சனி, 28 டிசம்பர், 2019

105 பாட்டும் பதமும் "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது."

105 பாட்டும் பதமும்  
"பாலிருக்கும் பழமிருக்கும் பசியி ருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது." பேசாலைதாஸ்


                                             நாம் எல்லோரும் விரும்பிக்   கேட்க்கும் பாடல் இது, ஆனால் கவிஞர் அவர்க ளுக்கு இந்தப்பாடலில் கூட பிரச்சனை எழுந்தது  சென்ஸார் சீறியது. "அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?" அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?


"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது வேதம் செய்த குருவை கூட விடுவதி ல்லையே." 


இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள். இப் போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் : "என் னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமி த்திரரையே காதல் விடவில்லையே ? அதைத் தானே நான் எழுதி இருக்கிறேன்? என்ன ஆனா லும் சரி . எவர் சொன்னாலும் சரி . இதை நான் மாற்ற மாட் டேன்."


                                    இப்போது படக் குழுவினர் கெஞ்   சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவி ஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?" வேறு வழியின்றி வேத வரிகள் மாறின :


"வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது மேகம் செய்த உருவம் போல மறைவதி ல்லையே."


                                                     படமும் வெற்றிகண்டது பாடல்களும் ஹிட் ஆனது. இப்படி அனுபவ ங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒரு முறை இப்படி எழுதி இருந்தார் அவர் : "நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய் துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனேன்.” -கண்ணதாசன்

                                                                    அடுத்த பாடலில் சந்திக்கும் வரை   அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் 


104பாட்டும் பதமும் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிடான்

104 பாட்டும் பதமும்  மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிடான்      பேசாலைதாஸ் 

                                         கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சக்தி படைத்தவை அவ ரின் பாடல் வரிகளை கண்ணு மிரண்டவர்கள் பலர்,  அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன். கோப த்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரி கள் ! "இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடி யாது." "ஏன் ?" "கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !" "எப்படி ?" "அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லா விட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடி யாது." சொன்னார்கள் கண்ணதாசனிடம்.

                                                           சென்சார் கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண் டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத் தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத் தான்." கண்ணதாசன் சொன்னார்: "நான் சரி யாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்." சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல." கண்ணதாசன் சிரித்தார் :

                                                     "இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ? கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?" சென்ஸார் திகைத்தது. ஆனாலும் ஈகோ தடுத்தது. 

                                                "இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்." கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்: "எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்" படத்தில் தான் சிவாஜி இப்படிப் பாடுவார். ஆனால் ஒரிஜி னல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்' என்ற வார்த்தைதான் இருக்கிறது. கண்ண தாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார்.

                                                       அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் 

புதன், 18 செப்டம்பர், 2019

103 பாட்டும் பதமும் என் மெய் தீண்டா

0028   என் மெய் தீண்டா                      

தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் இலக்கியம் தனது ஆளுமையை பதித்துள்ளது என்பதற்கு   என் சுவாசக்காற்றே என்ற படத்தில் வரும் மெய்தீண்டா என்ற பாடல் தக்கதோர் உதாரணமா கும், கவிஞர் வைரமுத்து சங்க்ககால இலக்கிய பாடலை அப்படியே பாடலில் புகுத்தியுள்ளதை இங்க்கு வாம் சற்று அவதானிப்போம்                  

                                        சங்ககால தமிழ் உலகத்தில் ஆண்புலவர்கள் இருந்தது போலவே பெண்புல வர்களும் இருந்துள்ளார்கள், அவர்களிள் வெள்ளி வீதியார் என்ற பெண் புலவரும் உண்டு. ஒளவையார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தை, பாரி மகளிர் போன்ற இருபத்தியைந்து பெண்பாற் புலவ ர்கள் வாழ்ந்துள்ளார்கள்! 

                                       
இவர்களில் வெள்ளி வீதியார் என்ற பெண்புலவர், ஒரு சாதாரண ஆண் மகனை காதலித்தாள், அவன் மீது காதல்வசப் பட்டாள், ஆனால் அவ்த ஆடவனோ வெள்ளி வீதியாரின் புலமை கண்டு, தாழ்வெண்ணம் கொண்டு, அவளை விட்டு விலகிச்செல்கின் றான். காதலின் பிரிவாற்றாமையால் துவண்ட காதல் தலைவி தன் தோழிக்கு சொல்லும் கவிதை இது! 

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாதுநல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா அங்குஎனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குல், என் மாமைக் கவினே- வெள்ளி வீதியார், குறுந்தொகை-27, பாலைத் திணை

                               இந்த செய்யுளின் எளிமையான
விளக்கம் இதுதான்! நல்ல பசும் பாலை ஒன்றில் கன்று குடிக்கவேண்டும், இல்லையேல் கலயத் தில் கறக்கணும், இரண்டும் இல்லாமல் பசும் பால் நிலத்தில் வீணே கறக்கின்றதே! அதுபோல எனக்கும் உதவாமல், என் அவருக்கும் உதவா மல், என் மாந்தளிர் மேனியும், வரிவிழுந்த என் இடைத்தசையும், வீணே மண்ணில் அழிந்து பசலையாவதோ! 

                          அதாவது ஏன் காதலன் தீண்டாமல், மண் தீண்ட போகிறதே! என்று வெள்ளி வீதியார் காமம் கொப்பளிக்க பாடுகின்றார். பொதுவாக ஆண் புலவர்கள் தான் காமக் கொப்பளிக்க கவிதை பாடுவார்கள் ஆனால் இவ்த வெள்ளி வீதியாரோ துணிவாக பெண்களுக்கே உரித் தான காம் வேட்கையை தைரியமாக பாடுகின் றார். பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனை கள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு! 

                     ஆனால் பெண்கள்? வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!அதிலும் உறுப்ப் பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!சங்க்க கால தமிழன் பெண்களின் சுதந்திரத்தை மதித்தான் ஆனால் இன்று வாழும் தமிழனோ பெண்களின் உரிமைகளை உணர்வுகளை குழி டோண்டி புதைக்கின்றான். 

                              இவ்த பாடலைத்தான் வரமுத்து அவர்கள் பிரதி பண்ணி என் மெய் தீண்டா என்று எழுதியுள்ளார். அதைச் சித்ரா, மிக்க விரகத்தோடு, மிக இனிமையாகப் பாடுகிறார்! ஏக்கம் தொனிக்கும் எழில் தமிழ்! ரஹ்மானின் இசையில், பல இசைக் கருவிகள் பின்னணியில் வண்ண ஜாலம் காட்டுகின்றன! இதோ பாடலை நீங்களும் கேளுங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்

திங்கள், 8 ஜூலை, 2019

பாட்டும் பதமும் 102 "ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்" பேசாலைதாஸ்


"ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்" பேசாலைதாஸ்
                                                                        என்னடா திடீரென்று சிவ பஜனையில் இறங்கிவிட்டான் பேசாலைதாஸ் என நினைக்கின்றீர்களா? என் மனது க்குள் ரீங்கார விஸ்வரூபம் எடுத்த பாடல் இது! மந்திர உச்சாடனம் போல, ஏதோ மோன நிலைக்கு இட்டுச்செல்வது போல இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஏற்படுவதுண்டு. இந்த பாடல் இடம் பெற்ற படம் " நான் கடவுள்" என்ற படமும் என்னை பிரமிக்கவைத்தது கமலின் ஹேராம் எதையோ சொல்லதுடிப்பது போல, இந்த படம் கடவுள் கோட்பா ட்டை கேள்விக்குறி ஆக்கிவிடும் போல தோன்றுகின்றது.

                                                                 நான் கடவுள், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட் டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்களை எழுதி யுள்ளார். அவரது ஏழாவது உலகம் எனும் புதினத்தைத் தழுவி திரைக் கதை பின்னப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். 

                                                          படத்தில் ஒரு பக்கம் பாலாவும், மறுபக்கம் இசைஞானி இளையராஜாவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்கள். ஒரு காட்சியை பாலா என்ன நினைத்து உருவாக்கினாரோ, அந்த எண்ண த்தை தன் இசையால் அந்தக் காட்சிக்குக் கொடுத்திருக்கிறார் இளைய ராஜா. சிவோஹம்..., பிச்சைப் பாத்திரம்... பாடல்கள் கையாளப்பட்டிரு க்கும் விதம், ஒரு தமிழனாய் நம் கலைஞர்களை எண்ணி பெருமைப்பட வைக்கிறது. அந்நிய விருதுகள் கொடுத்துதான் இளையராஜா என்ற இந்த மகா கலைஞனை மகத்துவப்படுத்த வேண்டுமென்பதில்லை... யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த தேசத்தின் ஒப்பற்ற கோஹினூர் வைரம் நமது இசைஞானி. நாம் ரசித்து, நாம் கேட்டு மகிழ் ந்த அவரது பாடல்களுக்கும் இசைக்கும் நாமே கொடுப்போம் அப்படி யொரு உயர்ந்த விருதினை! நீங்களும் இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்


செவ்வாய், 25 ஜூன், 2019

பாட்டும் பதமும் 101காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்


"காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்  பேசாலைதாஸ்
                                   1979 ஆண்டில் வெளிவந்த கல்யணராமன் படத்தில் கமலஹாசன் அற்புதமாக நடித்திருந்தார், இந்த பாடலை பஞ்சு அருணாசலம் எழுத, இளையராஜா இசையில், மலேசிய வாசுதேவன் பாடியிருந்தார். இந்த பாடலை ஆஹா ஓகோ சொல்லும் அளவுக்கு இல்லை, ஆனாலும் இந்த பாடலில் வரும் கோரஸ் இசை அதாங்கா,,, ஆஹா ஹாஆ,,, இந்த முன்னணி இசையும் அதைத்தொடர்ந்து வரும் சரணத்திற்கான இசை மெட்டையும் கேட்டால் எனக்கு என்னவோ 1971 வெளிவந்த யூரியா ஹீப்  Uriah Heep என்ற ஆங்கில பாடகர் வெளியிட்ட‌ Lady In Black 1971என்ற மியூஸிக் ஆல்பத்தில் இந்த மெட்டு அப்படியே பளிச்சென்று தெரிகின்றது, எதற்கும் ஒருக்கால் இரண்டு பாட்டையும் கேட்டுவிட்டு, எனக்கு தலையாட்டினால் போதும்,,, அன்புடன் பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 100 என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்


"என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்"   பேசாலைதாஸ்


தமிழ்நாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன், ராம மூர்த்தி, கே.வீ. மகாதேவன் போன்றோர் 70கள் வரை தமிழ் சினிமாவை கோலோச்சிக்  கொண்டிருந்தார்கள்.  'சிங்கார வேலனே தேவா', 'அச்சம் என்பது மடமையடா', 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'காலங்களில் அவள் வசந்தம்',  'நான் மலரோடு தனியாக', 'ஒரு நாள் போதுமா?', போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் தமிழ் திரை உலகை புரட்டி எடுத்து பின் சற்று ஓய்ந்து இருந்த நேரம். அப்பொழுது  ஹிந்தி சினிமாவில் எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன், லக்ஷிமிகாந்த் பியாரிலால் ஆகியோர் மிகவும் அற்புதமான இசையை  தந்து கொண்டிருந்தனர். அடியேனையும் சேர்த்து  தமிழ் மக்கள் எல்லோரையும் ஹிந்தி பாட்டுக்கள் கேட்க வைத்தப்  பெருமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு.

                                    'தம்மாரோ தம்', 'மேரே சப்னோக்கி ரானே கபு', 'ஜானே ஜா டூண்டுதா ஃ பிருரஹா', 'ரூபுத்தேரா மஸ்தானா', 'மேன் ஷாயர் தோ  நஹின்' , ஓ மேரே தில் கே செயின்', மேரே தில் மேன் ஆஜ் கயா ஹை', போன்ற அற்புதமான பாடல்கள் ஹிந்தி துளியும் தெரியாத என் போன்றோரை  பரவசப்படுத்தியது நிஜம். அதிலும் என்னை அதிகமாக பரவசப்படுத்திய பாடல்,  ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கம் பிரபலமாகி வந்த காலத்தில் வெளிவந்த படம் ஹரே ராமா ஹரே கிருஸ்னா. படத்தில் ‘ஹிப்பி’யாகத்தான் ஜீனத்தும் நடித்திருந்தார். ஆஷா போன்ஸ்லேவின் போதையூட்டும் குரலில் ஜீனத் ஆடிப் பாடியிருந்த ‘தம் மேரா தம்’ பாடலுக்கு அரங்கமே எழுந்து ஆட, படம் சூப்பர்ஹிட் என்பதை முதல் காட்சியிலேயே நாம் உணர்ந்துவிடலாம்,
             
                                 தமேரே தம் பாடல் இசையும், கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில்வெளிவ்ரும், என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் என்ற பாடல் இசையும் சரியாக ஒத்துபோகின்றது என்று நான் சொல்கின்றென், நீங்கள் என்ன சொல்கின்றிர்கள்? முதலில் இரண்டு பாட்டையும் கேளுங்கள்,,, அன்புடன் பேசாலைதாஸ்

திங்கள், 24 ஜூன், 2019

பாட்டும் பதமும் 99 பூவரசம்பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு


" பூவரசம்பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு"   பேசாலைதாஸ்

                                                       கிழக்கே போகும் இரயில், இந்த திரைப்படம் பாரதிராஜா இயற்றிய ஒரு கிராமிய காதல் படம், அந்த படத்தில் இந்த பாடல் வரும், ராதிகாவின் முதல் படம் இந்த படம், மண்வாசனையை மூக்கில் ஒட்டவைக்கும் கலைத்திறன் கொண்டவர் பாரதிராஜா! பூவரசம் பூ பூத்தாச்சை என்ற பாடலை நான் கேட்கும் போதெல்லாம் எனக்கௌ ஈழத்து நாட்டர் பாடலொன்று நினைவுக்கு வந்து போவதுண்டு! அந்த ஈழத்து நாட்டர் பாடல் இதுதான்! "ஆதங்காக்கா ஆதங்காக்கா அவரைக் கண்டால் சொல்லிடுகா, மாதுளங்கன்னி மடல் விரிந்து போச்சுதென்று." 

                                                              எப்படி இந்த ஈழத்து நாட்டர் பாடலுக்கும், இளையராஜாவின் இந்த பாடலுக்கும் ஒற்றுமை வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அதைவிட இன்னொரு சமாச்சாரமும் இந்த பாடலில் சேர்ந்துள்ளது, உண்மையில் இந்த பாடலுக்கு இளையராஜா அமைத்த ட்யூன் அவருடைய சொந்த ட்யூன் அல்ல என்பது எனது வாதம், 1971 இல் ராஜ்கபூர் நடித்த Door Ka Rahi என்ற திரைப்படத்தில் வரும் பாடலின் இராகத்தை இளையராஜா 1986 இல் வெளிவந்த கிழக்கே போகும் இரல் படத்துக்கு சேர்த்துள்ளார். நான் இந்த இரண்டு பாடலையும் உங்களுக்கு தருகின்றேன் நீங்களே நான் சொல்வதை ஒத்துக்கொள்வீர்கள்,,, அன்புடன் பேசாலைதாஸ்

புதன், 19 ஜூன், 2019

பாட்டும் பதமும் 97 "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்" பேசாலைதாஸ்

"இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்" பேசாலைதாஸ்

                 வாழ்க்கை மாறுபடுவதேயன்றி, அது அழிக்கப்படுவ தில்லை இது பைபிள் வசனம்! மானிடர் ஆன்மா மரணமெ ய்தாது, அது மறுபடியும் பிறந்திருக்கும், இது கீதாஉபதேசம்! ஆக மொத்தத்தில், மரணம் என்பது மாறுபடுகின்ற ஒரு புது அனுபவம். அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதுவே இப் போதுள்ள கேள்வி? இறப்புக்கு பின் உள்ள அனுபவம் பேரி ன்பம் என்று ஞானிகள் சொல்கின்றார்கள். அந்த பேரின்ப த்தை அடைந்து கொள்ள இவ்வுலகில் நாம் முயற்ச்சிக்க வேண்டும். அவரவர்கள் இவ்வுலகத்தில் எதை விதைக்கின்றா ர்களோ அதையே அறுவடையாக, வாழ்வு மாறுபடுகின்ற போது, பெற்றுக்கொள்வார்கள்! அன்பை விதைத்து, அன்பாக வாழ்ந்து முடித்தால்,,,,! வாழ்வு மாறுபடுகின்றபோது அந்த ஆனந்த அனுபவத்தை ஆன்மா பெற்றுக்கொள்ளும், காரனம் இறப்புக்கு பின்னர் ஆன்மா மட்டுமே இருக்கும்.

                                   நாம் இறக்கும்போது புது அனுபவமாக, நாம் செய்த தர்மம், புன்னியம் இவை மட்டுமே நம்மோடு கூட வரும் இதை நாம் எண்ணிப்பார்க்க மறந்துவிடுகின்றோம், இந்த கருத்தை ஒட்டிய இன்னொரு பாடல், நீர்க்குமிழி திரைப்படத் தில், ஆடி அடங்கும் வாழ்க்கையடா, என்ற பாடலில், "இருப் போம் என்று நினைப்பவர் கண்களை, இறந்தவனல்லவோ திறக்கின்றான்" என்கின்ற வரிகள், அழகாக எடுத்துக்காட்டு கின்றது.

                                      இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருப்பார் என நான் நினைத்தேன், அது தவறு, ஆலங்குடி சோமு , 1965 இல் வெளிவந்த இரவும் பகலும் படத்திற்காக இந்த பாடலை எழுதினார். இசை அமைப்பாளர் T.R பாப்பா, இதில் என்ன விசேடம் என்றால் இந்த பாடலை நடிகர் அசோகன் தானே பாடி, தானே நடித்தும் இருந்தார், அசோகனின் மறைவு க்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இந்தபாடலை ஒலிபரப்பியது இன்னும் என் ஞாபத்தில் வருகின்றது, நீங்களும் இந்தபாடலை கேளுங்கள், அன்புடன் பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 96 எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச்சொல்லவா? பேசாலைதாஸ்


எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச்சொல்லவா?  பேசாலைதாஸ்

                                                        என் கவி ஆசான், கண்ணதாசன் சொல்லுக்குள் சிலம்பாட்டம் ஆடும் வித்தை தெரிந்தவன் என்று பலதடவை நான் எழுதி வருகின்றேன், காய் என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு ஒரு பாடல் எழுதினார், அது போல தேன் என்ற சொல்லைவைத்தும் ஒரு பாட்டை எழுதினார், வளை என்ற சொல்லைவைத்தும் ஒரு பாடல் எழுதினார் அந்த பாடல்கள் எல்லாவற்றிற்கும் இந்த வலைத்தளத்தில், ஏற்கனவே நான் பொழிப்பும், விழிப்பும் எழுதிவிட்டேன், இன்று நான் எடுத்துக் கொண்ட சொல், ஊர் என்ற சொல்! இந்த பாடலில் கவிஞர் வாழ்வின் தத்துவங்கள், வாழ்வின் வயது பருவங்கள் பற்றி அழகாக சொல்லி இருப்பார். கருவறை என்ற கருவூர் தொடங்கிய வாழ்க்கை, மண் ஊர் என்ற கல்லறை வரை முடிவடைகின்றது. இந்த பாடலில், ஒவ்வொரு வரியிலும் ஊர் என்ற சொல் இடம் பெறுகின்றது. இந்த பாடலுக்கு நான் அதிக விளக்கம் தரவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.

                                              963 இல் வெளிவந்த காட்டு ரோஜா  என்ற படத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில், கண்ணதாசனின் வரிகளில் வெளி வந்த இந்த பாடலை சீனிவாசன் பாட,இலட்ச்சிய நடிகர் எஸ்.எஸ்,ஆர் அதற்கு ஏற்றாற்போல நடிப்பார், பாடலை கேட்டுப்பாருங்கள்!  
அன்புடன் பேசாலைதாஸ்



எந்த ஊர் என்றவனே 
இருந்த ஊரைகச் சொல்லவா 
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..

உடலூரில் வாழ்ந்திருந்தேன் 
உறவூரில் மிதந்திருந்தேன் 
உடலூரில் வாழ்ந்திருந்தேன் 
உறவூரில் மிதந்திருந்தேன் 
கருவூரில் குடி புகுந்தேன் 
மன்னூரில் விழுந்துவிட்டேன் 
கருவூரில் குடி புகுந்தேன் 
மன்னூரில் விழுந்துவிட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் 
கையூரில் வளர்ந்திருந்தேன் 
காலூரில் நடந்துவந்தேன் 
காளையூர் வந்துவிட்டேன் .....

வேலூரை பார்த்துவிட்டேன் 
விடியூரில்; கலந்துவிட்டேன் 
பாலூரும் பருவம் என்று 
பட்டினத்தில் குடி புகுந்தேன் 

எந்த ஊர் என்றவனே 
இருந்த ஊரைச் சொல்லவா 
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..

காதலூர் காட்டியவள் 
காட்டூரில் விட்டுவிட்டாள் 
காதலூர் காட்டியவள் 
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் 
கடலூரில் விழுந்துவிட்டேன் 
கன்னியூர் மறந்தவுடன் 
கடலூரில் விழுந்துவிட்டேன் 

பள்ளத்தூர் தன்னில் என்னை 
பரிதவிக்க விட்டு விட்டு 
மேட்டூரில் அந்த மங்கை 
மேலேறி நின்றுகொண்டாள் 
கீழூரில் வாழ்வதற்கும் 
கிளிமொழியாள் இல்லையடா 
மேலூர் போவதற்கும் 
வேளை வரவில்லையடா 

எந்த ஊர் என்றவனே 
இருந்த ஊரைச் சொல்லவா 
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..,

சனி, 9 பிப்ரவரி, 2019

பாட்டும் பதமும் 95 "அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,," பேசாலைதாஸ்


"அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,," பேசாலைதாஸ்



                                                    நிலா என்றாலே காதல் எண்ணங்கள் மட்டுமே மிஞ்சும், எட்டுத்தொகைக்கும் எட்டாத, பத்துப்பாட்டுக்கும் பத்தாத, என் காதலை. நிலாவே உன்னிடம்  வடிக்க, தூாிகை தேடினேன்,  இறுதியில் தோற்றுப்போனேன். வெண்ணிலவே, உன்னைக் கனவு கண்டு கனவு கண்டு,  கானல் நீராகிப்போனேன்! இப்படித்தான் வெண்ணிலை வைக்க ண்டால் காதல் மனதுக்குள் குமுறிக்கொப்பளிக்கும்! 

                                                   இதற்கு மாறாக வெண்ணிலாவில் தன் துன்பம் துடைக்கும் ஒரு புறநாணூற்றுப்பாரிபாடல் உண்டு. அதனை பாரிமக ளின் பாடல் என்பார்கள், முல்லைக்கு தேர் ஈர்ந்தானே அந்த பாரியின் வழிவந்த பாரியின் புத்திரிகளான அங்கவை, சங்கவை என்ற இரு சகோதரியின் பாடல் இது! ( ரஜனி நடித்த சிவாஜி படத்தில் வரும் அங்கவை, சங்கவை அந்த நகைச்சுவை அல்ல)

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.
(புறநானூறு:112)

அற்றைத்திங்கள் (திங்கள் என்பது மாதம்) அவ்வெண்ணிலவில், எம் தந்தையோடு, எதிரிகள் வெற்றி கொள்ளமுடியாத மலைகளோ நாம் இருந்தோம், இற்றைத்திங்கள், இவ்வெண்ணிலவில் எதிரி மன்னர்களினால், எங்கள் மலைகளை இழந்தோம், தந்தையும் இழந்தோம்! எதிரிகளால் தன்னுடைய பறம்பு மலை சூறையாடப்பட்டு, தந்தை வீழ்த்தப்பட்டு, யாருமற்று அனாதைகளாக ஆக்கப்பட்ட மகள்களின் அவலக் குரலை, அவர்களின் கண்ணீரைத் தாங்கி நிற்கிறது அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடல்.

                                                                                              சங்க கால காதல் சங்கதிகளை, பாரி காலத்து அற்றை வெண்ணிலவிலே என்ற அந்த வரிகளை என் கவி ஆசான் கவிஞர் கண்ணதாசன் கையாண்டு, சங்ககால பரம்பு மலையின் காதல் உணர்வுகளை, அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,,, என்று பாடுவதன் மூலம், சங்ககால இலக்கியத்தை இலகுவாக சினிமா பாடலுக்குள் புகுத்தும் விதை தெரிந்தவன் கவிஞன் கண்ணதாசன், இனி பாடலை கேட்டு நீங்களும் நிலாவை காதலியுங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்

வெள்ளி, 8 பிப்ரவரி, 2019

பாட்டும் பதமும் 94 "சின்னக்கண்ணன் அழைக்கின்றான். ராதையை பூங்கோதையை,,,," பேசாலைதாஸ்


"சின்னக்கண்ணன் அழைக்கின்றான்.  ராதையை பூங்கோதையை,,,," பேசாலைதாஸ்

                                                நீங்கள் எல்லோரும் ஆவலோடு விரும்பிக்கேட்கும் பழைய பாடல் " ஒரு நாள் போதுமா? நான்பாட, நீ கேட்க இன்றொருநாள் போதுமா? இந்த பாடல் பாலையாவுக்காக, திருவிளையாடல் படத்தில்,  கார்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல் அது! இது மட்டுமல்ல சின்னக்கண்ணன் அழக்கின்றான் என்ற பிர்பல்யமான பாடலை பாடியவரும் இவரே தான்!  

                                                கவிக்குயில் படத்தில் இடம் பெரும் இப்பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா 1945ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சந்திரகுப்தம் என்னும் இடத்தில், பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தவர். வயலின், மிருதங்கம், கஞ்சிரா, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசி க்கும் திறன் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருதுகளை பெற்றவர். சின்னக்கண்ணன் அழைக்கி ன்றான் என்ற பாடலை இங்கு நான் பதிவு செய்வதற்கு ஒரு காரணம் உண்டு. 

                                              பாலமுரளி கிருஷ்ணாவுக்கு கர்நாடக மாநிலத்தில் ஆஸ்தான பாடகருக்கான‌ விருது கிடைத்தவுடன், அவரை யாழ் பல்கலை க்கழகத்தின் நுன்கலைப்பீடம் அழைத்து கெளரவித்திருந்தது, இராமநா தன் மண்டபத்தில் அவருக்கான வரவேற்பு நடைபெற்றது, அதில் அவர் கர்நாடக இசை பற்றிய ஒரு விரிவுரை நடத்தினார். நிகழ்ச்சியின் முடி வில், அவரிடம் சின்னக்கண்ணன் அழக்கின்றான் என்ற பாடலை எங்க ளுக்காக பாடமுடியுமா? என்று அச‌ட்டுத்துணிவுடன் சபையில் எழுந்து நின்று கேட்டேன், என் கோரிக்கைக்கு பலத்தகரஹோசம்! 

                                            இசைக்கருவிகள் இல்லை, ஹார்மோனியம் மட்டுமே இருந்தது, அதுவும் கர்நாடக இசை பற்றிய அவரது விரிவுரைக்காக அங்கு மேடையில் இருந்தது, சபையில் கரகோஷம் நின்றபாடில்லை, ஒரு நுன் கலைப்பீட இசை மாணவன் அந்த ஹார்மோனியத்தில் சின்னக் கண் ணன் அழைக்கின்றான் என்ற பாடலை மெதுவாக இசைக்க, கரஹோச த்தை சமாளிக்க பாலமுரளி கிருஸ்ணா அவர்கள் பாடத்தொடங்கினார்!

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

பாட்டும் பதமும் 93 "வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்" பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 93
"வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்" பேசாலைதாஸ்

                                                     இந்த பதிவினிலே கானா பாடல் பற்றி, உங்களோடு சிலாகிக்கலாம் என நினைக்கின்றேன். ஆப்பிரிக்க கறுப்பினச் சகோதரர்களால் இசைக்கப்பட்டு அமெரிக்க கறுப்பினச் சகோதரர்களால் வளர்க்கப்பட்ட ராப் இசையும் எளிய மக்களின் இசை வடிவமே! கண்டங்கள் கடந்து காலம் கடந்து இன்று உலகம் முழுவதும் பல்வேறு மொழிபேசும் மக்களால் பல்வேறு மொழிகளில் இசைக்கப்படுகிறது ராப். திரையிலும் தனியிசைச் சந்தையிலும் ராப் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ராப் இசையை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நம்மிடம் ராப் இசையை விஞ்சக்கூடிய ஒரு மக்களின் இசை இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதுதான் கானா. 


                                              வடசென்னையில் வாழும் உழைக்கும் மக்களால், ஒடுக்கப்பட்ட மக்களின் வட்டார வாழ்வியல் வழியே பிறந்ததுதான் கானா. மரணம் வருந்துவதற்கு மட்டுமே அன்று, வாழ்ந்து முடிந்து மரணத்தை ருசித்துவிட்ட மனிதனின் சாதனைகளைப் பெருமையுடன் எண்ணிப்பார்க்கும் ஒன்று என மரணத்தை ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கும் இசையாக விளங்கிவந்த கானா இன்று தன் எல்லைகளை விரித்துக்கொண்டிருக்கிறது. இன்று மரணத்துக்கு மட்டுமே இசைக்கப்படுவதில்லை கானா. காதல், கலவி, கடல் வாழ்க்கை, அரசியல் தொடங்கி விழிப்புணர்வுக் கருத்துகள்வரை கானாவில் துள்ளும் கருத்துகள் ஏராளம்.

                                                            மொழியுடன் மல்லுக்கட்டாமல் எளிய எதுகையும் மோனையும் வால்பிடிக்க, வரிகளின் இறுதிச்சொற்களில் ஒலி ஒத்திசைவைக்கொண்டுவரும், இயைபுத்தொடையும் கானா பாடல்களின் தாள நயத்தைத் தாங்கிப்பிடிக்கும் அம்சங்கள். வாழும் வட்டாரத்தில் புழங்கும் எளிய சொற்களைக் கொண்டே இந்தப் பாடல்களை இட்டுக்கட்டி எழுதிவிட ஒரு கானா பாடகனால் இயலும். கானா பாடகன் வெறும் பாடகன் மட்டுமே அல்ல, அவன் ஒரு வகையில் கம்போஸர் இசை அமைப்பாளன், இன்னொரு வகையில் கவிஞன். கானா பாடல்களில் இருக்கும் இந்த எளிய மொழி விளையாட்டு இன்று உருவானது அல்ல…கர்ண பரம்பறையாக நமது செவிமடல்களுக்குள் புத்தப்பட்ட எளிய இசை வடிவமே கானா இசை!

                                                      நந்தவனத்திலோர் ஆண்டி - அவன், நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி - போன்ற பழந்தமிழ் பாடல்களிலேயே மக்கள் கவிஞர்களால் எழுதப்பட்டு இசைக்கப்பட்டிருக்கிறது. கானாவின் இந்த எளிய வெகுஜனத் தன்மையைத் திரையிசை வழியே தமிழ் மக்களிடம் பரவலாக்கிய பெருமை இசையமைப்பாளர் தேவாவைச் சேரும் அந்த தேவா சத்தியம்மா நான் அல்ல‌. ஆனால் கானா உலக நாதன் பாடி, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற.. ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்.. சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்’ - என்ற பாடல் கானாவுக்கு இன்றுவரை தமிழ் சினிமாவில் தனியிடத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. இந்தப் பாடலை உலகநாதன் இசைக்காத நாடே இல்லை என்று கூறலாம். -அவருக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த பல கானா கலைஞர்கள் இன்று திரையில் செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். ராப் இசையைவிட மேலான சொல்லிசை கானா என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனாலும், ராப் இசையைப் போல் உலகின் காதுகளில் அதை நம்மால் ஒலிக்கச்செய்ய முடியவில்லையே! என்பது என் தனிப்பட்ட கவலை, ராப் இசையைப் போல அது சர்வதேசப்படுத்தப்படவில்லை என்பதுதான் இதற்கு முதன்மையான காரணம். அன்புடன் பேசாலைதாஸ்

வியாழன், 17 ஜனவரி, 2019

பாட்டும் பதமும் 92 " வளையோசை கல கலவென கவிதைகள் படிக்குது, குலு குலு தென்றல் காற்றும் வீசுது"! பேசாலைதாஸ்


" வளையோசை கல கலவென கவிதைகள் படிக்குது, குலு குலு தென்றல் காற்றும் வீசுது"! பேசாலைதாஸ்
                                                               இந்த பாடல் கமலஹாசன் நடித்த சத்தியா படத்தில் வருகின்றது, இசை இளைய ராஜா, பாடியவர்கள் லதா மங்கேஸ் கார், எஸ்.பி பாடல்வரிகளுக்கு சொந்தகாரன் என் கவி ஆசான் கண்ண தாசன் இல்லை, வாலி அவர்கள். கலஹாசனின் பிரத்தியேக விருப்பதிற் காக இளையராஜா இசை அமைத்தது, இசைஞானி பாடல்களுக்கு மட்டும் இசை அமைப்பது இல்லை, இசைக்கருவிகளின் இசை நுட்பத்தின் விஸ் தீரனம், அதன் விலாசம் வெளிப்படவேண்டும், இசை இரசிகர்க‌ளை சென் றடையவேண்டும் என்ற நோக்கிலும் அசைவடித்துள்ளார். 

                                                     அவ்வாறு அவர் இசை வடித்ததில், How to Name it? மற்றது Nothing but Wind! என்ற இரு இசை அமைப்பு கோர்வைகளும் தனியே இசைக்கருவிகளுக்கான இசைவடிவங்களே! Nothing but Wind என்ற இசைக்கோர்வினிலே , ஹரிப்ரசாத் செளத்ரியின் புல்லாங்குழல் வாசிப் புக்காக் இளையராஜா வடிவமைத்த ஒரு சிறு துண்டின் புல்லாங்குழலின் விஸ்தாரணமே இந்த பாடல். 

                                                    இந்த பாடலுக்கு வரி சேர்க்க, வாலியை அழைத்த போது, வெறும் இசை அலையாக இருக்கும் இசை சப்தத்திற்கு ஏற்றாற் போல, இரட்டைக்கிழவி வழக்கில், அதாவது தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வந்தால் அது இரட்டைக்கிழவி என் பார்கள், அதுபோலவே புகழவும், இகழவும் ஒரே சொல்லை பாவித்தால் அது உயர் நவிற்ச்சி அணிச்சொல், அல்லது இரட்டைப்போலி என்பார் கள், ஏன் இப்பொழுது உங்களுக்கு தொல்காப்பியரின் தொல்லைகள், நேரடியாக இசைக்கு வருகின்றேன்.  

                                                                புல்லாங்குழலின் இசைக்கு ஏற்றாற்போல வாலியின் சொல் ஆலாபணைகள் பாடலுக்கு மெருகூட்டுகின் றது, கல கல, குளு குளு, பட பட, சிலு சிலு இந்த சொற்கள் எல்லாம் மந்திர சொற் கள் அல்ல, வெறும் சொற்கள்தான், நாம் அன்றாடம் பாவிக்கும் சொற் கள்தான், ஆனால் இசைக்கு ஏற்றாற்போல சொற்கள் அமைக்கும் வித் தையில் தான் ஒரு சொல் இசையின் உச்சிக்கு செல்கின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

                                              நான் இரசித்து சுவைத்த அந்தபாடலை நீங்களும் கேளுங்கள், கமலஹாசனின் இளமை, அமலாவின் தளிர் உடல் இவை களை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது, என் வாலிப காலத்தை வீணாக தொலைத்தேன் என எண்ணத்தோன்றுகின்றது, ஆகவே வாலிபரே காதல் செய்வீர், அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்! ஜன்னலை திற, காற்று வர ட்டும்! அன்புடன் பேசாலைதாஸ்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
சென் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

உன்னை காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்களோடு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்

கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

பாட்டும் பதமும் 91 "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா," பேசாலைதாஸ்


"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா,"
பேசாலைதாஸ்

                                                                    சிவாஜி கனேசன் நடித்த தியாகம் என்ற படத்தில் இடம் பெருகிறது இந்த பாடல், செளந்தராஜன் குரலில், விஸ்வ நாதன் இசையில், கண்ணதாசனின் வரிகளில் இந்தபாடல் அமைகின் றது. உயர்ந்த கருத்துக்களையும் உயர்வான இசையையும் தருவதே அருமையான பாடல்! உங்கள் கற்பனை வளத்தை விசாலமாக்கவேண் டுமா? இப்படியான பாடல்களை கேளுங்கள், இந்த பாடலிலே என் கவி ஆசான் கண்ணதாசன், பெரும் காப்பியமான இராமயணத்தின் போத னையை வெகு இலவாக புகுத்தியுள்ளார், நமது குடும்பங்களில், அன்றா டம் நடப்பது இது,

                                                               வெளியே போக வேண்டும் என்று மனைவி சொல்லி இருப்பாள். கணவன் வேண்டாம் என்று சொல்லி இருப்பான். பின் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு பின், சரி வா என்று கணவன் மனை வியை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான். போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்..பணப் பை தொலைந்து இருக்கலாம்,  அல் லது கல் தடுக்கி கீழே விழுந்து அடி பட்டிருக்கலாம்... உடனே கணவன் மனைவியை பார்த்து " எல்லாம் உன்னால் தான்...நான் அப்பவே சொன்னேன்...பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று...கேட்டாத் தானே" மனைவி செய்யாத தவறுக்கு அவளை கணவன் திட்டுவதை பார்த்து இருக்கிறோம்.

                                                                       இந்த மாதிரி சம்பவங்கள் வீட்டில் மட்டும் அல்ல, அலுவலகத்தில் கூட நடக்கலாம். ஏதோ ஒரு முடிவு எடுத்து, அது தவறாகப் போனால் யாரையாவது  பிடித்து பலி கடாவாக ஆக்கி விடுவா ர்கள். நடந்த தவறுக்கு யாருமே காரணமாய் இருக்க மாட்டார்கள். இரு ந்தாலும் வரும் கோபத்தில் யாரையாவது குறை கூறுவது என்பது மனித இயல்பு.
                                                                     இதே போல ஒரு சம்பவம் இராமாயணத் தில் நடக்கின்றது, இராமனின் மணி முடியை பறித்து அவனை காட்டுக்கு போகச் சொல்லி விட்டார்கள் . இலக்குவனுக்கு அடங்காத கோபம். விதி க்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி,,, என்று புறப்பட்டான். அவனை தடுத்து, இராமன் சமாதனம் கூறுகிறான். தவறு நடந்தது என்றே கொண்டாலும் அதற்க்கு யாரும் காரணம் இல்லை, நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றம் அன்று.. மழை பொழியாத இயற்கையின் குற்றம். நான் கானகம் போவதற்கு காரணம் தசரதன் காரணம் இல்லை, கைகேயி காரணம் இல்லை, பரதன் காரணம் இல்லை...விதியின் பிழை என்று கூறுகிறான்.

                                                                    இராமர் இடத்தில் பேசாலைதாஸோ அல்லது நீங்களோ இருந்திருந்தால்  தசரதனை குறை கூறி இருப்போம், அல்லது கைகேயியை அல்லது பரதனை குறை கூறி இருப்போம்.. அவர் கள் மேல் கோபம் கொண்டு இருப்போம்.. கோபம் வெறுப்பை தந்திரு க்கும். இராமன் அவர்கள் யாருமே தவறு செய்யவில்லை. எல்லாம் விதிப் பயன் என்று நினைத்தான். எனவே அவர்கள் மேல் அவனுக்கு கோபம் வரவில்லை. இதை கம்பர் தன் செய்யுளில் அழகாக கூறுவார்.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?'  என்றான்.
                                                                 கம்பர் நான்கு வரிகளில் விளக்கிய பெரும் போதனையை என் ஆசான் மிக எளிதாக இரண்டே வரிகளில் எழுதி னான். அது இதுதான் "நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை. விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா"  பார்த்தீர்களா, உய ர்வான கருத்தை கணதாசன் வெகு இலகுவாக பாடலிலே புகுத்தினார் என்று, நீங்களும் நானும் கற்றுக்கொள்ளவேண்டிய மிக தேவையான பாடம் இது! அடுத்த முறை உங்கள் மனதிற்கு பிடிக்காத ஏதாவது நடந் தால், யாரை குறை கூறலாம் என்று ஆள் தேடாதீர்கள் .... யாரும் தவறே கூட செய்திருந்தாலும்...அதிலும் குறிப்பாக உங்கள் குடும்பத்தில் நடக் கும் வருத்தமான சம்பவங்களுக்கு   யாரையும் பழி சொல்லாதீர்கள்....
நினைத்திருந்தால் இராமன் யாரையாவது பழி சொல்லி இருக்க லாம்...அப்படி செய்யவில்லை....அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

படம் - தியாகம்
இசை : இளையராஜா
பாடியவர் - T.M.சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்




ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...