வியாழன், 17 ஜனவரி, 2019

பாட்டும் பதமும் 92 " வளையோசை கல கலவென கவிதைகள் படிக்குது, குலு குலு தென்றல் காற்றும் வீசுது"! பேசாலைதாஸ்


" வளையோசை கல கலவென கவிதைகள் படிக்குது, குலு குலு தென்றல் காற்றும் வீசுது"! பேசாலைதாஸ்
                                                               இந்த பாடல் கமலஹாசன் நடித்த சத்தியா படத்தில் வருகின்றது, இசை இளைய ராஜா, பாடியவர்கள் லதா மங்கேஸ் கார், எஸ்.பி பாடல்வரிகளுக்கு சொந்தகாரன் என் கவி ஆசான் கண்ண தாசன் இல்லை, வாலி அவர்கள். கலஹாசனின் பிரத்தியேக விருப்பதிற் காக இளையராஜா இசை அமைத்தது, இசைஞானி பாடல்களுக்கு மட்டும் இசை அமைப்பது இல்லை, இசைக்கருவிகளின் இசை நுட்பத்தின் விஸ் தீரனம், அதன் விலாசம் வெளிப்படவேண்டும், இசை இரசிகர்க‌ளை சென் றடையவேண்டும் என்ற நோக்கிலும் அசைவடித்துள்ளார். 

                                                     அவ்வாறு அவர் இசை வடித்ததில், How to Name it? மற்றது Nothing but Wind! என்ற இரு இசை அமைப்பு கோர்வைகளும் தனியே இசைக்கருவிகளுக்கான இசைவடிவங்களே! Nothing but Wind என்ற இசைக்கோர்வினிலே , ஹரிப்ரசாத் செளத்ரியின் புல்லாங்குழல் வாசிப் புக்காக் இளையராஜா வடிவமைத்த ஒரு சிறு துண்டின் புல்லாங்குழலின் விஸ்தாரணமே இந்த பாடல். 

                                                    இந்த பாடலுக்கு வரி சேர்க்க, வாலியை அழைத்த போது, வெறும் இசை அலையாக இருக்கும் இசை சப்தத்திற்கு ஏற்றாற் போல, இரட்டைக்கிழவி வழக்கில், அதாவது தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வந்தால் அது இரட்டைக்கிழவி என் பார்கள், அதுபோலவே புகழவும், இகழவும் ஒரே சொல்லை பாவித்தால் அது உயர் நவிற்ச்சி அணிச்சொல், அல்லது இரட்டைப்போலி என்பார் கள், ஏன் இப்பொழுது உங்களுக்கு தொல்காப்பியரின் தொல்லைகள், நேரடியாக இசைக்கு வருகின்றேன்.  

                                                                புல்லாங்குழலின் இசைக்கு ஏற்றாற்போல வாலியின் சொல் ஆலாபணைகள் பாடலுக்கு மெருகூட்டுகின் றது, கல கல, குளு குளு, பட பட, சிலு சிலு இந்த சொற்கள் எல்லாம் மந்திர சொற் கள் அல்ல, வெறும் சொற்கள்தான், நாம் அன்றாடம் பாவிக்கும் சொற் கள்தான், ஆனால் இசைக்கு ஏற்றாற்போல சொற்கள் அமைக்கும் வித் தையில் தான் ஒரு சொல் இசையின் உச்சிக்கு செல்கின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து. 

                                              நான் இரசித்து சுவைத்த அந்தபாடலை நீங்களும் கேளுங்கள், கமலஹாசனின் இளமை, அமலாவின் தளிர் உடல் இவை களை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது, என் வாலிப காலத்தை வீணாக தொலைத்தேன் என எண்ணத்தோன்றுகின்றது, ஆகவே வாலிபரே காதல் செய்வீர், அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்! ஜன்னலை திற, காற்று வர ட்டும்! அன்புடன் பேசாலைதாஸ்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
சென் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

உன்னை காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்களோடு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்

கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...