சனி, 28 டிசம்பர், 2019

105 பாட்டும் பதமும் "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது."

105 பாட்டும் பதமும்  
"பாலிருக்கும் பழமிருக்கும் பசியி ருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது." பேசாலைதாஸ்


                                             நாம் எல்லோரும் விரும்பிக்   கேட்க்கும் பாடல் இது, ஆனால் கவிஞர் அவர்க ளுக்கு இந்தப்பாடலில் கூட பிரச்சனை எழுந்தது  சென்ஸார் சீறியது. "அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?" அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?


"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது வேதம் செய்த குருவை கூட விடுவதி ல்லையே." 


இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள். இப் போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் : "என் னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமி த்திரரையே காதல் விடவில்லையே ? அதைத் தானே நான் எழுதி இருக்கிறேன்? என்ன ஆனா லும் சரி . எவர் சொன்னாலும் சரி . இதை நான் மாற்ற மாட் டேன்."


                                    இப்போது படக் குழுவினர் கெஞ்   சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவி ஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?" வேறு வழியின்றி வேத வரிகள் மாறின :


"வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது மேகம் செய்த உருவம் போல மறைவதி ல்லையே."


                                                     படமும் வெற்றிகண்டது பாடல்களும் ஹிட் ஆனது. இப்படி அனுபவ ங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒரு முறை இப்படி எழுதி இருந்தார் அவர் : "நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய் துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனேன்.” -கண்ணதாசன்

                                                                    அடுத்த பாடலில் சந்திக்கும் வரை   அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...