"என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்" பேசாலைதாஸ்
தமிழ்நாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன், ராம மூர்த்தி, கே.வீ. மகாதேவன் போன்றோர் 70கள் வரை தமிழ் சினிமாவை கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். 'சிங்கார வேலனே தேவா', 'அச்சம் என்பது மடமையடா', 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'காலங்களில் அவள் வசந்தம்', 'நான் மலரோடு தனியாக', 'ஒரு நாள் போதுமா?', போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் தமிழ் திரை உலகை புரட்டி எடுத்து பின் சற்று ஓய்ந்து இருந்த நேரம். அப்பொழுது ஹிந்தி சினிமாவில் எஸ்.டி. பர்மன், ஆர்.டி. பர்மன், லக்ஷிமிகாந்த் பியாரிலால் ஆகியோர் மிகவும் அற்புதமான இசையை தந்து கொண்டிருந்தனர். அடியேனையும் சேர்த்து தமிழ் மக்கள் எல்லோரையும் ஹிந்தி பாட்டுக்கள் கேட்க வைத்தப் பெருமை அவர்களுக்கு நிச்சயம் உண்டு.
'தம்மாரோ தம்', 'மேரே சப்னோக்கி ரானே கபு', 'ஜானே ஜா டூண்டுதா ஃ பிருரஹா', 'ரூபுத்தேரா மஸ்தானா', 'மேன் ஷாயர் தோ நஹின்' , ஓ மேரே தில் கே செயின்', மேரே தில் மேன் ஆஜ் கயா ஹை', போன்ற அற்புதமான பாடல்கள் ஹிந்தி துளியும் தெரியாத என் போன்றோரை பரவசப்படுத்தியது நிஜம். அதிலும் என்னை அதிகமாக பரவசப்படுத்திய பாடல், ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கம் பிரபலமாகி வந்த காலத்தில் வெளிவந்த படம் ஹரே ராமா ஹரே கிருஸ்னா. படத்தில் ‘ஹிப்பி’யாகத்தான் ஜீனத்தும் நடித்திருந்தார். ஆஷா போன்ஸ்லேவின் போதையூட்டும் குரலில் ஜீனத் ஆடிப் பாடியிருந்த ‘தம் மேரா தம்’ பாடலுக்கு அரங்கமே எழுந்து ஆட, படம் சூப்பர்ஹிட் என்பதை முதல் காட்சியிலேயே நாம் உணர்ந்துவிடலாம்,
தமேரே தம் பாடல் இசையும், கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில்வெளிவ்ரும், என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் என்ற பாடல் இசையும் சரியாக ஒத்துபோகின்றது என்று நான் சொல்கின்றென், நீங்கள் என்ன சொல்கின்றிர்கள்? முதலில் இரண்டு பாட்டையும் கேளுங்கள்,,, அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக