்மா,,,,,, தெரிந்தே கெடுப்பது பகையாகும்! தெரியாமல் கெடுப்பது உறவாகும்" பேசாலைதாஸ்
இந்தப்பாடல் படித்தால் மட்டும் போதுமா என்ற படத்தில் வருகின்றது. இது ஒரு அரசியல் பாடல் ஆனால் திரையின் பாத்திரத்திற்கும், கதைக்கும் அப்ப டியே பொருந்துகின்றது, சிவாஜியின் அற்புத நடிப்பு, கண்களை குளமா க்கும். கவிஞர் கண்ணதாசன், கருத்து பேதத்தால், அண்ணாதுறையை விட்டு பிரிந்து சென்ற காலம் அது! ஒரு உறைக்குள் இரு வாள் இருக்க முடியாது, ஒரு கட்சிக்குள் இரு கவிஞர்கள், இரு எழத்தாளர்கள் இருக்கக்கூடாது என்ற, கருணாநிதியின் இராஜதந்திரத்தால், அண்ணாவும் கண்ணதாசனும் பிரிய நேரிட்டது, அண்ணாதுரை தன்னை வஞ்சித்துவிட்டதாக அவர் எழுதிய கவிதையே திரக்கதைக்கும் அப்படியே பொருந்திவிட்டது. இவர் எழுதிய கவிதையை, அண்ணாதுறையிடம், கண்ணதாசன் உங்களைப்பற்றி பாட்டு எழுதி இருகின்றார், என கருணாநிதி சொல்ல, அதை வாசித்திவிட்டு, அண்ணாதுறை சொன்னாராம், " போகாட்டும் விட்டுவிடு, தூய தமிழில் திட்டி இருக்கின்றான் தம்பி" என்று பெருமையோடு சொன்னாராம், அண்ணதுறை.
                                                                                            அண்ணன் காட்டிய வழியம்மா, வலியம்மா என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம், இந்தபாடலில் வரும் அத்தனை வசனத்தையும் கவன‌மாக அவதானித்தால், ஒவ்வொரு வசனமும் அர்த்தமுள்ளது. கண்ணை இமை கெடுப்பது, அன்பின் பழி, கெடுக்கும் கை, தொடாமல் சுடும் சிரிப்பு, தெரியாமல் கெடுக்கும் உறவு என்று தொடராக செல்லும், வசன அமைப்பு, பலே! 

                                                          அதிக விளக்கம் நான்சொல்லதேவையில்லை.
இதில் ஒரு வசனம் வரும், பொருத்தருள்வாய் என கும்பிட்டேன், கும்பிட்ட கையை முறித்துவிட்டான், இந்த வசனத்தில், கவிஞர் திருக்குறளை ஞாபக படுத்துகின்றார். கூடா நட்பு என்ற பகுதியில் 828 வது குறளாக 

"தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; ஒன்னார் அழுத கண்ணீரும், அனைத்து." 
அதாவது கும்பிட்ட கைக்குள், துப்பாக்கி இருப்பது போல, வஞ்சிப்பார் அழுத கண்னீரும் இருக்கும், என்பதே அது. கோட்சே காந்தியை கும்பிட்டு, சுட்டதை இங்கே காட்சியாக உங்கள் மனத்திரையில் கொண்டு வருகின்றேன். இனி பாட்டைக்கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=877VoyR6JkM

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 24 நீரோடும் வைகயிலே

பாட்டும் பதமும் 24
" நீரோடும் வைகயிலே நின்றாடும் மீனே! நெய்யூறும் கானகத்தில் கைகாட்டும் மானே"! பேசாலைதாஸ்
வைகையிலே இப்போது நீரும் இல்லை, மீனும் இல்லை, அதுபோல நெய்யூறும் காடுகள் இப்போது இல்லை, வெட்டி அழித்து, இயற்கையே படுகொலை செய்யப்படுகின்றது. இது வேறு ஒரு சமாச்சாரம்! அதை விட்டுவிட்டு கண்ணதாஸனின் பாட்டுக்கு செல்வோம். 

                                                            கற்பனைப்புலத்தை சற்றே கவனியுங்கள், பாய்ந்து வரும் இலகு சொற்களை, இரசியுங்கள்! நீரோடும் வைகை, நெய்யூறும் காடு, தாலாட்டும் வானம், அமுதூட்டும் நிலா, மங்களமான மங்கை, மழலையின் தந்தை, காதலெனும் கவிதை, கருனைக்கான பரிசு, தெம்மாங்குத்தமிழ், கலைமகள் உள்ளம்,  பார்த்தீர்களா, மங்களமான சொற்கள், கருத்தாழம் உள்ள பதங்கள், நான் மேலே சொன்ன சொற்களை, வரிசைக்கிரகமாக நீங்களே மன‌துக்குள் சொல்லிப்பாரு ங்கள் அதுவே ஒரு கவிதையாகிவிடும். நல்ல கவிஞன் மனது இப்படி த்தான், மிட்டாய் கடையை கண்டால், துள்ளிக்குதிக்கும் சிறு பிள்ளை போன்றது, அழகான காட்சி, வனப்பான மங்கை, இயற்கை எழில் இவைகளைக் கண்ட மாத்திரத்தில், கவிதையில் லசித்து இரசிக்கும்! இந்த பாடலில், கவிஞன், கணமான கருத்துக்கள், இலக்கிய ஒப்புவாமா னங்கள் எதனையும், கையாளவில்லை. சொற்களை எடுத்து, அழகாக கோர்த்து, கவிதை மாலையாக நமக்குதருகின்றார் கவிஞர். தாலாட்டு தமிழிலே எளிமையை புகுத்தியுள்ளார், நான் இரசித்ததை நீங்களும் இரசியுங்கள்! இரசனை அற்ற வாழ்க்கை, சலிக்கும், புளிக்கும் கஞ்சியாகிவிடும்!

                                                                                    பாடலை இரசிக்கும் முன்னர், பாடல் பிறந்த கதைச்சம்பவம், மிக சுவாரஸ்யமானது,  நடிகர்  ஒய், ஜீ, மகேந்திரன் எங்கேயோ சொன்னதாக ஞாபகம். கண்ணதாஸன் தனக்கு ஓய்வு கிடைக்கும் போது, விஸ்வநாதன் வீட்டுக்கு அரட்டை அடிப்பத ற்காக செல்வாராம், அது ஒரு ஞாயிறு வாரம், கண்ணதாசன், விஸ்வநா தன் வீட்டுக்கு சென்றிருக்கின்றார், விசு எங்கே என அம்மாவிடம் கேட்க, அவளோ, "தம்பி, சாராதா ஸ்டூடியோவில பாட்டு ரெக்கோட் பண்ணு ராப்போல", என்று சொல்ல, கண்ணதாசன் ஆச்சரியத்தில், நான் இல்லா மல் பாட்டா? உடனே காரில்  சாராதா ஸ்டூடியோ சென்றிருக்கின்றார். தட தட என உள்ளே சென்ற கவிஞர், "விசு என்ன நான் இல்லாமல், நீ எப்படி பாட்டு போடுவாய்" என கேட்டு சண்டை போட்டாராம், விசுவோ "இல்லை யப்பா, எல்லாப்பாட்டும் நீதானே எழுதி இருக்கே,  இந்த இடத்தில் மட்டும், தனியே விசில் சத்தமும், வெறும் ஹம்மிங் போட்டு, புதுமையாக செய்ய இருக்கின்றேன்" என விசு சொல்ல, இல்லை இல்லை என் வரிகள் அத ற்குள் இருக்கவேண்டும் என செல்லமாக அடம் பிடிக்க, டைரக்டரும், விஸ்வநாதனும் ஒத்துக்கொள்ளவில்லை, கவிஞருக்கு அந்த மியுஸி க்கிலே கவிதை, எழுத வேண்டும் என்ற வெறி தலைக்கேற, நேராக சிவாஜியிடம் சென்று, "ந‌ல்ல இசையை, விஸ்வநாதன் வெறும் பாட்டு இல்லாமல் எடுக்கப்போகின்ரானாம்" என அழுதழு சொல்ல, மனம் பொறுக்காத சிவாஜி, விஸ்வநாதனிடம் இந்த பாட்டிலும் கவிஞரின் வரிகளை போடுங்கள் என கேட்க, என்ன செய்வதென்று புரியாத விஸ்வ நாதன் சரி என்றார்.சொன்னதுதான் தாமதம், ஒரு சில நிமிடத்தில் எழுதிய அற்புதமான பாடல் தான், இன்றும் என்றும் சாகாவரம் பெற்ற பாடல், இப்போது கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம், நீங்களும் கேளுங்கள்!
https://www.youtube.com/watch?v=nlfGpLWJqcU





சனி, 3 பிப்ரவரி, 2018

பாட்டும் பதமும் 23. வசந்தகால கோலங்கள்,


"வசந்தகால கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்"! பேசாலைதாஸ்
  தியாகம் என்ற திரைப்படத்தில் இந்த பாடல் இடம் பெற்றது. தன் காதலன் மீது காதலி, சந்தேகம் கொள்கின்றாள். ஒரு காலத்தில், ஊரே ஒரு மாதிரி கணக்கிட்ட காதலன், அவளுக்கு மட்டும் தெய்வமாக தெரிந்தான், பின்னர் என்னவோ அவனிடம் சந்தேகம் கொண்டு காதலை முறிக்க நினைக்கின்றாள், இதுதான் பாடலின் திரைக்காட்சி, அதற்கு நம் கவிஞன், கதாபத்திரங்களை சித்திரிப்பதை பாருங்கள்!  வசந்த காலம், வானில் விழுந்த கோடுகள், கலைந்திடும் கனவுகள், அலையில் ஆடும் காகிதம், அதிலும் ஓர் காவியம் அப்பாடா, எளிமையான சொற் பிரயோகம், அது மட்டுமா?  அலையில் ஆடும் காகிதம் அதற்கும் நிலையில்லா மனதர்களும் என்ன உறவுகள்? என்று தானே கேள்வியை எழுப்பிவிட்டு, தானே அதற்கு சமாதானமும் சொல்கின்றான் இப்படி, "உள்ளம் என்றும் ஒன்று, அதில் இரண்டும் உண்டல்லவா! "   காதலி தன் காதலனுடன் சந்தேகப்பட்டு, உறவே வேண்டாம் என்று உதறுகின்ற ஒரு கட்டத்தை, நல்ல காலம் கல்யாணம் நின்று விட்டது என்பதை நயத்தோடு, கவிஞன் இப்படி பாடினான். " தேரில் ஏறும் முன்னமே! தேவன், உள்ளம் தெரிந்தது, நல்லவேளை திருவுளம், நடக்கவில்லை திருமணம்" என்று சொல்லி விட்டு, முறிந்த காதலுக்கு, நன்றி தேவா! என்று பாடலை முடிக்கின்றான். இந்த பாடல் என்றுமே என் மனதில் நீங்கா, இடம் பிடித்தது, அதற்கு என் தனிப்பட்ட காரணமும் உண்டு, உங்களோடு அதை பகிர்வதில் ஆசை ப்படுகின்றேன், நான் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த போது, எனது உயிர் நண்பி, மங்கள ராணி, அவளுக்கு பிறவியிலே கண்தெரியாது, அவளின்காதலன் சுப்பரமணியனுக்கும் கண் பார்வை கிடையாது, மக்களராணிக்கு என் ஓய்வு நேரங்களில், அவளுக்கு, அவளது பாட புத்தகங்களை, வாசித்து காட்டுவேன், நான் அப்பொழுது நண்பன் என்ற பருவமலரின் ஆசிரியாராக  இருந்தேன், அதற்கு மங்களராணி, அழகான ஒரு கதை, அதுவும் தான் படிக்கும், மேசையை காதலனாக உருவகித்து எழுதிய அந்த கதை அருமையானது ,  பல்கலைக்கழ கம் விட்டு, பிரியும் காலம் வந்தது, நான் என் பேசாலைக்கு போக்வே ண்டும், பிரிய மனமில்லாது, பார்வையற்ற கண்களோடு, எனக்காக அவள் பாடிய பாடல் இது! நல்ல குரல் வளம் அவளுக்கு, " நன்றி நன்றி தேவா! உன்னை மறக்கமுடியுமா?" என்ற வரிக்காக, அவள் எனக்காக பாடிய பாடலை, நீங்களும் ஒரு முறை கேளுங்களேன்!   அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...