திங்கள், 24 ஜூன், 2019
பாட்டும் பதமும் 99 பூவரசம்பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
" பூவரசம்பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு" பேசாலைதாஸ்
கிழக்கே போகும் இரயில், இந்த திரைப்படம் பாரதிராஜா இயற்றிய ஒரு கிராமிய காதல் படம், அந்த படத்தில் இந்த பாடல் வரும், ராதிகாவின் முதல் படம் இந்த படம், மண்வாசனையை மூக்கில் ஒட்டவைக்கும் கலைத்திறன் கொண்டவர் பாரதிராஜா! பூவரசம் பூ பூத்தாச்சை என்ற பாடலை நான் கேட்கும் போதெல்லாம் எனக்கௌ ஈழத்து நாட்டர் பாடலொன்று நினைவுக்கு வந்து போவதுண்டு! அந்த ஈழத்து நாட்டர் பாடல் இதுதான்! "ஆதங்காக்கா ஆதங்காக்கா அவரைக் கண்டால் சொல்லிடுகா, மாதுளங்கன்னி மடல் விரிந்து போச்சுதென்று."
எப்படி இந்த ஈழத்து நாட்டர் பாடலுக்கும், இளையராஜாவின் இந்த பாடலுக்கும் ஒற்றுமை வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அதைவிட இன்னொரு சமாச்சாரமும் இந்த பாடலில் சேர்ந்துள்ளது, உண்மையில் இந்த பாடலுக்கு இளையராஜா அமைத்த ட்யூன் அவருடைய சொந்த ட்யூன் அல்ல என்பது எனது வாதம், 1971 இல் ராஜ்கபூர் நடித்த Door Ka Rahi என்ற திரைப்படத்தில் வரும் பாடலின் இராகத்தை இளையராஜா 1986 இல் வெளிவந்த கிழக்கே போகும் இரல் படத்துக்கு சேர்த்துள்ளார். நான் இந்த இரண்டு பாடலையும் உங்களுக்கு தருகின்றேன் நீங்களே நான் சொல்வதை ஒத்துக்கொள்வீர்கள்,,, அன்புடன் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக