சனி, 30 ஜூன், 2018

பாட்டும் பதமும் 59 துனிந்த பின் மனமே துயரங்கொள்ளாதே

"துனிந்த பின் மனமே துயரங்கொள்ளாதே சோகம் பொல்லாதே " பேசாலைதாஸ்

                                                         தேவதாஸை காதலிப்பவர்கள், நான் என்னைச் சொல்லவில்லை, தேவதாஸ் திரைப்படத்தையும், தேவதாஸ் நாவலையும் இன்றும் கூட சிலர் ஆவலாக தேடிப்பார்த்து, வாசித்து மகிழ்கின்றார்கள். அப்படி என்னதான் இருக்கின்றது அதில்? இருக்கின்றது என் இரசிகர்களே, தேவதாஸ் இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல் களிலும் தேவதாஸை பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் திரைப்படம் பல மொழிகளில், பல நடிகர்களால் நடிக்கப்பட்டுள்ளது.

                                            நாகேஸ்வரராவ் நடித்த தமிழ், தெலுங்கு தேவதாசு. பிமல்ராயின் தேவதாஸ், திலிப்குமார் நடித்த தேவதாஸ், சஞ்சய் லீலா பன்சாலியின் தேவதாஸ், அனுராக் காஸ்யபின் தேவ் டி, மலையாள தேவதாஸ், கிருஷ்ணா நடித்த தெலுங்கு தேவதாஸ் என மாறிமாறி  படங்கள்! ஒரே கதை ஒரே கதாபாத்திரங்கள்.  பழைய தேவதாஸ் திரைப்படத்தைத் தேடி பார்க்கின்றவர்கள் இன்றுமிருக்கிறார்கள். ஆனால் தேவதாஸ் நாவலை அப்படி தேடிப்படிப்பவர்கள் குறைவே நானும் இன்னும் கூட வாசிக்கவில்லை . இவ்வளவிற்கும் இந்த நாவல் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 1917 ஆண்டு இந்த நாவல் வெளிவந்துள்ளது. ஆனால் திரைப்படமாக 1953 தான் வெளிவந் தது. முதல் காதல் திரைப்படம் என்று இதனை சொல்லலாம், பால்ய விவாக த்தை எதிர்த்தும், காதல் திருமணத்தையும் வலியுறுத்தி வெளிவந்த முதல் சமூகப்புரட்சிப்படம் தேவதாஸ்:

                                                                   நான் 1958 இல் பிறந்தேன், அந்த ஆண்டில் இனக்கலவரம் இலங்கையில் மீன்டும் வெடித்தது. எனது தகப்பன் சோக்ரா என்று அழைக்க படும் லோறன்ஸ் பீரிஸ்,  எனக்கு தேவதாஸ் என்று பெயர் இட்டார். அந்த காலத்தில், பேசாலை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்  கிறிஸ்தவ பெயர்களைத் தான் வைப்பார்கள். ஆனால் எனது தகப்பன் மாற்றி யோசிப்பவராச்சே! சோக்ரா காதலை ஆத்மபூர் வமாக நேசித்தவர். பெரும் சம்மாட்டியாரின், அக்ராசனரின் மகளை, சாதாரண சோக்ரா காதலிப்பது என்றால் முடிந்த காரியமா? வென்று காட்டினார் சோக்ரா! அவரின் வழி வந்த பிள்ளைகள் எல்லோருமே காதலில் வெற்றி கண்டு, கல்யாணம் செய்தவர்கள், சந்தோசமாக வாழ்கின்றனர் என்னை தவிர! நான் பெயருக்கு ஏற்றபடி வாழவேண் டுமே! மறுபடியும் தேவதாஸ்! பேசாலைதாஸ்.

                                                   என்னைப்பற்றிய சுய புராணம் இப்போது எதற்கு? பாட்டுக்கு வருவோம். தேவதாஸ் திரைப்படத்தில் வரும் அத்தனை பாட லும் அருமை. ஓ தேவதாஸ் என்ற பாடலும் அருமை ஆனால் நான் இன்று உங்களோடு கூட இரசிப்பது. துணிந்தபின் மனமே! என்ற பாடலைத் தான்! இந்த பாடல் கல்யாணி இராகத்தில் அமைந்துள்ளது. தமிழ் செவ்வியல் இசையில் மிக விஸ்தாரமாகப் பாடக்கூடிய ராகமாகவும் , கற்பனைக்கும் இடம் கொடுக்கக் கூடிய ராகமாகவும்  இருப்பதால் சினிமாவில் அதிக அளவில் பயன்பட்ட ராகமாகவும் இது விளங்குகிறது. தொட்ட இடம் எல்லாம் இனிப்பது என்பது இந்த ராகத்தின் சிறப்பாகும். எப்படிப் பாடினாலும் மனதை கொள்ளை கொள்ளும் ராகம் என்பதால் சினிமா இசையமைப்பாளர்கள் தன்னிகற்றற்ற வகையில் செவ்வியல் இழைகளைப் பயன்படுத்தி அழகான மெல்லிசை நெசவுகளைத் தந்திரு க்கின்றார்கள். இதுபோதும் அதிக இசை விளக்கம் தேவையில்லை என கருதுகின்றேன். இனிப்பாடலை கேளுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...