பாட்டும் பதமும் 93
"வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்" பேசாலைதாஸ்
இந்த பதிவினிலே கானா பாடல் பற்றி, உங்களோடு சிலாகிக்கலாம் என நினைக்கின்றேன். ஆப்பிரிக்க கறுப்பினச் சகோதரர்களால் இசைக்கப்பட்டு அமெரிக்க கறுப்பினச் சகோதரர்களால் வளர்க்கப்பட்ட ராப் இசையும் எளிய மக்களின் இசை வடிவமே! கண்டங்கள் கடந்து காலம் கடந்து இன்று உலகம் முழுவதும் பல்வேறு மொழிபேசும் மக்களால் பல்வேறு மொழிகளில் இசைக்கப்படுகிறது ராப். திரையிலும் தனியிசைச் சந்தையிலும் ராப் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ராப் இசையை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நம்மிடம் ராப் இசையை விஞ்சக்கூடிய ஒரு மக்களின் இசை இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதுதான் கானா.
வடசென்னையில் வாழும் உழைக்கும் மக்களால், ஒடுக்கப்பட்ட மக்களின் வட்டார வாழ்வியல் வழியே பிறந்ததுதான் கானா. மரணம் வருந்துவதற்கு மட்டுமே அன்று, வாழ்ந்து முடிந்து மரணத்தை ருசித்துவிட்ட மனிதனின் சாதனைகளைப் பெருமையுடன் எண்ணிப்பார்க்கும் ஒன்று என மரணத்தை ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கும் இசையாக விளங்கிவந்த கானா இன்று தன் எல்லைகளை விரித்துக்கொண்டிருக்கிறது. இன்று மரணத்துக்கு மட்டுமே இசைக்கப்படுவதில்லை கானா. காதல், கலவி, கடல் வாழ்க்கை, அரசியல் தொடங்கி விழிப்புணர்வுக் கருத்துகள்வரை கானாவில் துள்ளும் கருத்துகள் ஏராளம்.
மொழியுடன் மல்லுக்கட்டாமல் எளிய எதுகையும் மோனையும் வால்பிடிக்க, வரிகளின் இறுதிச்சொற்களில் ஒலி ஒத்திசைவைக்கொண்டுவரும், இயைபுத்தொடையும் கானா பாடல்களின் தாள நயத்தைத் தாங்கிப்பிடிக்கும் அம்சங்கள். வாழும் வட்டாரத்தில் புழங்கும் எளிய சொற்களைக் கொண்டே இந்தப் பாடல்களை இட்டுக்கட்டி எழுதிவிட ஒரு கானா பாடகனால் இயலும். கானா பாடகன் வெறும் பாடகன் மட்டுமே அல்ல, அவன் ஒரு வகையில் கம்போஸர் இசை அமைப்பாளன், இன்னொரு வகையில் கவிஞன். கானா பாடல்களில் இருக்கும் இந்த எளிய மொழி விளையாட்டு இன்று உருவானது அல்ல…கர்ண பரம்பறையாக நமது செவிமடல்களுக்குள் புத்தப்பட்ட எளிய இசை வடிவமே கானா இசை!
நந்தவனத்திலோர் ஆண்டி - அவன், நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி - போன்ற பழந்தமிழ் பாடல்களிலேயே மக்கள் கவிஞர்களால் எழுதப்பட்டு இசைக்கப்பட்டிருக்கிறது. கானாவின் இந்த எளிய வெகுஜனத் தன்மையைத் திரையிசை வழியே தமிழ் மக்களிடம் பரவலாக்கிய பெருமை இசையமைப்பாளர் தேவாவைச் சேரும் அந்த தேவா சத்தியம்மா நான் அல்ல. ஆனால் கானா உலக நாதன் பாடி, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற.. ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்.. சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்’ - என்ற பாடல் கானாவுக்கு இன்றுவரை தமிழ் சினிமாவில் தனியிடத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. இந்தப் பாடலை உலகநாதன் இசைக்காத நாடே இல்லை என்று கூறலாம். -அவருக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த பல கானா கலைஞர்கள் இன்று திரையில் செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். ராப் இசையைவிட மேலான சொல்லிசை கானா என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனாலும், ராப் இசையைப் போல் உலகின் காதுகளில் அதை நம்மால் ஒலிக்கச்செய்ய முடியவில்லையே! என்பது என் தனிப்பட்ட கவலை, ராப் இசையைப் போல அது சர்வதேசப்படுத்தப்படவில்லை என்பதுதான் இதற்கு முதன்மையான காரணம். அன்புடன் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக