ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா.... பேசாலைதாஸ்
நான் இரசிக்கும் பழைய பாடல்களில் இதுவும் ஒன்று. மஞ்சள் மகிமை திரைப் படத்தில் இடம் பெற்ற இப்பாடலை உடுமலை நாரணகவி எழுத, கண்டசாலாவும் சுசீலாவும் பாடி இருப்பார்கள். கவிதை எழுதவேண்டும், அல்லது அதை இரசிக்கவேண்டும் என் ஏங்குபவர்கள் இந்த பாடலை ஒரு முறை சந்திக்கலாம். மத்யமாவதி ராக த்தில் அமைந்தது. இந்த பாடல். மத்யாமாவதி இராகத்தை பற்றி எனக்கு தெரிந்தை உங்களோடு பகிர ஆசைப்படுகின்றேன். கர்னாடக இசையில் மட்டுமல்ல இசைநாடகங்களிலும் ,நாட்டியங்களிலும் அதிகம் பயன்படும் ராகங்களில் இதுவும் ஒன்று.வட இந்திய இசையான ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் இதனை மதுமத் சாரங் அல்லது மத்யமாவதி சாரங் என அழைக்கின்றனர் .ஹிந்துஸ்தானிய சங்கீதத்தில் மிக விரிவாக ஆலா பனை செய்யப்படும் ராகங்களில் மத்யமாவதியும் ஒன்று. பிருந்தாவன சாரங்கா , பிருந்தாவனி போன்ற ராகங்கள் மத்யமாவதிக்கு மிக நெருக் கமானவையாக கருதப்படுகின்றன. குறிப்பாக பிருந்தாவனசாரங்கா மிக நெருக்கமான ராகமாக இருப்பதால் சில குழப்பங்களும் உண்டு என்பர்.உழவர்களின் வாழ்வைப் பிரதிபலித்த , அதில் முகிழ்த்த பள்ளு இலக்கியத்தின் முதல் இலக்கியமான முக்கூடற்பள்ளு பாடல்கள் பாடப்பட்ட ராகங்களில் மத்யமாவதி ராகமும் முதன்மையானது. உழை க்கும் மக்கள் தங்கள் உழைப்பின் களைதீரவும் , தமது துன்பம் துயரத் தைப் போக்கவுமே பாடினர்.அந்தப்பாடல்களின் சந்தக்குழிப்புகளிலி ருந்து மெருகேற்றப்பட்டு ராகங்களாகின என்பது இசை வரலாறாகும். இசையின் கதை என்பது ஓசை , ஒலியின் கதை ஆகும். இன்பமும் ஈர்ப் பும் இயைந்து தரும் இசையின் உட்கிடையாக இறுகப்பற்றியிருக்கும் ராகங்களில் அறிந்தும் அறியாமலும் மக்கள் காலங்காலமாக லயித்திரு க்கின்றார்கள். ராகங்களில் வேர்பிடித்து , மக்கள் இதயபீடங்களில் அமர்ந்த ராகங்களில் , ஈர்ப்புத் தன்மைமிக்க பாடல்களை மரபு சார்ந்தும் திரைப்படகாட்சி களுக்கு இசைந்த மெல்லிசை கானங்களாகவும் , தாம் அனுபவித்த விதங்களிலெல்லாம் சுதந்திரமாகவும் தந்து மக்களைக் கவர்ந்த திரையிசையமைப்பாளர்கள் தங்கள் இசையில் பயன்படுத்தி வெற்றி கண்ட அற்புதமான ராகங்களில் ஒன்று அருமை மத்யமாவதி !
ஊற்றிலிருந்து சுரக்கும் நீர் போல நினைவுகளை சுரக்க வைக்கும் தேன்வண்டல் பாடல்கள் தான் எத்தனை , எத்தனை ! மெல்லிசையில் ராகரசங்களால் நெஞ்சில் நிழல் பரப்பிய பாடல்கள் எத்தனை எத்தனை ! மெல்லிசை என்ற இனிமை விளக்கேற்றி திரையை ஒளிவீசச் செய்த மேதைகளின் ரசவாதம் நம்மை வியக்க வைக்கிறது. மலரிலும் மெல்லிய , தேனினும் இனிய உணர்ச்சி ததும்பும் இந்த ராகத் தை ,அதில் உட்புதைந்த இனபத்தை துழாவி துழாவி எடுத்து அதில் இன்பங்களை இழைத்து இழைத்து அதன் பெருமையை தூக்கி நிறுத் தியவர்கள் திரையிசைமைப்பாளர்களே என்பது மிகையான கூற்றல்ல!என்னடா பேசாலைதாஸ் அறுக்கின்றார் என நினைக்கின்றீர்களா? சரி சரி இனிப்பாடலைக்கேட்டு இரசியுங்கள்,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக