புதன், 19 ஜூன், 2019
பாட்டும் பதமும் 96 எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச்சொல்லவா? பேசாலைதாஸ்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச்சொல்லவா? பேசாலைதாஸ்
என் கவி ஆசான், கண்ணதாசன் சொல்லுக்குள் சிலம்பாட்டம் ஆடும் வித்தை தெரிந்தவன் என்று பலதடவை நான் எழுதி வருகின்றேன், காய் என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு ஒரு பாடல் எழுதினார், அது போல தேன் என்ற சொல்லைவைத்தும் ஒரு பாட்டை எழுதினார், வளை என்ற சொல்லைவைத்தும் ஒரு பாடல் எழுதினார் அந்த பாடல்கள் எல்லாவற்றிற்கும் இந்த வலைத்தளத்தில், ஏற்கனவே நான் பொழிப்பும், விழிப்பும் எழுதிவிட்டேன், இன்று நான் எடுத்துக் கொண்ட சொல், ஊர் என்ற சொல்! இந்த பாடலில் கவிஞர் வாழ்வின் தத்துவங்கள், வாழ்வின் வயது பருவங்கள் பற்றி அழகாக சொல்லி இருப்பார். கருவறை என்ற கருவூர் தொடங்கிய வாழ்க்கை, மண் ஊர் என்ற கல்லறை வரை முடிவடைகின்றது. இந்த பாடலில், ஒவ்வொரு வரியிலும் ஊர் என்ற சொல் இடம் பெறுகின்றது. இந்த பாடலுக்கு நான் அதிக விளக்கம் தரவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.
963 இல் வெளிவந்த காட்டு ரோஜா என்ற படத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில், கண்ணதாசனின் வரிகளில் வெளி வந்த இந்த பாடலை சீனிவாசன் பாட,இலட்ச்சிய நடிகர் எஸ்.எஸ்,ஆர் அதற்கு ஏற்றாற்போல நடிப்பார், பாடலை கேட்டுப்பாருங்கள்!
அன்புடன் பேசாலைதாஸ்
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைகச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மன்னூரில் விழுந்துவிட்டேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மன்னூரில் விழுந்துவிட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்துவந்தேன்
காளையூர் வந்துவிட்டேன் .....
வேலூரை பார்த்துவிட்டேன்
விடியூரில்; கலந்துவிட்டேன்
பாலூரும் பருவம் என்று
பட்டினத்தில் குடி புகுந்தேன்
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்
பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்றுகொண்டாள்
கீழூரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூர் போவதற்கும்
வேளை வரவில்லையடா
எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா..,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக