"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா,"
பேசாலைதாஸ்
சிவாஜி கனேசன் நடித்த தியாகம் என்ற படத்தில் இடம் பெருகிறது இந்த பாடல், செளந்தராஜன் குரலில், விஸ்வ நாதன் இசையில், கண்ணதாசனின் வரிகளில் இந்தபாடல் அமைகின் றது. உயர்ந்த கருத்துக்களையும் உயர்வான இசையையும் தருவதே அருமையான பாடல்! உங்கள் கற்பனை வளத்தை விசாலமாக்கவேண் டுமா? இப்படியான பாடல்களை கேளுங்கள், இந்த பாடலிலே என் கவி ஆசான் கண்ணதாசன், பெரும் காப்பியமான இராமயணத்தின் போத னையை வெகு இலவாக புகுத்தியுள்ளார், நமது குடும்பங்களில், அன்றா டம் நடப்பது இது,
வெளியே போக வேண்டும் என்று மனைவி சொல்லி இருப்பாள். கணவன் வேண்டாம் என்று சொல்லி இருப்பான். பின் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு பின், சரி வா என்று கணவன் மனை வியை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான். போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்..பணப் பை தொலைந்து இருக்கலாம், அல் லது கல் தடுக்கி கீழே விழுந்து அடி பட்டிருக்கலாம்... உடனே கணவன் மனைவியை பார்த்து " எல்லாம் உன்னால் தான்...நான் அப்பவே சொன்னேன்...பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று...கேட்டாத் தானே" மனைவி செய்யாத தவறுக்கு அவளை கணவன் திட்டுவதை பார்த்து இருக்கிறோம்.
இந்த மாதிரி சம்பவங்கள் வீட்டில் மட்டும் அல்ல, அலுவலகத்தில் கூட நடக்கலாம். ஏதோ ஒரு முடிவு எடுத்து, அது தவறாகப் போனால் யாரையாவது பிடித்து பலி கடாவாக ஆக்கி விடுவா ர்கள். நடந்த தவறுக்கு யாருமே காரணமாய் இருக்க மாட்டார்கள். இரு ந்தாலும் வரும் கோபத்தில் யாரையாவது குறை கூறுவது என்பது மனித இயல்பு.
இதே போல ஒரு சம்பவம் இராமாயணத் தில் நடக்கின்றது, இராமனின் மணி முடியை பறித்து அவனை காட்டுக்கு போகச் சொல்லி விட்டார்கள் . இலக்குவனுக்கு அடங்காத கோபம். விதி க்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி,,, என்று புறப்பட்டான். அவனை தடுத்து, இராமன் சமாதனம் கூறுகிறான். தவறு நடந்தது என்றே கொண்டாலும் அதற்க்கு யாரும் காரணம் இல்லை, நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றம் அன்று.. மழை பொழியாத இயற்கையின் குற்றம். நான் கானகம் போவதற்கு காரணம் தசரதன் காரணம் இல்லை, கைகேயி காரணம் இல்லை, பரதன் காரணம் இல்லை...விதியின் பிழை என்று கூறுகிறான்.
இராமர் இடத்தில் பேசாலைதாஸோ அல்லது நீங்களோ இருந்திருந்தால் தசரதனை குறை கூறி இருப்போம், அல்லது கைகேயியை அல்லது பரதனை குறை கூறி இருப்போம்.. அவர் கள் மேல் கோபம் கொண்டு இருப்போம்.. கோபம் வெறுப்பை தந்திரு க்கும். இராமன் அவர்கள் யாருமே தவறு செய்யவில்லை. எல்லாம் விதிப் பயன் என்று நினைத்தான். எனவே அவர்கள் மேல் அவனுக்கு கோபம் வரவில்லை. இதை கம்பர் தன் செய்யுளில் அழகாக கூறுவார்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
கம்பர் நான்கு வரிகளில் விளக்கிய பெரும் போதனையை என் ஆசான் மிக எளிதாக இரண்டே வரிகளில் எழுதி னான். அது இதுதான் "நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை. விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா" பார்த்தீர்களா, உய ர்வான கருத்தை கணதாசன் வெகு இலகுவாக பாடலிலே புகுத்தினார் என்று, நீங்களும் நானும் கற்றுக்கொள்ளவேண்டிய மிக தேவையான பாடம் இது! அடுத்த முறை உங்கள் மனதிற்கு பிடிக்காத ஏதாவது நடந் தால், யாரை குறை கூறலாம் என்று ஆள் தேடாதீர்கள் .... யாரும் தவறே கூட செய்திருந்தாலும்...அதிலும் குறிப்பாக உங்கள் குடும்பத்தில் நடக் கும் வருத்தமான சம்பவங்களுக்கு யாரையும் பழி சொல்லாதீர்கள்....
நினைத்திருந்தால் இராமன் யாரையாவது பழி சொல்லி இருக்க லாம்...அப்படி செய்யவில்லை....அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
படம் - தியாகம்
இசை : இளையராஜா
பாடியவர் - T.M.சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக