104 பாட்டும் பதமும் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிடான் பேசாலைதாஸ்
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சக்தி படைத்தவை அவ ரின் பாடல் வரிகளை கண்ணு மிரண்டவர்கள் பலர், அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன். கோப த்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரி கள் ! "இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடி யாது." "ஏன் ?" "கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !" "எப்படி ?" "அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லா விட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடி யாது." சொன்னார்கள் கண்ணதாசனிடம்.சென்சார் கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண் டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத் தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத் தான்." கண்ணதாசன் சொன்னார்: "நான் சரி யாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்." சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல." கண்ணதாசன் சிரித்தார் :
"இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ? கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?" சென்ஸார் திகைத்தது. ஆனாலும் ஈகோ தடுத்தது.
"இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்." கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்: "எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்" படத்தில் தான் சிவாஜி இப்படிப் பாடுவார். ஆனால் ஒரிஜி னல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்' என்ற வார்த்தைதான் இருக்கிறது. கண்ண தாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக