புதன், 19 ஜூன், 2019

பாட்டும் பதமும் 97 "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்" பேசாலைதாஸ்

"இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான்" பேசாலைதாஸ்

                 வாழ்க்கை மாறுபடுவதேயன்றி, அது அழிக்கப்படுவ தில்லை இது பைபிள் வசனம்! மானிடர் ஆன்மா மரணமெ ய்தாது, அது மறுபடியும் பிறந்திருக்கும், இது கீதாஉபதேசம்! ஆக மொத்தத்தில், மரணம் என்பது மாறுபடுகின்ற ஒரு புது அனுபவம். அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்பதுவே இப் போதுள்ள கேள்வி? இறப்புக்கு பின் உள்ள அனுபவம் பேரி ன்பம் என்று ஞானிகள் சொல்கின்றார்கள். அந்த பேரின்ப த்தை அடைந்து கொள்ள இவ்வுலகில் நாம் முயற்ச்சிக்க வேண்டும். அவரவர்கள் இவ்வுலகத்தில் எதை விதைக்கின்றா ர்களோ அதையே அறுவடையாக, வாழ்வு மாறுபடுகின்ற போது, பெற்றுக்கொள்வார்கள்! அன்பை விதைத்து, அன்பாக வாழ்ந்து முடித்தால்,,,,! வாழ்வு மாறுபடுகின்றபோது அந்த ஆனந்த அனுபவத்தை ஆன்மா பெற்றுக்கொள்ளும், காரனம் இறப்புக்கு பின்னர் ஆன்மா மட்டுமே இருக்கும்.

                                   நாம் இறக்கும்போது புது அனுபவமாக, நாம் செய்த தர்மம், புன்னியம் இவை மட்டுமே நம்மோடு கூட வரும் இதை நாம் எண்ணிப்பார்க்க மறந்துவிடுகின்றோம், இந்த கருத்தை ஒட்டிய இன்னொரு பாடல், நீர்க்குமிழி திரைப்படத் தில், ஆடி அடங்கும் வாழ்க்கையடா, என்ற பாடலில், "இருப் போம் என்று நினைப்பவர் கண்களை, இறந்தவனல்லவோ திறக்கின்றான்" என்கின்ற வரிகள், அழகாக எடுத்துக்காட்டு கின்றது.

                                      இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருப்பார் என நான் நினைத்தேன், அது தவறு, ஆலங்குடி சோமு , 1965 இல் வெளிவந்த இரவும் பகலும் படத்திற்காக இந்த பாடலை எழுதினார். இசை அமைப்பாளர் T.R பாப்பா, இதில் என்ன விசேடம் என்றால் இந்த பாடலை நடிகர் அசோகன் தானே பாடி, தானே நடித்தும் இருந்தார், அசோகனின் மறைவு க்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இந்தபாடலை ஒலிபரப்பியது இன்னும் என் ஞாபத்தில் வருகின்றது, நீங்களும் இந்தபாடலை கேளுங்கள், அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...