வெள்ளி, 8 பிப்ரவரி, 2019
பாட்டும் பதமும் 94 "சின்னக்கண்ணன் அழைக்கின்றான். ராதையை பூங்கோதையை,,,," பேசாலைதாஸ்
"சின்னக்கண்ணன் அழைக்கின்றான். ராதையை பூங்கோதையை,,,," பேசாலைதாஸ்
நீங்கள் எல்லோரும் ஆவலோடு விரும்பிக்கேட்கும் பழைய பாடல் " ஒரு நாள் போதுமா? நான்பாட, நீ கேட்க இன்றொருநாள் போதுமா? இந்த பாடல் பாலையாவுக்காக, திருவிளையாடல் படத்தில், கார்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல் அது! இது மட்டுமல்ல சின்னக்கண்ணன் அழக்கின்றான் என்ற பிர்பல்யமான பாடலை பாடியவரும் இவரே தான்!
கவிக்குயில் படத்தில் இடம் பெரும் இப்பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா 1945ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சந்திரகுப்தம் என்னும் இடத்தில், பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தவர். வயலின், மிருதங்கம், கஞ்சிரா, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசி க்கும் திறன் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருதுகளை பெற்றவர். சின்னக்கண்ணன் அழைக்கி ன்றான் என்ற பாடலை இங்கு நான் பதிவு செய்வதற்கு ஒரு காரணம் உண்டு.
பாலமுரளி கிருஷ்ணாவுக்கு கர்நாடக மாநிலத்தில் ஆஸ்தான பாடகருக்கான விருது கிடைத்தவுடன், அவரை யாழ் பல்கலை க்கழகத்தின் நுன்கலைப்பீடம் அழைத்து கெளரவித்திருந்தது, இராமநா தன் மண்டபத்தில் அவருக்கான வரவேற்பு நடைபெற்றது, அதில் அவர் கர்நாடக இசை பற்றிய ஒரு விரிவுரை நடத்தினார். நிகழ்ச்சியின் முடி வில், அவரிடம் சின்னக்கண்ணன் அழக்கின்றான் என்ற பாடலை எங்க ளுக்காக பாடமுடியுமா? என்று அசட்டுத்துணிவுடன் சபையில் எழுந்து நின்று கேட்டேன், என் கோரிக்கைக்கு பலத்தகரஹோசம்!
இசைக்கருவிகள் இல்லை, ஹார்மோனியம் மட்டுமே இருந்தது, அதுவும் கர்நாடக இசை பற்றிய அவரது விரிவுரைக்காக அங்கு மேடையில் இருந்தது, சபையில் கரகோஷம் நின்றபாடில்லை, ஒரு நுன் கலைப்பீட இசை மாணவன் அந்த ஹார்மோனியத்தில் சின்னக் கண் ணன் அழைக்கின்றான் என்ற பாடலை மெதுவாக இசைக்க, கரஹோச த்தை சமாளிக்க பாலமுரளி கிருஸ்ணா அவர்கள் பாடத்தொடங்கினார்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக